ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

நன்றி பாங்கினி

என்முதுகில் குத்துய 

நேசத்தின் துரோகங்கள்,

இவனினி மீண்டிடான் 

எனுமளவு நஷ்டங்கள், 

இப்படியோருத்தன் இனியில்லை 

என்பதாய் தோல்விகள், 

கோமணத்தோடு பித்தம்பிரண்டு 

வீதியிலலைவான் என்பதாய் சபிப்புகள், 

பலாயிரம் வசைபாடல் நாமங்கள்,

எண்ணிலொப்பா ஏமாற்றங்கள் நான்கண்டும்,

அத்தனைக்கும் சமகாலத்தில் 

எந்தோளோடு தோள்கொடுத்து 

தலைகுனிந்த என்பாங்கினியே.!! 

*

அதேயிடத்தில் இழிச்சொல்பேசிய 

நாவுகளத்தனையும் வாழ்த்துமட்டும் 

என்னை நான் நீதிநிரூபிக்க 

நீயின்றி சாதியமேது.? நன்றியடி.!

ஆதலாலே இப்பதாம் வருசத்தே 

உன்லட்சிய தேசத்தே - நீ

இராஜரீக போகங்காண 

என்னாலான சாத்தியம் கண்டேனின்று- கூட

என்முன்னின்று வழக்காடி 

நான்நீதிமானென் நிரூபித்த 

என் தேவாதி தேவனை

உமைப்போற்றுகிறேன்.

வரிகள்: ஸ்ரீ ஆரோன்

***

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...