புதன், 25 நவம்பர், 2020
வாழ்த்துக்கள் செய்வீர் மேதகுதனை.!
சனி, 20 ஜூன், 2020
அப்பா நீங்கதான் என் நாயகன்
வெள்ளி, 19 ஜூன், 2020
அறிவின் தரவரிசை...!!
திங்கள், 15 ஜூன், 2020
புரட்சிப்பறை இன்று அமெரிக்காவில்
இதுகாண் குறிஞ்சிப்பறை;
முல்லைப்பறை; மருதப்பறை;
நெய்தற்பறை; பாலைப்பறை - எனும்
ஐந்திணையிலும் முழக்கிய
பறையிசைக் கருவியிதை
ஏழாயிரம் ஆண்டுகள் தாண்டிய
தொன்மையின் தொல்காப்பியம் சான்றுபகர்கிறது..
நம் தமிழ் பண்பாட்டு; பாரம்பரிய பறையிசையின் வீரியம் - இன்று
கறுப்பின ஒடுக்குமுறை வெற்றுமைக்கு
உறவுபூண்டு கலவரங்களால்
குருதியாற்றில் மிதக்கும் ஐக்கியமில்லா_
ஐக்கிய அமெரிக்க குடியரசு தனை
அசைத்து வருகிறது - இங்கு.!
நன்றி_
#வரிகள் ஸ்ரீ ஆரோன்
வியாழன், 11 ஜூன், 2020
அம்பேத்கர் எனும் அஞ்ஞானி
புதன், 10 ஜூன், 2020
தேசத்தின் பொருளாதாரம்.!
வரிகள் ஸ்ரீ ஆரோன்
நிசத்தில் நடந்த கதை 🎭🎭🎭🎭🎭🎭🎭🎭🎭
செவ்வாய், 9 ஜூன், 2020
👁️கண்பேசும் வார்த்தைகள்💋
புதன், 3 ஜூன், 2020
இதுவல்லவோ தாய்மை.!
ஒரு குட்டியின் கடைசிப் பிளிறல்!!
கிராமத்து கிளியோபாட்ரா
ஞாயிறு, 31 மே, 2020
எரிந்தது நூலகம் அல்ல; தமிழர் அடையாளம்!
வெள்ளி, 29 மே, 2020
ஐயன் கலாமும் ; ஆரோன் நானும் 🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀
3️⃣_கலாம் சொன்னது:_
“#அக்னி ” ஏவுகணை 1989 ஏப்ரல் 20 ல் சோதனை பார்க்க நாள் குறிக்கப்படுகிறது,
நாடே எதிர்பார்க்கும் 20 ம் தேதி கிளம்ப சில நிமிடங்கள் இருக்க தொழில்நுட்ப பிரச்சனையால் #ரத்து செய்யப்படுகிறது இதை ஊடகங்கள் கிண்டல் செய்தன.
மேலும் ஆராய்ச்சி கூடத்தில் #தோல்வியால் துவள்கிறார்கள்; ஆனால் நான் “எஸ் எல் வி முயற்சியில் நாங்கள் உருவாக்கிய செயற்கைக்கோள் கடலில் விழுந்தது ஆனால் “#அக்னி ” கண்முன்னே இருக்கிறது #முயற்சியுங்கள் “ உங்களால் முடியும் என்றேன்.
✒️விஞ்ஞானி மாத்திரமன்றோ; தெளிந்தகுருவும் ஊக்கந்தரும் ஞானியுமாய் வாழ்ந்த கலியுகத்தில்
ஒரேயொரு சாந்தசித்தாந்தி கலாம்.
2️⃣_கலாம் சொன்னது:_
மீண்டும் தூக்கம் இல்லாமல் உழைக்கிறார்கள், 1989 மே 1 அதாவது பத்து நாட்களில் குறிக்கப்படுகிறது ஆனால் கிளம்ப 10 நொடி இருக்கும் மீண்டும் ரத்து செய்யப்படுகிறது.
1️⃣_கலாம் சொன்னது:_
பின்னரும் கடுமையான முயற்சிக்கு பின் தவறுகள் களையப்பட்டு 1989 மே 22 ல் அக்னி கிளம்ப 20 நாட்களில் திட்டமிடப்படுகிறது அன்று தட்ப வெட்பநிலை சரியில்லை, புயல் அபாயம் என்று வானிலை பயமுறுத்தியது ஆனாலும் வெற்றிகரமாக “அக்னி” பாய்ந்து விடுகிறது. எங்களுடைய ஐந்து வார மன உளைச்சலை 600 நொடியில் சடாரென்று துடைத்து விட்டது.
