புதன், 20 ஆகஸ்ட், 2014

ஜாலம் ...

நீ
கூடவே இருக்கும்
பொழுதுகள் அத்தனையும்
கனவும், கற்பனையும் கனிந்து
பருவம் எய்திய மங்கையாய்
என் மனக்கண்முன்னே
கலை ஜாலம் ...

உன் சுடுவார்தைகள்...


பெண்ணே... 
உன் கோபம் சுமந்துவரும் 
சுடுவார்தைகள் 
ஒவ்வொன்றில்தானும் 
தலைகனத்த கவிவரிகள் 
தமிழிற்கு தலைவாரி பூச்சூடி 
அலங்கரித்து 
என்னையும் கவிதாசனாய்
அரங்கேற்றம் செய்கிறது... 
உன்னை கட்டியணைக்க 
தாமதிக்கும் அந்த நொடி வரையில் ! 

***


சிரஞ்சீவி காதல் !


தொடங்கும் காதல் எல்லாம் 
தொடும் முடிவு நிச்சயம் 
என்பது பொதுமையாய் இருக்க ! 

என் காதல் மட்டும் 
மாற்றாதாரமாய் 
உன் மடி தாங்கியே 
நீழுதடி மனையாளே... 


என்னவளால்>>>


''உன்னை காதலிக்கிறேன்''..
              (I Love you..)
என்ற ஒரு வார்த்தைக்கு
என் ஆயுளில்
ஒரு நாளிகையாச்சும்
கூடுமென்றாலும் 
இன்னளவும் 'இந்திரனின்' ஆயுளை
இருமடங்கால் மிஞ்சியிருப்பேன்
இவளால்..


கண்ணுக்குள் நீயிருக்க...


கண்ணுக்குள் நீயிருக்க...

கண்ணுறக்கம் காணலடி;
கண்ணீரும் ததும்பலடி  !

ஒத்தையா நான் தேடனுமே 
உள்ளிருந்து  நீ விழுந்தா ?! 

நீயில்லை என்ற பின்னே..


நீயில்லை என்ற பின்னே
நினைவென்னடி..?
நிஜமென்னடி..?
இனி எல்லாமே நிற்கதி தான் !

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

என் காதலியே..


உனக்குள் உறைந்த
உன் காதல்
அணுக்களிற்கு
உரைநடை எழுத வந்த
முதல் கவிஞன் நானடி
என் காதலியே..

கடிவாளமே !


உன் 
புன்னகைக்கு பொருளென்ன  
இனிய காதலா..?
இல்லை -
நான் சாதலா ?

ஒரு முறை 
சிறு பதிலொன்று 
சொல்லடி... 
எனை சமைத்த 
புனித கடிவாளமே !


தவிக்குதடி..


சிட்டான என் மனசு
உன் பட்டாம்பூச்சி கூண்டில்
தங்கிட தவிக்குதடி
பெண்ணே..!?


நீ வந்த பின்னே !

நித்திரைக்கும்
விளித்திரைக்கும்
உறவில்லயடி பெண்ணே..
என்னுளே நீ வந்த பின்னே !

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...