என்முதுகில் குத்துய
நேசத்தின் துரோகங்கள்,
இவனினி மீண்டிடான்
எனுமளவு நஷ்டங்கள்,
இப்படியோருத்தன் இனியில்லை
என்பதாய் தோல்விகள்,
கோமணத்தோடு பித்தம்பிரண்டு
வீதியிலலைவான் என்பதாய் சபிப்புகள்,
பலாயிரம் வசைபாடல் நாமங்கள்,
எண்ணிலொப்பா ஏமாற்றங்கள் நான்கண்டும்,
அத்தனைக்கும் சமகாலத்தில்
எந்தோளோடு தோள்கொடுத்து
தலைகுனிந்த என்பாங்கினியே.!!
*
அதேயிடத்தில் இழிச்சொல்பேசிய
நாவுகளத்தனையும் வாழ்த்துமட்டும்
என்னை நான் நீதிநிரூபிக்க
நீயின்றி சாதியமேது.? நன்றியடி.!
ஆதலாலே இப்பதாம் வருசத்தே
உன்லட்சிய தேசத்தே - நீ
இராஜரீக போகங்காண
என்னாலான சாத்தியம் கண்டேனின்று- கூட
என்முன்னின்று வழக்காடி
நான்நீதிமானென் நிரூபித்த
என் தேவாதி தேவனை
உமைப்போற்றுகிறேன்.
வரிகள்: ஸ்ரீ ஆரோன்
***