தங்கத்தால்
ஆடைநெய்து
உலாவும் உவகையே
தொங்கட்டான்
அணிந்தவுனக்கு செஞ்சரிகை
புதுமைதான்
கண்களில் ஏக்கத்தோடு
முகநாடி
சோர்வதேனோ?
கூந்தல்
சூடிடப்பறித்த
மாமலரோடு தர்க்கந்தானே?
~~~~
வரிகள்: சிறி ஆரோன்
தங்கத்தால்
ஆடைநெய்து
உலாவும் உவகையே
தொங்கட்டான்
அணிந்தவுனக்கு செஞ்சரிகை
புதுமைதான்
கண்களில் ஏக்கத்தோடு
முகநாடி
சோர்வதேனோ?
கூந்தல்
சூடிடப்பறித்த
மாமலரோடு தர்க்கந்தானே?
~~~~
வரிகள்: சிறி ஆரோன்
~~~~~~~~~~~~~~~
வரிகள்: சிறி ஆரோன்
முழங்கால்கள் வலிக்கும் நடை நிறுத்தாதே!
நெஞ்சம் படபடக்கும் நோக்கில் விலகாதே!
கண்கள் இருண்டு கலங்கிடும் இமைமூடாதே!
தேகமிதுதான் சோர்வுறும் இட்சிய தாகமல்ல.
*
உன்னில் குறைகண்டு இவ்வுலகம் புறம்பேதள்ளும்
இலக்கை மெருகேற்றி நோக்கில் குறியாயிரு
வியர்வை அதுவொன்றுதான் விலைகணிக்கப்படாத செல்வம்
சகலசம்பிரதாயங்களும் உன்கால்கட்டும் வலுகவனம் சிக்கிடாதே!
*
பின்புறமிருந்து தடுக்கிவிட புன்னகைமுகங்கள் பலவுண்டு
தோல்வியில் துவளாமல் துணிந்து நில்
வெற்றிச் சுவையது வலியவனுக்கு மட்டுமன்றே!
விடாமுயற்சியோடு ஓடும் தோல்வியின் தோழனுக்குமே!
***
வரிகள்: சிறி ஆரோன்
இவ்விருகோடுகள்
பற்றிச் செல்லும் ஏழைகளின்
விரைவுச் சொகுசுப்பயணம்
*
ஓராயிரம்
கதைகள் சுமந்து
நெடுந்தூரம் நீடிய கூச்சலிட்டு
*
ஒட்டி உறவாடாமலும்
வெற்றிகாணும் இருவேறு
தடங்களின் இரகசியம் இதுவே
***
வரிகள்: சிறி ஆரோன்
மட்டூர், ஈழதேசம்
(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...