வெள்ளி, 29 மே, 2020

ஐயன் கலாமும் ; ஆரோன் நானும் 🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀

3️⃣_கலாம் சொன்னது:_

“#அக்னி ” ஏவுகணை 1989 ஏப்ரல் 20 ல் சோதனை பார்க்க நாள் குறிக்கப்படுகிறது,
நாடே எதிர்பார்க்கும் 20 ம் தேதி கிளம்ப சில நிமிடங்கள் இருக்க  தொழில்நுட்ப பிரச்சனையால் #ரத்து செய்யப்படுகிறது இதை ஊடகங்கள் கிண்டல் செய்தன.
மேலும் ஆராய்ச்சி கூடத்தில் #தோல்வியால்  துவள்கிறார்கள்; ஆனால் நான் “எஸ் எல் வி முயற்சியில் நாங்கள் உருவாக்கிய செயற்கைக்கோள் கடலில் விழுந்தது ஆனால் “#அக்னி ” கண்முன்னே இருக்கிறது #முயற்சியுங்கள் “ உங்களால் முடியும் என்றேன்.

✒️விஞ்ஞானி மாத்திரமன்றோ; தெளிந்தகுருவும் ஊக்கந்தரும் ஞானியுமாய் வாழ்ந்த கலியுகத்தில்
ஒரேயொரு சாந்தசித்தாந்தி கலாம்.

2️⃣_கலாம் சொன்னது:_
மீண்டும் தூக்கம் இல்லாமல் உழைக்கிறார்கள், 1989 மே 1 அதாவது பத்து நாட்களில் குறிக்கப்படுகிறது ஆனால் கிளம்ப 10 நொடி இருக்கும் மீண்டும் ரத்து செய்யப்படுகிறது.

1️⃣_கலாம் சொன்னது:_
பின்னரும் கடுமையான முயற்சிக்கு பின் தவறுகள் களையப்பட்டு 1989 மே 22 ல் அக்னி கிளம்ப 20 நாட்களில் திட்டமிடப்படுகிறது அன்று தட்ப வெட்பநிலை சரியில்லை, புயல் அபாயம் என்று வானிலை பயமுறுத்தியது ஆனாலும் வெற்றிகரமாக “அக்னி” பாய்ந்து விடுகிறது. எங்களுடைய ஐந்து வார மன உளைச்சலை 600 நொடியில் சடாரென்று துடைத்து விட்டது.

✒️"விடாமுயற்சி மாத்திரமே
இவ் வாழ்க்கையில் வெற்றி
கொணரும் பரமரகசியம் - என்று
அறிந்திருந்தார் கலாம்."

🌱_கலாம் சொன்னது:_
பாதுகாப்பு அமைச்சர் கே சி பந்த் “கலாம்! நாளை அக்னி வெற்றியை கொண்டாட நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?” என;  கேட்க அதற்கு நான் யோசித்துவிட்டு RCI ல் [Research Centre Imarat] ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட வேண்டும் என்றேன்.

✒️"செயற்கை அறிவாராய்ச்சியில்
கைதேர்ந்த கலாம்; இயற்கையிலாது செயற்கை பயன்தராது - என்று
ஆழமான நிசத்தை..
மனதில் வேரூன்றியிருந்தார்.!"

🚀_கலாம் சொன்னது:_
ஜெர்மனியின் உதவியால் தயாரித்து இருப்பதாக மற்ற நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. இது சுதேசி ஏவுகணை என்பதை யாரும் நம்பத் தயாராக இல்லை ஆனாலும் அதை பொருட்படுத்தாது நாங்கள் அடுத்த ஆராய்ச்சியில் இறங்கினோம்.

✒️"அவாமானங்கள்
ஒவ்வொன்றும் தான் கற்கும்
ஒவ்வொரு புத்தகத்திற்கு சமமாக எண்ணியிருந்தார் கலாம்
அதனாலயே அவருக்கு சக்கிப்பு சத்தியகுணமாக இருந்தது.!"

📡 _கலாம் சொன்னது:_
நான் #சோதனையில்  ஈடுபட்டுகையில் வெடி விபத்து ஏற்பட்டு அதில் #தீக்காயம்  ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்க படுக்கை வசதி கூட இல்லாமல் இருந்திருக்கிறேன்; இது மட்டுமல்ல நான் #விஞ்ஞானியாக ஆராய்ச்சி காலத்தில்  #பொதுப் பேரூந்தில் தான் பயணித்தேன்.

✒️"கலாமின் #எழிமைதான்
தமிழ்நாட்டில் உதித்த தமிழரில்
#கக்கன் , #காமராசர் க்கு
அடுத்தவோர் தலைவராக
ஒப்பிடத் தூண்டுகிறது.!"

நன்றி.
#வரிகள் ஸ்ரீ ஆரோன் 
#www.mytamilpoet.blogspot.com 

கலாம் என்னும் புனிதன்

இவன் தாய் #ஆஷியம்மா தன்னை காதலித்ததால் "ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனை சான்றோர்" எனக் கேட்க செய்தான்.

இவன் தகப்பன் ஜைனுலாப்தீனை காதலித்ததால் "இவன்தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்" உரைக்கச் செய்தான் #ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்.

இவன் தாய்மொழியை காதலித்ததால் #திரைகடல் தாண்டியும் தமிழில்லா
அவைகளிலும் பாடினான் #தமிழன் பெருமை #தமிழில்.

இவன் கல்வியை காதலித்ததால்
குழந்தைகள்; இளையோர் பேதமின்றி "#கனவு_காணுங்கள் " என்று அகிலவுலகின் ஆசானான் பலகோடி #ஏகலைவர் கட்கு.

இவன் தன் பிறந்த தேசத்தை காதலித்ததால் #தமிழ்நாட்டில் , #இராமேஸ்வரம் #ஆழியலை அதன் #கரகோசத்தில் #துயில்கிறான் .

இவன் உலகத்தை காதலித்ததால் ஒற்றை #பெண்டிமணந்து #ஓரிருகுழந்தை கட்கு #அப்பனாகாமல் ; #இப்பிரபஞ்ச #மனிதரெல்லாம் தன் பிள்ளைகளாக #தத்தெடுத்துக் கொண்டான்.

வியாழன், 28 மே, 2020

தமிழீழம்

பொன்னிழை வண்ணக்கூண்டில்
புழுதிபடிந்த புன்னகையொடு..
துருபிடித்து தொலைந்து போன
திறவுகோலின் ஏக்கத்தில்..!

திருப்பங்கள் பலகண்டு;
உலகைத் திசைமாற்றி_
இனத்தடம் அழித்து;
தரணி விட்டோழிந்தான்..
தலைவனென்று - மார்புதட்டி
எட்டிய திசையெலாம்
கொட்டமிட்டுக் கொண்டாடி - #ஈழம்  
#தாய் தின்றமண்  என்றே
சபித்தாலும்...

வீரச்செழுந் தமிழர்களின்
புதிக்கரு குவியலில்
#மூப்பு; பிணி; சாக்காடு _
_தாண்டியொரு தோரணையோடு
இன்றும் #தமிழீழம்  ..!

நன்றி🔥
#வரிகள் ஸ்ரீ ஆரோன் 

எது தமிழர்களின் மதம்?❓❓❓❓❓❓❓❓❓❓❓

[எது தமிழர்களின் மதம்?
❓❓❓❓❓❓❓❓❓

♨️தமிழர் நாகரிகம் என்பது♨️ 
மிகப்பழமை, மேம்பட்ட பண்பாடு, கலாசாரத்துடன் கி. மு 6000 வரையான தொன்மை கொண்ட வரலாறு என்று தொல்பொருளியல் சான்றுகள் மற்றும் அகழ்வாய்வுகள் சொல்லுகிறது.

தமிழர்களின் உண்மையான மதம் பற்றி பெரும்பாலானோர் தெரிந்திருக்கவில்லை என்பதே உண்மை; அதனால்தான் நமது மொழியே நமது பெரும் அடையாளம் ஆகிறது.

♨️ தமிழர்கள் ஊனுண்ணிகள்♨️
நம் முன்னோர் வேட்டையாடியும், மிருகம் மற்றும் பறவைகள் வளர்த்து, இறைச்சி உண்டு வாழ்ந்தனர் ஆகயால் #கொல்லாமை , #புலால் மறுத்தல் நம் முன்னோர் கொண்டிருக்க வாய்ப்பில்லை. தங்கள் தேவைக்கும், சூழ்நிலைக்குமாய் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தலில் #பலி கொடுத்தும் , இறைச்சிகளை உண்டும் வந்துள்ளனர் என்பதும் #இலக்கிய நூல் களில் இருந்து அறிய முடிகிறது மேலும் இவை பாவத்திற்ககுரிய செயல்களாக நம்முன்னோர் கருதவில்லை.

♨️ தமிழர் வாழ்வியல்♨️
தமிழ் இலக்கியங்களில் தமிழர் வாழ்வியலை பிரதிபலிக்கும் பழமை வாய்ந்த நூலான #தொல்காப்பியம்   நடுக்கல் வழிபாடு பற்றியும் குறிப்பிடுகிறது; இந்நூல் தோறாயமாக 5000 ஆண்டு பழமைமிக்கது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

♨️ தமிழர் மரபு வழிபாட்டு முறை♨️
#நடுக்கல் வழிபாடு என்பது தமது முன்னோர்களில் வழிகாட்டிகளாக
விளங்கி வீரமரணமானவர்கள் நினைவாக கல்லை நட்டு அதுவே இன்றைய #குலதெய்வம்_வழிபாடு ஆகும். உதாரணமாக முருகப்பெருமான்
கருப்பன், முனியர், விருமாண்டி
மதுரை வீரன், எல்லைச்சாமி இன்னும்...

♨️தமிழர்கள் மத சார்பற்றவர்கள்♨️
ஆதித்தமிழர்கள்  மதசார்பற்று இயற்க்கையோடு இசைந்து வாழ்ந்துவத்துள்ளனர் என்பதாய் #தொல்காப்பியம்  சொல்லும் கருத்துகள் உணர்த்துகிறது; ஆக மதம் என்ற ஒன்று தமிழர்களுக்கு இல்லை  என்பதே உண்மை.

♨️தமிழர் மாதத்தில் நுழைதல்♨️
நமது முன்னோர் நடுகல் வழிபாட்டுக்கு  ஒத்ததான பண்புடைய #ஆரியதெய்வ நம்பிக்கைகள்  ஆரியரோடு தமிழர் கலக்கும் பின்னான காலகட்டத்தில் அறிந்து அதனை தங்களது தெய்வங்களாக மறுப்பின்றி ஏற்றுக் கொண்டுள்ளனர்; புலால் மறுத்தலையும் ஏற்றுள்ளனர்; அதன் கூடவே சாதிகளும் நமக்குள் புகுந்துள்ளது. பின்னர் கி.பி 52 இலிருந்து கிறிஸ்தவமும்; கி.பி 700 களில் இசுலாமும் புகுந்து கொண்டது.

♨️ தமிழரின் மெய்யியல்♨️
#தொல்காப்பியம்  பல்வேறு மெய்யியல் சார்ந்த கருத்துக்கள், இயற்கையின் தன்மையை அறிந்து வாழ்ந்த தமிழர்களின் பல கண்டுபிடிப்புகள் மருத்துவக்கலை, தற்காப்பு கலை, அறிவியல், இசை, இலக்கணம் மேலும்பல சொல்லுகிறது.

♨️ தமிழா விழித்துக்கொள் ♨️
 ஆக இன்று #மதம், சாதி, அரசியல், சினிமா, போதை வஸ்துக்களில் சிக்கி உணர்வற்று கிடக்கிறோம்; நமக்கான கடமை நாளைய நமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகளான #அடுத்த சந்ததிக்கு நல்ல எதிர்காலம் , கொடுப்பது அதற்கு ஒற்றுமை, ஒழுக்கம்,பண்பாடு, சமூகநீதி, மாசில்லா இயற்கை, தேசத்தில் சிறந்த தலைவர்கள் மட்டுமே அவசியம்!!

♨️ உறவுகளே மன்றாடுகிறோம்♨️
#எந்த மதம்??  #எந்த ஜாதி?? 
#வேற்றுமை விடு ; #தமிழனாய் எழு !! 
#உன் தேசம் ; #உன் நாளைய சந்ததி  செழிக்க நல்ல தலைவனை தெரிவு செய்; #மாற்றம் ஒன்றே மாறாதது  ; #நமக்கு தமிழர் என்னும் குலம்; ஒரே கடவுள்தான் உலகில் அதற்கு பல நாமம் இருக்கலாம் வெறுக்காதே உன் உறவுகளை.

நன்றி_
தொகுப்பு ஸ்ரீ ஆரோன்


சிந்தனயை தனித்துமாய் மாற்று! 👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️

நம்முடைய கருத்துகள் - பலரால்
நிராகரிக்கப்படும்..
என்றாலும் சிலரால் ஏற்கவும்;
உற்சாகிக்கவும் படலாம் - ஆக
நாம் நம் வாழ்க்கையில்
#வெற்றிசிறக்க  நிலைத்து - நின்று
#போராடி ஆகணும் .!

இந்தவுலகில் - நாம்
#பாடுகளுள்ள மனிதன்  
நமக்கு கோபம், வக்கிரம்
விடாப்பிடி இவையாவும் - இங்கு
பொதுவான மனப்பாங்கு.!

ஆனாலும்..
#அன்பு’ ; #விட்டுக் கொடுத்தல்      
#பிறரை ஏற்றுக்கொள்ளுதல் - ஆன
பண்புகள் #இதயக்கொடை - அது
சீக்கிரத்தில் மனிதருள் வருவதில்லை
காரணம் இது #பாவத்தில் நிறைந்த பூமி .!

மனிதனல்லா இன்னொரு உயிரின்
பார்வையில் நாமெல்லாரும்
மனிதர்கள் அவ்வளவுதான்.!
நம்மிலெந்த வேற்றுமையும் காணாது.

ஒரு மேய்ப்பன் ஆட்டுமந்தையில்
கருப்பு, வெள்ளை சேவலை
மறையன், புள்ளியென்று - பல
வேற்றுமயை கண்டாலும்
அத்தனையும் அவனுக்கு ஆடுகள்தான்.!

வாழ்க்கையின் இந்த நிசம் புரிந்து
வாழ்வது மிக்கக் கடினம் - காரணம்
#மனிதமனம் சுயநலம் கொண்டது;
#மனிதயினம் பாதகமமெண்ண வலியது;
அதை தாண்டி - #அன்பு கூருவோம்  
#மனிதனாய் ஜெயித்திடுவோம் .!

"அனைவருக்கும் அன்பும்; அறனும் 
உடையதாய் #நல் வாழ்க்கை "
அமைய வேண்டுகிறோம்!

நன்றி_
#வரிகள் ஸ்ரீ ஆரோன் 
#www.mytamilpoet.blogspot.com 

கனவு நாயகன் நிசதில்

பிறந்த மண்ணிற்கு
பெருமை கொண்டாய்;
மாணாக்கர்தமை #கனவுகாண் என்றாய்;
குழந்தைகட்கு #அறிவுசார் 
கதைகள் சொன்னாய்;
இளையோருக்கு #தேசப்பற்று 
எழுச்சி தந்தாய்;
மதம் மொழி இனம் கடந்து - உன்
மக்களை நேசித்தாய்!

தலைமுறை தாண்டி
மனிதர்(ம்) வாழ யோசித்தாய்
#அக்னிச் சிறகுகள்  தனால்
வேற்றுமைகளை சுட்டெரித்து
#தேசமிதின் கவுரவத்_தாய் நீ  

"#பசுமை கலாம் திட்டம் " அதில்
நம் பாலைதேசத்தை சோலையாக்க
#சின்னக்கலைவாணர் _கொண்டு
சிந்தைக் கருவில் சீரியவிதை விதைத்த
#வனம் ஏகாத வனவாசி - நீ

நீ வறுமையின் குழந்தையாய் பிறந்து;
திறமையின் மிகுதியால் வளர்க்கப்பட்டு;
விடாமுயற்சியால் உயரங்கள் தொட்டு;
கவுரவப் பலகணியில் உசந்து உட்கார்ந்து;
இல்லறம் துறந்து நல்லறம் கற்பித்தாய்;
பின்னும்- தலைக்கனம் ஏறாத தலைவனாய்
கக்கன், #காமராசர்  வரிசையில்
தமிழ்நாடு கண்ட தமிழன் நீ..!
உன்புகழ் வையகம் சொல்ல - தமிழினமே
பெருமை கொள்கிறது தமிழா!!

நம் முப்பாட்டனவன்
கனியன் பூங்குன்றன்
நாமத்தை  ஐரோப்பிய தேசத்தின்
அரசியலரங்கு வரை "#யாதும் ஊரே; யாவரும் கேளீர்!  " என்ற ஞானவரியால்
பொதுமை உரைத்த தமிழன் - இவர்.

இவரை வாழ்த்த சொரிந்த 
பூக்களின்களின் குழைந்தை மலர்கள் 
ஆர்ப்பரிக்கின்றன தாங்கள் - தான்
பாக்கியவான்களில் கடைசி என்று
அன்றுதான் - பாரெங்கும் இரங்கள்
தாங்கோனா துயர் விடை கொடுத்தோம்
இராமேசுவரம் கடலில் கரிப்பது
உப்பல்ல எங்களின் கண்ணீர்!

தங்களை மூணே வரியில்
சொல்லி முடிக்கிறேன்..
"கலாம் நீ காலம் கரைக்காத
இந்திய மணிமகுடத்தில் தமிழ்
பதித்த கோவினூர் வைரம்"

நன்றி.
#வரிகள் ஸ்ரீ ஆரோன் 
#www.mytamilpoet.blogspot.com 

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...