✒️"விடாமுயற்சி மாத்திரமே
இவ் வாழ்க்கையில் வெற்றி
கொணரும் பரமரகசியம் - என்று
அறிந்திருந்தார் கலாம்."
🌱_கலாம் சொன்னது:_
பாதுகாப்பு அமைச்சர் கே சி பந்த் “கலாம்! நாளை அக்னி வெற்றியை கொண்டாட நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?” என; கேட்க அதற்கு நான் யோசித்துவிட்டு RCI ல் [Research Centre Imarat] ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட வேண்டும் என்றேன்.
✒️"செயற்கை அறிவாராய்ச்சியில்
கைதேர்ந்த கலாம்; இயற்கையிலாது செயற்கை பயன்தராது - என்று
ஆழமான நிசத்தை..
மனதில் வேரூன்றியிருந்தார்.!"
🚀_கலாம் சொன்னது:_
ஜெர்மனியின் உதவியால் தயாரித்து இருப்பதாக மற்ற நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. இது சுதேசி ஏவுகணை என்பதை யாரும் நம்பத் தயாராக இல்லை ஆனாலும் அதை பொருட்படுத்தாது நாங்கள் அடுத்த ஆராய்ச்சியில் இறங்கினோம்.
✒️"அவாமானங்கள்
ஒவ்வொன்றும் தான் கற்கும்
ஒவ்வொரு புத்தகத்திற்கு சமமாக எண்ணியிருந்தார் கலாம்
அதனாலயே அவருக்கு சக்கிப்பு சத்தியகுணமாக இருந்தது.!"
📡 _கலாம் சொன்னது:_
நான் #சோதனையில் ஈடுபட்டுகையில் வெடி விபத்து ஏற்பட்டு அதில் #தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்க படுக்கை வசதி கூட இல்லாமல் இருந்திருக்கிறேன்; இது மட்டுமல்ல நான் #விஞ்ஞானியாக ஆராய்ச்சி காலத்தில் #பொதுப் பேரூந்தில் தான் பயணித்தேன்.
✒️"கலாமின் #எழிமைதான்
தமிழ்நாட்டில் உதித்த தமிழரில்
#கக்கன் , #காமராசர் க்கு
அடுத்தவோர் தலைவராக
ஒப்பிடத் தூண்டுகிறது.!"
கலாம் என்னும் புனிதன்
வியாழன், 28 மே, 2020
தமிழீழம்
எது தமிழர்களின் மதம்?❓❓❓❓❓❓❓❓❓❓❓
சிந்தனயை தனித்துமாய் மாற்று! 👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️
கனவு நாயகன் நிசதில்
சனி, 23 மே, 2020
அரசியல் வார்த்தைகள்.!
நேர்மையின் சகாயன்/ம்.!
வெள்ளி, 22 மே, 2020
தொப்பிள்க் கொடியறுந்து
ஓநாய்களும்; ஊழை நரிகளும்.!
வியாழன், 21 மே, 2020
நீ யாராக இருக்கிறாய்?
புதன், 20 மே, 2020
அன்பு
திருவள்ளுவர் சமயம் எது?
தமிழினப் போராளியின் காதல்/லி..!
காத்திருந்தே..
என் காலங்கள் கண்ணீரோடு
கரைந்து போயின..
நேற்றிருந்த..
என் நினைவுகள்
நெஞ்சோடு மட்கிக் கலந்தாயின !
பூத்திருந்த..
நானிங்கு பூவாகவே
வாடி நிற்கிறேன் !
போய்த்திரும்ப
நீ மட்டும் ஏனோ - போகும்போதே
மறந்து போனாயோ????
#www.mytamilpoet.blogspot.com
#வரிகள் ஸ்ரீ ஆரோன்
நோபல்கண்ட கவுரவம்
இருட்டு
தேசத்திலிருந்து
உலகத்தாரால் சபிக்கப்பட்ட
ஓர் இனத்தின் விடிவுக்காய்..
சுகபோக வாழ்க்கயை தியாகம் செய்த
"கறுப்பினத்தின் பிதாமகன்";
"சமவுரிமைச் செம்மல்";
"பட்டைதீட்டிய ஒரே மனிதவைரம்";
நோபல்கண்ட கவுரவம் - அது
நெல்சன் மண்டேலா.!!
நன்றி_
#வரிகள் ஸ்ரீ ஆரோன் #www.mytamilpoet.blogspot.com
கிராமத்து விவசாயி; பங்குனி 2020_சிங்காரச் சென்னையில்.!
விடிகிறபொழுது..
சிறகடிக்கும் சத்தம்
காதுகளில் கரகோசிக்க..
என் கண்முன்னே
தேவதை அசைகிறாள் - வர்ணமாய்
அதில் சாமரம் வீசும் இளந்தென்றல்
உரசிப்போகிறது என்னை..
