நம்முடைய கருத்துகள் - பலரால்
நிராகரிக்கப்படும்..
என்றாலும் சிலரால் ஏற்கவும்;
உற்சாகிக்கவும் படலாம் - ஆக
நாம் நம் வாழ்க்கையில்
#வெற்றிசிறக்க நிலைத்து - நின்று
#போராடி ஆகணும் .!
இந்தவுலகில் - நாம்
#பாடுகளுள்ள மனிதன்
நமக்கு கோபம், வக்கிரம்
விடாப்பிடி இவையாவும் - இங்கு
பொதுவான மனப்பாங்கு.!
ஆனாலும்..
#அன்பு’ ; #விட்டுக் கொடுத்தல்
#பிறரை ஏற்றுக்கொள்ளுதல் - ஆன
பண்புகள் #இதயக்கொடை - அது
சீக்கிரத்தில் மனிதருள் வருவதில்லை
காரணம் இது #பாவத்தில் நிறைந்த பூமி .!
மனிதனல்லா இன்னொரு உயிரின்
பார்வையில் நாமெல்லாரும்
மனிதர்கள் அவ்வளவுதான்.!
நம்மிலெந்த வேற்றுமையும் காணாது.
ஒரு மேய்ப்பன் ஆட்டுமந்தையில்
கருப்பு, வெள்ளை சேவலை
மறையன், புள்ளியென்று - பல
வேற்றுமயை கண்டாலும்
அத்தனையும் அவனுக்கு ஆடுகள்தான்.!
வாழ்க்கையின் இந்த நிசம் புரிந்து
வாழ்வது மிக்கக் கடினம் - காரணம்
#மனிதமனம் சுயநலம் கொண்டது;
#மனிதயினம் பாதகமமெண்ண வலியது;
அதை தாண்டி - #அன்பு கூருவோம்
#மனிதனாய் ஜெயித்திடுவோம் .!
"அனைவருக்கும் அன்பும்; அறனும்
உடையதாய் #நல் வாழ்க்கை "
அமைய வேண்டுகிறோம்!
நன்றி_
#வரிகள் ஸ்ரீ ஆரோன்
#www.mytamilpoet.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக