சனி, 19 அக்டோபர், 2024

தேர்தல் (ஆனந்தக் களிப்பு)


ஆளுமை வித்தகர் இன்று - தாம் 

அள்ளிக்கொ டுத்தேகை கும்பிடு போட்டுச்

சூளுரை தாண்டியே பாதம் - வீழ்ந்த

சூட்சுமத் தைக்காண்பார் யாரேனும் உண்டோ?

 ~~~~~~****~~~~~~~

வரிகள்: சிறி அருணன்


#சிந்து_பாடுக 1

சிந்துப் பாடல்களின் இலக்கணங்கள் முனைவர் இரா.திருமுகன் அவர்களின் "சிந்துப் பாவியல் " நூலை அடியொற்றியும், என் சொந்தக் கற்றலைக் கொண்டும் கூறப்படுகின்றன.

                           சிந்துப் பாடுக - 1

                           *******************

                          (ஆனந்தக் களிப்பு)

நாளுந்த மிழ்ப்படிப் பாயே★- வாழ்வில்

நன்மைகள் யாவும டைந்திடு வாயே★

ஆளும்நி லையினில் சேர்ப்போம்★ - நம்

அன்னைத்த மிழ்தனை ஒன்றாகிக் காப்போம்★!

                             பாவலர் மா.வரதராசன்

கருத்தூன்றுக :

மேற்கண்ட பாடல் வகை "ஆனந்தக் களிப்பு "ஆகும். 

மகாகவி பாரதியாரின் புகழ்பெற்ற கீர்த்தனைகளான

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்,

தீராத விளையாட்டுப் பிள்ளை,

சித்தர் பாடலான, 

நந்தவ னத்திலோர் ஆண்டி

போன்றவை இவ்வகைப் பாடல்களே. திரைப்பாடலான

கல்லிலே கலைவண்ணம் கண்டான், 

என்ற பாடலும் இவ்வகையே.

***

சிந்துப் பாடல்களை யாப்பிலக்கணத்தின்படி தேமா, புளிமா கொண்டு வகைப்படுத்த இயலாது. இசைப்பாடலான இவற்றைப் பாடிப் பார்த்து விளங்கிப் பின் எழுத வேண்டும்.


மேற்கண்ட பாடலில் ஒவ்வொரு சீரிலும் மூன்று எழுத்துகள் (ஒற்று நீக்கி) உள்ளன.

(நா ளு த) (மி ப டி) (போ மே ★) 

3,8 ஆம்சீர்கள் இரண்டெழுத்துகள் இருந்தாலும் மூன்றாவது எழுத்துக்குப் பதில் அந்த இடத்தில் நீண்டு இசைக்கும். நீண்டிசைக்கும் எழுத்து ★குறியிட்டுள்ளதைக் காண்க. (பாடலை எழுதும் போது குறியிடத் தேவையில்லை. புரிவதற்காகப் போட்டுள்ளேன்.)

நான்காவது சீர் சிறுகோடிட்டுத் தனிச் சொல்லாக வரும். பெரும்பாலும் அது ஓரசையாகவே வரும். (நம்) அல்லது (வாழ்வில்) போல தேமாச் சீர்களாக வரும்.

இருகுறில் இணைந்த சீரால் அடி தொடங்காது. அடிகளின் இடையிலும் அவ்வாறு வாராதிருத்தல் நலம். நெடில், நெடிலொற்று, குறிலொற்று இப்படியான சீர்களே வரும்.

பொது இலக்கணம் :

மேற்கண்ட பாடலின்படி...

* ஓரடிக்கு மூன்றெழுத்துச் சீர்கள் எட்டு வரவேண்டும்

* நாளுந்த என்பது முதல் வாயே என்பது வரை ஓரடி. 

ஆளும்நி என்பது முதல் காப்போம் என்பது வரை மற்றோரடி.

* இரண்டடிகளும் எதுகையால் இணைந்து (நாளும், ஆளும்)

* முதற்சீரும் ஐந்தாம் சீரும் மோனையால் இணைந்து (நா, ந) (ஆ,அ)

* அடிகளின் மூன்றாம் சீரும், எட்டாம் சீரும் இயைபு பெற்று (பாயே, வாயே)

(சேர்ப்போம், காப்போம்) ,

இந்த இலக்கணப்படி வருவது "ஆனந்தக் களிப்பு " ஆகும்.

இவ்வகையான பாடல் ஒன்றை #தேர்தல் பற்றிய கருத்தமைய வரும்  வெள்ளிக்கிழமைக்குள் இப்பதிவின் கருத்துப் பகுதியில் (Coment) மட்டும் பதியவும்.

ஒருவர் ஒரு பாடலை மட்டுமே பதியவும். மற்ற பாடல்களைச் செம்மைப்படுத்த நேரமொதுக்க உதவியாகஇருக்கும்.

https://youtu.be/HiJKh5eh4AM


குறள்வெண் செந்துறை


தீவினை நீக்கிட 

தேவரீர் வாருமே

நாவினைக் கூட்டியே 

நானழைத் தேனே!

~~~~~~~***~~~~~~

வரிகள்: சிறி அருணன்


*********-***************

“வெள்ளைக் கொம்பனை விரும்பித் தொழுதால்

துள்ளிப் பறந்து துயர மோடுமே!’’

 (பைந்தமிழ்ச்செம்மல் நிர்மலா சிவராசசிங்கம்)

★★★

கருத்தூன்றுக.

****************

* ஒழுகிய ஓசையும், விழுமிய பொருளும் வெண்செந்துறை யாதலால், கடவுளரின் அருள்வேண்டிப் பாடுவதே பொருத்தமாகும்.

அங்ஙனம் வராத பாடல்கள் வெண்பாவின் இனமாகிய "குறட்டாழிசை "யாகும். (வெண்பாவின் இலக்கணங்கள் தவறி வருபவையும் "வெண்டாழிசை "யாகும்.)

இரண்டிரண்டு அடிகளாக எத்தனை அடிகளாலும் குறள்வெண்செந்துறை எழுதலாம்.

பொது இலக்கணம்

***********************

> நான்கு சீர்கள் கொண்ட இரண்டு அடிகளைப் பெற்று

> ஈரடியும் ஓரெதுகை பெற்று,

> ஒன்றாம் மூன்றாம் சீர்களில் (பொழிப்பு மோனை.) மோனை பெற்று,

> இயற்சீர்களால், (தேமா, புளிமா, கூவிளம், கருவிளம்)

> ஈற்றடி ஏகாரத்தில் முடிவது *குறள்வெண் செந்துறை* ஆகும்.

விழுமிய பொருளில்,(இறைபாடல்) குறள்வெண்செந்துறைப் பாடல் ஒன்றைக் கருத்துப் பகுதியில் எழுதுமாறு வேண்டுகிறேன். 

வாழ்த்துகளுடன் எனது ஆசான்

பைந்தமிழரசு பாவலர் மா. வரதராசன் அவர்களது பாடவகுப்பு தொகுப்பிலிருந்து

வியாழன், 17 அக்டோபர், 2024

தாயின் மடியில்


தாயின் மடியில்

தரணியைக் 

கண்டேன்


அன்பும் 

அரவணைப்பும்

அவளின் பரிபாசை


என்னழுகை

நொடிகள்தானே

அவளுக்கு மரணவலி


தானுறங்கும் நேரங்கூட 

எண்ணமெலாம் 

என்னில்தானே!


சுகமாய் 

நான்தூங்க

என்சுமை தாங்கிடுவாள்


சுகயீனம் 

என்னிலென்றால்

சுகபோகம் வெறுத்திடுவாள்


கண்ணே.. கலைமானே..

செல்லப்பெயர்கள்

கோடிதந்தாள்


கட்டி 

அணைக்கையிலே

உச்சிமுகர்ந்து உருகிடுவாள்


உள்ளத்தில் 

உயர்த்திவைத்து

தன்னுலகம் என்னில்காண்பாள்


என்சீவனுள்ள 

காலமெலாம்

தாயவளைத் தாங்கிடுவேன்

~~~~***~~~~

வரிகள்: சிறி ஆரோன்



ஒரு நாயகன்

 

ஒரு 
நாயகனின் எழுர்ச்சி 
அவன் குடும்பத்தை
அதன் சமூகத்தையும் 
உலுக்கும்!

ஆயிரம் 
அவமானங்களில்
முகம் கறுத்து
புதிய மனிதர்கள் 
புதிய மொழிகள் காணும்

திருப்திப்படாத 
நாட்கள் மாட்டி
அடுத்தது என்ன ?
என்ற கேள்விக்குள் 
தினந்தினம் சிக்கித் தவிக்கும்

உதிக்கும் காலை
எதிர்பார்ப்புடனும்
முடியும் நாளன்று
அடச்சே..! 
என்றே இருளும்

இது அதுவென்று
மூளை சொல்லும் 
திட்டங்களை
அனுபவம் திட்டித் தீர்க்கும்!

கால்நடக்க 
நூரம் விளங்காது
கண்பார்க்கும் காட்சிகள் 
புலப்படாது

ஒன்றுவிடாது
மனசு புலம்பித் தீர்க்கும்
முடிவு எட்டியிராது
இறுதியில்

எதையும் நம்பாதே
என்று சொல்லும் 
கடந்தகாலம்
வலியின் மிகுதியால்

இழக்க 
இனி எதுவுமில்லையே
என்று எடுத்துச்
சொல்லும் நிதானம்

தொட்டது 
தொண்ணுறுக்கும்
இலவசமாய் 
ஆலோசனை சொல்ல
யாருமில்லாத வெகுதூரம்

சொந்தப் புத்தி
கூர்மையாகி
புண்ணியமில்லா காரியமும்
படிக்கற்கள் ஆகிடும்

ஓடியோடி உச்சியில்
ஒளிவிளக்காய் 
மிளிரும் போது
ஒதுக்கிவைத்த 
உறவுகளும்
உப்புக்கு சப்பாய்
பெருமை பேசும்

என்ன வாழ்க்கைடா
சாமியிது 
அரசியலில்
இதெல்லாம் சாதாரணம்
என்பதுபோல

கைக்கூ - செயல் வீரர்


ஒருகோடு நகர்கிறது
கண்ணுக்கு எட்டிய தூரம்வரை
செயல் வீரராய்!

~~~~~~***~~~~~~

வரிகள்: சிறி ஆரோன்

தன்மானம் - அந்தாதிப்பா


தன்மானம் 

தமிழின

அடையாளக் 

கர்ச்சனை!


கர்ச்சனையிது 

விடுதலைக்கும் 

அடிமைக்குமான 

நடுக்கோடு


நடுக்கோட்டில் 

நிற்பவனை

உற்சாகமூட்டும் 

வலிமை


வலிமை 

அற்பமாய் 

எண்ணப்பட்டன் 

ஆயுதம்


ஆயுதம் 

பாதிதான் 

மீதியது 

இலட்சியம்


இலட்சியந் 

துணிந்தோரை

மன்னராக்கும் 

மகுடச்சொல்


மகுடச்சொல் 

அதுவேதான் 

தீண்டாமை 

ஒழிந்தது


ஒழிந்த 

சாதியம் 

உதவாதினி 

ஒருபோதும்


ஒருபோதும் 

வெல்வதில்லை 

அரிதார 

நாயகர்கள்


நாயகர்கள் 

நீதிநின்றால்

தோற்றதில்லை 

தன்மானம்!


~~~~***~~~~

வரிகள்: சிறி ஆரோன்

புதன், 16 அக்டோபர், 2024

தன்மானம்


அமைதியும் 

பொறுமையும்

செயலிழக்கும் புள்ளியிதுவே!


முதுகில் 

குத்தும்போது

மூர்க்கந்தரும் சொல்லுமிது


கடந்துபோக 

நினைப்பவனை

சீண்டிவிடும் சினக்கொம்பிது


அற்பமாய் 

எண்ணப்பட்டவன்

சாதிக்கும் சாவியுமென்பேன்


உலகத்தின் 

கொடுங்கோல்களை

பிளந்துபோட்ட சின்னச்சிராய்


தன்னினம் 

தன்மொழி

என்றானவனது மகுடவார்த்தை


தீண்டாமை 

கொளுத்தி

சாதியமொழித்த சொல்லுந்தானே!


குலத்திலல்ல 

மூர்க்கம்

அதுமூழும்குணமான இவ்ருப்பில்தான்


வேசமிடும் 

கபடதாரிகள்

அரிதாரமுகம் கிழிக்குமிதுவே!


நானெனும் 

தமிழனின்

ஆயுதச்சொல்லான தன்மானம்

~~~~***~~~~

வரிகள்: சிறி ஆரோன்

செவ்வாய், 15 அக்டோபர், 2024

சுயகட்டுப்பாடு

காதல் கண்டு 

கூத்தாடும் மனசு


கலவியும் கல்வியும் 

ஒருசேரப் புதுசே!


இறுக்கி மனசைப் 

பதப்படுத்தவே உயர்ச்சி

~~~~~***~~~~~

வரிகள் சிறி ஆரோன்

திங்கள், 14 அக்டோபர், 2024

இணையம்


இது மனிதனை 

அதிகாரப்படுத்தும் 

மனிதனின் செல்லக்குழந்தை


தீதும் நன்றும்

இரண்டறக்கலந்த 

அறுக்கமுடியா மாயவலை


சடத்தை உயிர்க்கவும்

உயிர்களை காவுகொள்ளவும்

இதற்கு இயலுமானதே!


தூரத்தைக் குறுக்கி

நேரத்தைச் சுருக்கி

காலத்தைக் கடந்தும்

இது நகரும்


கடந்ததை மீட்டி

வருவதை கணித்து

கணப்பொழுதில் 

உலகை இணைக்கும் 

சாமர்த்தியம் இதுவே!


உள்ளங்கையில் நெல்லிக்கனி 

இனி அப்பட்டம்,

சோற்றில் பூசணிக்காயை 

சுலபமாய் மறைக்கலாம்


நமைத் தாங்கிச்சுற்றிய 

பூமியிது நம்கைக்குள் 

அடங்கும் மந்திரமே 

இணையமெனும் தந்திரம்.


~~~~~~***~~~~~~

வரிகள்: சிறி ஆரோன்



பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...