வெள்ளி, 3 செப்டம்பர், 2021

அரியவர்..

அரியவர் தாமென்றும்
நிற்கும் சபையெலாம் கோலோச்சும் 
சான்றோனென்றும் தீர்க்கதரிசனமாய்- உமை
பெற்றோரிட்ட காரணப்பெயர்தான் அரியராசா- என 
தாம் வாழ்ந்தசரிதம் சொல்லிற்று எங்கள் மானசா..

யாழது பெற்று மட்டுமண் தத்தெடுத்த அரியனே;
யாழ் - சென் பட்ரிக்ஸ் கல்லுரியின் நன்மாணாக்கனே;
மட்டு - நகராட்சி மன்றத்தின் சுகாதார பரிசோதகராய் 
அளப்பெரிய சேவைகண்ட வெள்ளுடை அதிகாரியே,
நீர்சமைத்த மாணாக்கர் எத்தனை எத்தனையோ-அங்கே.!
ஓய்விலும் ஓயாது மட்டு-செலிங்கோ-லைப்ஃ ஆலோசனை நாயகனாய் எண்ணொண்ணா உள்ளங்களை கொள்ளையிட்டீர் என்று கண்டோம்- தேசமே சாய்ப்பிலிருக்க உனக்காக சொரிந்த கண்ணீரில் தெப்பமாய் உமதில்லம் சாய்ந்து நின்ற தோரணையில்!

மண்ணிற்கும் விண்ணிற்கும் 
கண்ணோக்கும் பாதையிருந்தால்- உமை
படைகூட்டி மீட்டக்க ஆயிரமாயிரம் உற்றார் சுற்றமிருந்தும் 
நீர் மறைத்துச் சென்ற புதிர் வார்தைகள், மௌனத்தின் சைகைகள், கண்ணீர்ச் சொட்டுகளிற்கும் விடைமீட்கவே இன்னும் எங்களில் 
ஞானவான் இல்லையே மீசைவைத்த குழந்தையே.

சொல்வார் சொல்கேட்டு சோடகம் பேசாது - அத்தனையும் 
உள்மனதில் அசைபோட்டு நீரெடுக்கும் ஒற்றை
முடிவிற்கு நானென்றும் கண்டதில்லை மறுப்பு இதுவரையில்
எதிர் முகங்களினின்று - அத்தனை சாமர்த்தியன் நீர் 
சமயத்தை கையாள்வதில்.

எடுத்த காரியத்தை கிடப்பில் போடாத எழுபதகவை கடந்த வாலிபன் நீரொருவரே;
உடை,நடை,பாவனையில் உமை மிஞ்சிட மன்மதனும் கோணுவான்; 
நீர் ஆறு முதல் அறுபது வரையாய் தோழர்கள் கூட்டும் மந்திரத்தின் ஒற்றை வார்த்தைதானும் நாங்கள் அறிகிலோம்.! 
கொடுப்புப் புன்னகையில் இதயங்களை கோதும் இளவேளே.

மனையாளை குழந்தையாய் கண்ட மணாளன் நீரே;
உன் முப்பெரும் தேவிய புத்திரிகளை கையாளும் கனகச்சித குயவனே; 
மருமக்கள் எம் பெருமதிப்பை பெற்றேகிய அம்மானே; 
பேரர் எட்டவேண்டிய இலக்கை வெகுமதிகளால் உற்சாகமூட்டும் காரியதரிசியே;
ஏற்ற இறக்கமின்றி உடன்பிறப்புகள், உறவுகளை நேசித்தபோதும் அன்பை பொய்முகத்தில் காட்டாது ஆழத்தே கண்டவர் நீரையா. 

தங்கள் சமயோசித புத்தி, பல்கலை ஞானமதை கிரகித்த
பல பொழுதுகளில் தங்கள் மருகனாய் புளகாங்கிதம் ஏகிநேன்; கூட
இன்னும் காதில் இரைகிறது தங்கள் அதிகாலை பாடும் தேவதுதி;
விடிந்தும் விடியாமலும் தாங்கள் அருந்தும் தேநீர் 10-ஆகஸ்டில் தற்கொலை செய்துகொண்டதாக அறிந்தேன் அங்கிள்.!

தன்மடியில் வாகைச்சாமரம் வீசி, பொன்னி வண்டுகள் தவழ தங்கள் சரீரம் துயிலும் அழகைக் காண்கிறாள் மட்டுத்தாய் - ஆக கவலையின்றி இளைப்பாறும் தேவஸ்தலத்தில் ஓய்ந்திருங்கள் மாமா.

நன்றி_
வரிகள்: ஶ்ரீ ஆரோன்
03/09/2021

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...