வியாழன், 11 ஜூன், 2020

அம்பேத்கர் எனும் அஞ்ஞானி

சுதந்திர இந்தியாவின்
முதற்ச்சட்ட அமைச்சனே;
அரசியல் சாசனத்தின்
தார்மீக தகப்பனே..
                 ⚖️
என் தேசத்தின்
சமூகமருத்துவனே;
பொருளியல் அஞ்ஞானியே;
பகுத்தறிவுச் சிந்தனை சிற்பியே.!
                  ⚖️
அதிசிறந்த எழுத்தாளன் நீ..
தலை சிறந்த பேச்சாளனும் நீ..
பூகோள வரலாற்று ஆசானாவரே;
ஒடுக்கப்பட்ட மக்களின்
ஒற்றை ஒளிவிளக்கே.!
                   ⚖️
தேசபிதா காந்தி கண்ட
'சுதந்திரம்' எனும் பொய்க்கால்
குதிரையின் மெய்க்காலே
நீயல்லவா சாணக்கியா.?
                   ⚖️
வெள்ளையனிற்கு
சாட்டையடி கொடுத்து
நேதாஜி மீட்ட தேசத்தை
கறுப்பங்கி நீயல்லவா
கண்ணியமாய் காத்திட்டாய்.!
                  ⚖️
"இந்திய பூர்வக்குடி தமிழர்கள்;
இத்தேசம் முழுமைக்கும் இவர்களே
வாழ்ந்தனர்" - என்று அண்ணல் நீரே
ஒற்றை வார்த்தையில் எங்கள்
கவுரவத்தை நிரூபணங்காட்டிநீர்..
நீர்_வாழ்க வாழ்கவே..
                  ⚖️
உன் வாழ்நாள் பூராய் - நீ 
அர்ப்பணித்தது இந்திய
தேசத்திற்கு அல்லவா
இராசதந்திரியே??
             ⚖️⚖️⚖️

புதன், 10 ஜூன், 2020

தேசத்தின் பொருளாதாரம்.!

நம் இந்தியாவின் 
பொருளாதாரத்திற்கு
எத்தனையாயிரம்
சேதங்களடா சாமி.??
                 🇳🇪
ஆயிரமாயிரம் நிமிர்முட்டுக்கள்
கொடுத்தாலும் தேசம் 
நிமிர்வதாய் இல்லை.!!!
                  🇳🇪
பாரதம் என்னும் புதையல்தனை
காக்க ஒப்பேற்ற பூதங்களே - அதை
திண்று தீர்க்கிற கொடுமை.!!
                   🇳🇪
இங்கு சாமானியன் என்னும்
மனிதக் குஞ்சுகள் அனாதையாய்
கொடூர அவலம்.!!
              🇳🇪🇳🇪🇳🇪
வரிகள் ஸ்ரீ ஆரோன்.

வரிகள் ஸ்ரீ ஆரோன்

நாம்..
நிதானம் இழக்கும்
போதெல்லாம் - வாழ்க்கை
நம் ஆளுகயை விட்டு அதிகதூரம்
சென்று விடுகிறது - இது
தலைவலியின் பொழுதுகளில்
இதயம் சொன்ன வரிகள்.!

நிசத்தில் நடந்த கதை 🎭🎭🎭🎭🎭🎭🎭🎭🎭

ஒருமுறை நான் இந்தியாவிற்கு சென்றிருந்தேன் அப்பொழுது #கேரளா-வில் மூன்று மாதங்கள் தங்கவேண்டியிருந்தது.

அதற்காக ஒரு தமிழ்நாட்டு இஸ்லாமிய தமிழ் நண்பரின் வீடு, மாதவாடகை பத்தாயிரத்திற்கு கிடைத்தது. உள்நுழைந்த
அன்றைய பொழுது பேசிக்கொண்டிருந்தபோது _ இந்தியாவின் அரசியல் பற்றியும் அதில் இஸ்லாமியர்கள் ஒடுக்கப்படுவது (இராமர் கோயில் , காஷ்மீர் ) பற்றியும் தங்களுக்கு சரியான நீதி, அங்கீகாரம் கிடைப்பதில்லை!!! _ என்று கவலையாய் சொன்னார்; நானும் ஆமோதித்தேன்!

அப்படியே இரண்டு மாதங்கள் கடந்தது, மூன்றாவது மாத வாடகையுடன் மின்சாரக் கட்டணத்தையும் செலுத்துமாறு கூறினார்; மாறாக நானோ, "எல்லாவற்றுக்கும் சேர்த்து வாடகை பேசியிருந்தோம், இப்போது மேலதிகமாக கேட்கிறீர்கள் நியாயமா?? என்று கேட்டேன்" ஒருவாறாக விட்டுவிட்டார்.

பின்னொரு நாளில் இன்னும் சில நிபந்தனைகளை விதித்தார்; மீண்டுமாய் கொடுக்கப்பட்ட வீட்டில் மற்ற அறையில் இன்னுமொரு பையன் தங்க வருவதாக கூறினார்..

நானோ "எனது மனைவியுடன் இங்கு வசிக்கிறேன், ஆகையால் அது அவ்வளவு நன்றாக இருக்காது; மேலும் நான் வீட்டை வாடகைக்கு எடுத்தேனே தவிர அறையை அல்ல, ஆக நாங்கள் வீட்டை விட்டபின்னர் வேறு யாரையும் வைப்பதே உகந்தது" என்று உறுதியாக கூறவே - ஏதோ சமாதனமானார் ஆனால் மனமும், முகமும் சரியில்லை!!

மூன்று மாதம் கழிந்தது, நான் வீட்டைவிட்டு வெளியேறும் அன்று அவரைக் கூப்பிட்டு சாவியைக் கொடுத்து, "ஒரு சில வார்த்தை பேசலாமா.?" என்றேன்.. "சொல்லுங்கள்.!" என்றார்!!

"இந்திய தேசத்தில் இஸ்லாமியர்கள் பாரசீகத்தில் இருந்து வந்து குடியேறி பலநூறு வருடங்கள் ; சுதந்திரத்திற்கு பாடுபட்டோம் ; நாங்களும் இந்த நாட்டு பிரசைகள் என்றாலும் எங்களுக்கு சுதந்திரம் இல்லை ; மன உளைச்சலோடு வாழ்கிறோம் " என்று முன்னொரு பொழுது சொன்னீர்கள் அல்லவா.? என்றேன் "ஆம்" என்றார்.

உங்களது வீட்டில் மூன்று மாதங்கள் தங்கி வாடகை தந்தேன்; இருந்தும் எனக்கு வேறொரு இடம் தேடமுடியாது என்கிற சந்தர்ப்பத்தை புரிந்து கொண்டு; இந்த சிறியதோர் வீட்டிற்காக எத்தனை நெருக்குதல்கள் கொடுத்து வஞ்சித்தீர்கள்.! 

அப்படியிருக்க..
இவ்வளவு பெரிய தேசத்தில் பொதுவான அனைத்தும் தங்களுக்கு கிடைக்கிறது என்பது உறுதி ; இருந்தபோதிலும் ஒரு சில நேரங்களில்; சில இடங்களில்; சிலபல முரண்பாடுகளோடுகள் ஏற்படும்போது அந்த தேசத்தையே குற்றம் சொல்லி வெறுக்கின்றீர்கள் இது எப்படி நியாயமாகும்.? ; மேலும் மக்களுக்கு முழுசுதந்திரம், அபிலாசைகள் நிறைவாக்கும் நாடு எங்குள்ளது என்றேன்.??

மீண்டுமாய் "உங்களது #மனங்களில் மாற்றம் ஏற்படாத வரையில் நீங்களும் இந்த சமுதாயத்தில் அல்லது தேசத்தில் மாற்றத்தினை எதிர்பார்க்க முடியாது _ தங்களது உதவிகளுக்கு மிக்க நன்றி" என்று விடைபெற்றேன்.

அவர் தவறை புரிந்து கொண்டு; பதில்பேசாது நின்றார்; இப்போதும் அவ்வப்போது பேசுவேன்; எது எப்படி இருப்பினும் அவர் என் நண்பர்.

_நமது எண்ணங்கள் மாறினால் நம்மை சுற்றி அனைத்தும் மாறும்_

நன்றி_
வரிகள் ஸ்ரீ ஆரோன் 

செவ்வாய், 9 ஜூன், 2020

👁️கண்பேசும் வார்த்தைகள்💋

என்னவளது..
மெல்லிய மெளனத்தின்
பொழுதுகளில் - அவள்
கண்கள் பேசும்
ஜால வார்த்தைகளிற்கு
இவ்வுலகில் 
எம்மொழிக் கவிதையும்
ஈடல்லவே !

கூட..
அவ்விழி ஜாலங்களின்
பொருள் விளக்க
குமரியின் புலவனாலும்
ஒண்ணாது - அவளால்
சீவிக்கும் எனைத்தவிர.!

இப்படிக்கு,
உண்மையுள்ள காதலன்.
ஸ்ரீ ஆரோன் 

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...