தேவதை அவளழகு..
காவியில்; தாய்மையின் அன்பு
வெண்மையில்; பக்தியின் அமைதி
பச்சையில்; பசுமையின் செழிப்பு
நடுவே சுழலும் சக்கரம்; நீதியில் ஏற்றத் தாழ்வற்ற சமநிலை
என்பேன்.!
அவளை கைகூப்பியபடி எழுந்தேன்
ஆனந்தக் கண்ணீர்
கன்னத்தை தழுவ;
கால்களில் செருப்பு
காதுகளை இழந்திருந்தது !
வயிற்றில் எரிச்சல் - அது
அடக்கமுடிலவில்லை..!
ஒருவிசை..
கண்களை மூடி..லேசாக விழித்தேன்.!
தலையணையாய் - ஒரு
கிழிசலான சுருக்குப்பை.!
வீதியோரதில் நான்.!
துணியால் வாயைமூடிக்கொண்டு சிலர் !!
அனாதையாய் என்தேசம் !!
நிசம் புரியாது
உதடு புலம்புகிறது
"எங்கிருக்கின்றேன் ????"
ஞானத்தில் தெளிவில்லை
அப்போது புத்தி பேசுகிறது...
"இந்த தேசத்தின் விவசாயி நீ..
வங்கிக்கடனில் மீளாது;
நிலங்களை இழந்து;
நீதிதேடிச் சென்னையில்
நீதிமன்றின் சாலையோரம்
சிலவாரங்களில் யாசகனாய்
முத்திரைபதிந்து நிற்கிறாய் - கூட
திடீர் மயானமான - நகர்.!
மயக்கத்தில் எழுந்து - நீ.!
மரணத்தில் விளிம்பில் - நான்.!
உன்பசிக்கு வயது- மூன்று நாள்
இன்றோடு" - என்றது
இன்னொரு சத்தம்.. "ஐயா"
எதிரில் காவலர் "ஐயா சாப்பிடுங்கள்"
நான் "நன்றி சாமி, எப்போது விடியும்"
பின்_கைவிரித்த அவர் "ஏழரை" - என்றார்
"ஆம்!! ஏழரைதன் என்றேன்"
புதன், 13 மே, 2020
கரும்பீனிக்ஸ் மண்டேலா.!
இருண்ட கண்டத்தில்
வெள்ளையனின் அடிமைச்சாசன
ஜனத்தினின்று ஒரு கருங்குழவியின்
ஓலம்..
கீழாபிரிக்காவில் குலுவூரில்
சோசாப்பழங்குடியின் தலைவர்
களிக்குடிலில் 18-07-1918_ல்
ஊரையே கத்தியெழுப்பியது !
இக்கர்ஜனையில் - நாளை
தம் அடிமைச்சங்கிலிகள் தெறிக்கும்
பொரியிது உண்டென்று
அன்றுயாரும் அறியிலார்..
இக் கூட்டத்தினின்று
முதற்குழந்தை - அன்று
கல்விக்கூடம் ஒதுங்கி - நான்
ரோபிசலா மண்டேலா என்றது - நில்லாமல்
லண்டன் பல்கலக்கழகம் வரைச்சென்று
பல பட்டங்களையும்; பார்சட்டந்தனையும்
கற்றொழுகிற்று..
இருந்தும் தன்தேசத்தில்
வெள்ளையர் "சகதிகடக்கவும்
கறுப்பினர் முதுகில் கால்வைப்பத்தை"
பொறுக்காத கர்ஜனைச்சீயம்
அறவழிப் போராட்டத்தில் நொடிந்தும்
அயராத மறுகணம் - தன்னை
மரபுசாரா ஆயுதப்போரில்
வலிந்து போரிடத் துணிந்தது
தன்னினத்திற்காய்..
போரியலின் ஆறுதற்பரிசு
1962_தொட்டு 27_வருசங்கள்
இராபன்தீவில் சிறைவாசம் - இருந்தும்
இனவிடுதலை நெருப்பைமுகண்டு
தொண்டையில் அடக்கிய பீனிக்ஸ்சாய்
சிறைமீண்ட நான்காம் வருசமது
1994_தனில் தென்னாபிரிக்க
குடியரசுத் தலைவராக முடிசூடியது !
ஐந்தே வருசத்தில்..
தன்லட்சியமான "கறுப்பினத்திற்க்கு
இத்தேசத்தில் சமவுரிமை" என்ற
பொறிப்பை சட்டமாக்கி - கருங்கல்லது
பட்டைதீட்டிய வைரமாய் ஜொலித்தது
நோபல்பரிசதுதானும் அவர்கரமேவி
கவுரவம் பெற்றேகியது.!!
"ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்
தன்மகனைச் சான்றோன்
எனக்கேட்ட தாயாய்" ஆபிரிக்க கண்டமே
பெருமிதந்தாங்கி ஒளிகண்டது - விசால
வான்முட்டி நின்ற தேவதாரு
05-12-2013 அன்று விதையாய்
தன்மண்ணில் வீழ்ந்தது - அன்றே
வரலாறு என்னுந்தாய் தன்கர்ப்பத்தில்
தரித்துக் கொண்டாள் - இவனை
கருமினத்தின் விடிவெள்ளியொன்று.
நன்றி_
கவிவரிகள்: ஸ்ரீ ஆரோன்
www.mytamilpoet.blogspot.com
திங்கள், 11 மே, 2020
சாதிகள் இல்லையடி பாப்பா
#சாதிகள் இல்லையடி பாப்பா
சாதிகுரோதமலம்
சிரசிலேந்தி சுமக்கும்
கீளோரவர் - தம் பொருளினின்று
உயரே பாடிலார் வாழ்நாளீறாய்.!
இன்னார்..
தத்தமகத்தே பெரியோராய் காண்கினும்;
மனிதத்தகத்தே பிரம்மகத்தி- எனுங் குறுகுலத்தோரேயாம்.!
இகுதே,
தீண்டானாய் குறுக்குநூலவதாரிகள் செப்பெழுதியுரைக்கும் அம்மாந்தர்
நல்லொழுகு மாண்பு காண்கில்
அவரீர் தெய்வதின்பால் தொழத்தகோரும்;
பூமியாள் சிரசின் முதற்பேறுமாம் கேள்.!
இப்பிணியில் நீண்டுழலும்
மாந்தர்தம் கண்காணா
மறுவாழ்வினும் வலியதாம்
மறுசாகியந்தனை கற்றொழுகச்செப்புவீர்
"சாதிகள் இல்லையடி பாப்பா" என்னுங் கோடிட்டகருவில் - அதுவாகும்
அறம்போல் இன்வாழ்வுலகில்.
👣
_நன்றி உறவுகளே_✒️வரிகள் ஸ்ரீ ஆரோன்.
www.mytamilpoet.blogspot.com
புதன், 6 மே, 2020
மதுவிலக்கு மனு !
கனம்,
முதலமைச்சர் எடப்பாடி ஐயா..
தங்களது ஆட்சியில்
ஆயிரம் விமர்சனம்
இருக்கலாம்!
ஆனால்..
நாளைய தமிழகம்
உங்களை நினைவுகூர
மதுவை ஒழித்து
ஏழைக்குடும்பங்களை
காப்பாற்றுங்கள்!
மேதை அப்துல்கலாம்
கண்ட கனவது..
ஆரோக்கியமான இளைய சமுதாயம் ;
வல்லரசாகும் இந்தியா - எனுங்கருவில் தாங்களும் கைகோர்த்து
நம்தேசத்தின் எதிர்காலத்தை கட்டியெழுப்புங்கள் - தயவாய்..
கடந்தகால பாவத்தில் தாங்களும் கைகோர்க்காதீர்கள்!
உங்களை வரலாறு
தமிழனின் ஆட்சியில் தமிழகம்
மதுவற்று சுபீட்சமானது - என்று
நன்றியுடன் சுமக்கும்.
நன்றி-
வரிகள் ஸ்ரீ ஆரோன்
திங்கள், 4 மே, 2020
என்தவம் செய்தேனம்மா தமிழி.?
சனி, 22 பிப்ரவரி, 2020
ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020
வெள்ளி, 7 பிப்ரவரி, 2020
வியாழன், 6 பிப்ரவரி, 2020
பழுதிலா வாழ்வே பலம்.!
(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...

-
தமிழுக்கு என்னைத் தின்னக் கொடுத்தேன் மிச்சமின்றி எச்சமின்றி! எத்தனை எத்தனை கருத்தாய் வெற்று நினைவுகளை உறிஞ்சி வரிகளாய் வடிக்கிறாள் இலக்கணமும...
-
தங்கத்தில் சரிகை நெய்து என்மேனி போர்த்துமையா, வெள்ளியில் தட்டெடுத்து என்னை நீ தாங்குமையா என்றெனை ஒருக்காலுங்கேளா இல்லாட்டியே. * கூழோ கஞ்சி...
-
மானுடர் சீக்கு அறுந்து சீருடன் சீவனம் கொள்ள ஆருட ஞ்சொல்ல சுகமேகும், கைமருந் அதுவே காயமாற்றும், பூசாரியே ஏகபரிகாரி - என்று ரணமேகிய இருள் வாழ...