வெள்ளி, 29 மே, 2020

கலாம் என்னும் புனிதன்

இவன் தாய் #ஆஷியம்மா தன்னை காதலித்ததால் "ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனை சான்றோர்" எனக் கேட்க செய்தான்.

இவன் தகப்பன் ஜைனுலாப்தீனை காதலித்ததால் "இவன்தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்" உரைக்கச் செய்தான் #ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்.

இவன் தாய்மொழியை காதலித்ததால் #திரைகடல் தாண்டியும் தமிழில்லா
அவைகளிலும் பாடினான் #தமிழன் பெருமை #தமிழில்.

இவன் கல்வியை காதலித்ததால்
குழந்தைகள்; இளையோர் பேதமின்றி "#கனவு_காணுங்கள் " என்று அகிலவுலகின் ஆசானான் பலகோடி #ஏகலைவர் கட்கு.

இவன் தன் பிறந்த தேசத்தை காதலித்ததால் #தமிழ்நாட்டில் , #இராமேஸ்வரம் #ஆழியலை அதன் #கரகோசத்தில் #துயில்கிறான் .

இவன் உலகத்தை காதலித்ததால் ஒற்றை #பெண்டிமணந்து #ஓரிருகுழந்தை கட்கு #அப்பனாகாமல் ; #இப்பிரபஞ்ச #மனிதரெல்லாம் தன் பிள்ளைகளாக #தத்தெடுத்துக் கொண்டான்.

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...