ஒருமுறை நான் இந்தியாவிற்கு சென்றிருந்தேன் அப்பொழுது #கேரளா-வில் மூன்று மாதங்கள் தங்கவேண்டியிருந்தது.
அதற்காக ஒரு தமிழ்நாட்டு இஸ்லாமிய தமிழ் நண்பரின் வீடு, மாதவாடகை பத்தாயிரத்திற்கு கிடைத்தது. உள்நுழைந்த
அன்றைய பொழுது பேசிக்கொண்டிருந்தபோது _ இந்தியாவின் அரசியல் பற்றியும் அதில் இஸ்லாமியர்கள் ஒடுக்கப்படுவது (இராமர் கோயில் , காஷ்மீர் ) பற்றியும் தங்களுக்கு சரியான நீதி, அங்கீகாரம் கிடைப்பதில்லை!!! _ என்று கவலையாய் சொன்னார்; நானும் ஆமோதித்தேன்!
அப்படியே இரண்டு மாதங்கள் கடந்தது, மூன்றாவது மாத வாடகையுடன் மின்சாரக் கட்டணத்தையும் செலுத்துமாறு கூறினார்; மாறாக நானோ, "எல்லாவற்றுக்கும் சேர்த்து வாடகை பேசியிருந்தோம், இப்போது மேலதிகமாக கேட்கிறீர்கள் நியாயமா?? என்று கேட்டேன்" ஒருவாறாக விட்டுவிட்டார்.
பின்னொரு நாளில் இன்னும் சில நிபந்தனைகளை விதித்தார்; மீண்டுமாய் கொடுக்கப்பட்ட வீட்டில் மற்ற அறையில் இன்னுமொரு பையன் தங்க வருவதாக கூறினார்..
நானோ "எனது மனைவியுடன் இங்கு வசிக்கிறேன், ஆகையால் அது அவ்வளவு நன்றாக இருக்காது; மேலும் நான் வீட்டை வாடகைக்கு எடுத்தேனே தவிர அறையை அல்ல, ஆக நாங்கள் வீட்டை விட்டபின்னர் வேறு யாரையும் வைப்பதே உகந்தது" என்று உறுதியாக கூறவே - ஏதோ சமாதனமானார் ஆனால் மனமும், முகமும் சரியில்லை!!
மூன்று மாதம் கழிந்தது, நான் வீட்டைவிட்டு வெளியேறும் அன்று அவரைக் கூப்பிட்டு சாவியைக் கொடுத்து, "ஒரு சில வார்த்தை பேசலாமா.?" என்றேன்.. "சொல்லுங்கள்.!" என்றார்!!
"இந்திய தேசத்தில் இஸ்லாமியர்கள் பாரசீகத்தில் இருந்து வந்து குடியேறி பலநூறு வருடங்கள் ; சுதந்திரத்திற்கு பாடுபட்டோம் ; நாங்களும் இந்த நாட்டு பிரசைகள் என்றாலும் எங்களுக்கு சுதந்திரம் இல்லை ; மன உளைச்சலோடு வாழ்கிறோம் " என்று முன்னொரு பொழுது சொன்னீர்கள் அல்லவா.? என்றேன் "ஆம்" என்றார்.
உங்களது வீட்டில் மூன்று மாதங்கள் தங்கி வாடகை தந்தேன்; இருந்தும் எனக்கு வேறொரு இடம் தேடமுடியாது என்கிற சந்தர்ப்பத்தை புரிந்து கொண்டு; இந்த சிறியதோர் வீட்டிற்காக எத்தனை நெருக்குதல்கள் கொடுத்து வஞ்சித்தீர்கள்.!
அப்படியிருக்க..
இவ்வளவு பெரிய தேசத்தில் பொதுவான அனைத்தும் தங்களுக்கு கிடைக்கிறது என்பது உறுதி ; இருந்தபோதிலும் ஒரு சில நேரங்களில்; சில இடங்களில்; சிலபல முரண்பாடுகளோடுகள் ஏற்படும்போது அந்த தேசத்தையே குற்றம் சொல்லி வெறுக்கின்றீர்கள் இது எப்படி நியாயமாகும்.? ; மேலும் மக்களுக்கு முழுசுதந்திரம், அபிலாசைகள் நிறைவாக்கும் நாடு எங்குள்ளது என்றேன்.??
மீண்டுமாய் "உங்களது #மனங்களில் மாற்றம் ஏற்படாத வரையில் நீங்களும் இந்த சமுதாயத்தில் அல்லது தேசத்தில் மாற்றத்தினை எதிர்பார்க்க முடியாது _ தங்களது உதவிகளுக்கு மிக்க நன்றி" என்று விடைபெற்றேன்.
அவர் தவறை புரிந்து கொண்டு; பதில்பேசாது நின்றார்; இப்போதும் அவ்வப்போது பேசுவேன்; எது எப்படி இருப்பினும் அவர் என் நண்பர்.
_நமது எண்ணங்கள் மாறினால் நம்மை சுற்றி அனைத்தும் மாறும்_
நன்றி_
வரிகள் ஸ்ரீ ஆரோன்