தாயின் மடியில்
தரணியைக்
கண்டேன்
அன்பும்
அரவணைப்பும்
அவளின் பரிபாசை
என்னழுகை
நொடிகள்தானே
அவளுக்கு மரணவலி
தானுறங்கும் நேரங்கூட
எண்ணமெலாம்
என்னில்தானே!
சுகமாய்
நான்தூங்க
என்சுமை தாங்கிடுவாள்
சுகயீனம்
என்னிலென்றால்
சுகபோகம் வெறுத்திடுவாள்
கண்ணே.. கலைமானே..
செல்லப்பெயர்கள்
கோடிதந்தாள்
கட்டி
அணைக்கையிலே
உச்சிமுகர்ந்து உருகிடுவாள்
உள்ளத்தில்
உயர்த்திவைத்து
தன்னுலகம் என்னில்காண்பாள்
என்சீவனுள்ள
காலமெலாம்
தாயவளைத் தாங்கிடுவேன்
~~~~***~~~~
வரிகள்: சிறி ஆரோன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக