வியாழன், 28 மே, 2020

சிந்தனயை தனித்துமாய் மாற்று! 👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️

நம்முடைய கருத்துகள் - பலரால்
நிராகரிக்கப்படும்..
என்றாலும் சிலரால் ஏற்கவும்;
உற்சாகிக்கவும் படலாம் - ஆக
நாம் நம் வாழ்க்கையில்
#வெற்றிசிறக்க  நிலைத்து - நின்று
#போராடி ஆகணும் .!

இந்தவுலகில் - நாம்
#பாடுகளுள்ள மனிதன்  
நமக்கு கோபம், வக்கிரம்
விடாப்பிடி இவையாவும் - இங்கு
பொதுவான மனப்பாங்கு.!

ஆனாலும்..
#அன்பு’ ; #விட்டுக் கொடுத்தல்      
#பிறரை ஏற்றுக்கொள்ளுதல் - ஆன
பண்புகள் #இதயக்கொடை - அது
சீக்கிரத்தில் மனிதருள் வருவதில்லை
காரணம் இது #பாவத்தில் நிறைந்த பூமி .!

மனிதனல்லா இன்னொரு உயிரின்
பார்வையில் நாமெல்லாரும்
மனிதர்கள் அவ்வளவுதான்.!
நம்மிலெந்த வேற்றுமையும் காணாது.

ஒரு மேய்ப்பன் ஆட்டுமந்தையில்
கருப்பு, வெள்ளை சேவலை
மறையன், புள்ளியென்று - பல
வேற்றுமயை கண்டாலும்
அத்தனையும் அவனுக்கு ஆடுகள்தான்.!

வாழ்க்கையின் இந்த நிசம் புரிந்து
வாழ்வது மிக்கக் கடினம் - காரணம்
#மனிதமனம் சுயநலம் கொண்டது;
#மனிதயினம் பாதகமமெண்ண வலியது;
அதை தாண்டி - #அன்பு கூருவோம்  
#மனிதனாய் ஜெயித்திடுவோம் .!

"அனைவருக்கும் அன்பும்; அறனும் 
உடையதாய் #நல் வாழ்க்கை "
அமைய வேண்டுகிறோம்!

நன்றி_
#வரிகள் ஸ்ரீ ஆரோன் 
#www.mytamilpoet.blogspot.com 

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...