புதன், 9 ஜூன், 2010

போராழி இன் காத(ல்/லி)...!





காத்திருந்தே என் காலங்கள் 
காணீரொடு கரைந்து போயின...

நேற்றிருந்த என் நினைவுகள் 
நெஞ்சோடெ மட்கிக் கலந்தன...

பூத்திருந்த நான்கூட 
பூவாகவே வாடிநிட்கிறேன் !


போய்த்திரும்ப நீ மட்டும் ஏனோ 
போகும் போதே மறந்து போனாயோ????

தமிழ் தாயே..

என் மரணத்திலும்
கஸ்ரம் இல்லை எனக்கு...
         
அதில்த்தான் உனக்கு
இஸ்ரம் என்றால்...!

           ***
[on  23 February 2009 at 01:55 / நானுமொருவன் இருக்கிறேன்]

எழுந்திரு தமிழா..

தலையங்கம் காணா
முண்டங்கள் எல்லாம்
முதல் முகங்களாய்...

முத்துகள் முகழும் சிப்பிகள்
மூலயில் முனகிக் கிடப்பது 
நியாயமோ ....!
                
                 ***
[on 09 January 2010 at 12:45 / நானுமொருவன் இருக்கிறேன்]

முதல் நாள்...!

                             நீ பேசிப்பேசியே 
பேரின்பம் கண்ட நெஞ்சம் 
முந்தினம் நீ...

அழுது வி 
விழுது விட்டது 
முதன்முறை- என்னுள்
பொழுது சாய்ந்தும் புரிந்திடாதா 
துன்பம் ஒன்றை
தூரத்தில் நின்றே !

    
                                                ***
[on  Tuesday, 30 March 2010 at 10:25 / நானுமொருவன் இருக்கிறேன்]

30.03.2010_ல் நான்...

 


நிலா... 
நீ தொலைந்து போன இராத்திரிகளின் நீளம் 
என் வாழ்நாளை மிஞ்சி...!

நீ வாழும் இதய உஸ்னம்
கேள்விக்களே இன்றி
எனை மரணமயானம் வரை 
யாத்திரை சாய்க்கிறது...


                                                    ***
[on  30 March 2010 at 09:03 / நானுமொருவன் இருக்கிறேன்]

ஐம்பூதக் கிறுக்கலே காதல்...



              காற்றிற்குள் ஓராயிரம் வாசனை
கனவிற்குள் நீ வந்தே 
நித்தமும் மோட்சனை...


              நீருக்குள் நீங்காத ஊடலை
நின்றால் நெஞ்சிட்குள்
என்றுமே
நீ போர்க்கலை...

              தீ என்றும் அழியாத தனி விடை
தினம் தினம் உன் நினைவுகளே 

நிறைநடை... 

              ஏண் பூமிதான் புனர்கின்ற தாய் நிலை
என் இதியமோயின்று 

அது தாண்டிய ஓர் நிலை...

              ஆகாயமது அளக்ககோண் விசாலாயம்
அன்பன் நான் ஆழங்காண் 

அன்பிற்கினியவள் நீ...!


                                                                        ***
[on  28 April 2010 at 01:33நானுமொருவன் இருக்கிறேன்]

திங்கள், 7 ஜூன், 2010

என் காலங்கள்...



                              தாவித்தித்திரிந்தேன் தாகமாக
                              தாய்மடியில் தவழ்ந்தகாலம்
                                                        *
                              சுற்றித்திரிந்தேன் சுகமாக
                              சுருக்குநூற்பை சுமந்த காலம்

                                                        *
                             பாடுபட்டேன் பரவசத்தில் 
                             பாவியுன் பார்வைபட்ட காலம் 
                                                       *
                            புத்தி புரிந்தேன் நீ எனை புன்னகைப்பில் 
                            புழுதியென்று போன காலம்
                                                      *
                             த்தனை கடந்து காண்கிறேன் 
                             ன்ப எதிர்காலம் எனக்கு  இறந்த காலம்..!
                                                    * * * 
[on 31/10/2004, மித்திரன் வாரமலர் (Ceylon News Paper)]

ஞாயிறு, 6 ஜூன், 2010

என் கற்பதரங்கினிக்கு !


எனைத்தமிழனாய் தரணி தந்தவளே...
தக்கதாய் கல்விஞான் ;
கலையாற்றல் ;
இனிய கற்பனையேகம் ;
கூடவே...
என்  உயிர்க்கவியோகமும்
உள்ழுருக்கிவார்தவளே
               *
உனையென் தமிழில்
ஒர் கவிநூன்நூர்த்து
பூஜிக்கத்திடந்தர
என் (கலை/கால) அன்னையை
கால்பிடித்து இரஞ்சுகின்றேன் !
              ***
[on 03/05/2010, நானுமொருவன் இருக்கிறேன் ]

~தமிழீழம்~


பொன்னிழை வண்ணக் கூண்டில்
புழுதி படிந்த புன்னகயொடு
துரு பிடித்து தொலைந்து போன
திறவு கோலின் ஏக்கத்தில்;

திருப்பங்கள் பலகண்டு
திசைமாறிப்போன
திணறலில் திளைத்தும்

வீரச்செழுந்தமிழர்களின்
 புதிக்கரு குவியலில்
மூப்பு; பிணி; சாக்காடு
தாண்டியொரு
தோரணையோடு...

[on 09/12/2009,(நானுமொருவன் இருக்கிறேன்)]

PLEASE அடம் பிடியாதே...

சிட்டான என் மனசு
உன் பட்டாம் பூச்சி கூட்டில்
தங்க தவிக்குதடி...
வங்கிக்கடன் எடுத்தேனும்
மீண்டும் சீர்செய்வேன்
ஏதும் சேதமெனில்
"திப்பியமாய்" திரண்டவளே
தயவுடன் என் மனுவை ஏற்றுகொள் ..!

[on 28/08/2004, சுடர் ஓளி(Ceylon news paper)]

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...