சனி, 23 மே, 2020

அரசியல் வார்த்தைகள்.!

அதுதான் இன்றைய அரசியல்..
நம் தேசத்தின் பங்காளர்களை எப்படி அவதூறான வார்த்தைகளில் அழைக்க முடியும்? 

ஆதலால் அகராதியை கிண்டிக்கிளறி; ஊடகங்களை ஊக்கப்படுத்தி; புதிய கல்விக்கொள்கையிலும் இணைத்து விடுவோம்.!

இராவணமகாராஜா கேட்டவனானார் இன்றைய புராணத்தில்; ஆனால் நம்முன்னோர் அவரை கடவுளாவே கண்டனர் என்பது வரலாறு.!

ஆக..நாளைய வரலாறு
இன்றைய திருடர்களை
கதாநாயகர்கள் ஆக்க.. 
இப்போதே களமிறங்கிவிட்டதே
இதன் நிதர்சனம்!!!

வள்ளுவன்குறள்தனில்..
"கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்"
என்கிறது..

இதுகூறுவதாவது "ஒருகெட்டவர் பற்றி பேசும்போது வசீகரமான பண்புகளுடன் சொல்லி அவரை பிடிக்காதோரும் அவர்பற்றி நல்ல மனிதர் என விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும்."

நன்றி
வரிகள் ஸ்ரீ ஆரோன்

நேர்மையின் சகாயன்/ம்.!

இச் சமகாலத்தில்..
ஓர் நேர்மையின் அறத்தமிழர்
நிசத் தமிழ்த்தேசிகன் - இவர்
இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாய்
மக்கள்பாதை கண்ட செம்மல்.!

"பாண்டியனின்
நெறிதவறிய மதுரை"
அதுதனில் இவன்வழி
நேர்மையது நின்று வழுவாது - காண
பார் நிமிர்ந்து பார்க்கும் வண்ணம்
பாரதத்தின் பெருமை சூடிய
நற்பேர் கொண்டோன்.!

"லஞ்சம் தவிர்த்து..
நெஞ்சம் நிமிர்த்து" - என்று அரியாசனத்தில் பின்புலத்தே
மட்டுமில்லை; புத்தியின் மத்தியில்
ஆழமாய் புதைத்து தேசத்தின்
மத்தியையும்; மானிலத்தையும்
அசைத்த கொள்கை வேந்தரிவர்..
மக்கள் பழிகொள்ளா நேயன்.!

நேர்மையின் துணை காண..
"தண்ணியில்லா காடு காணவும்
தயங்கேன்" என்றுரைத்து..!!
கடவுளிற்கு மட்டும் அஞ்சித்தன்..
23_வருடப் பணியில் 24 தடவைகள்
பணி மாற்றமும் கண்டு - தன்
புனிதங்காத்த கறைபடாத
கரங்களின் அபூர்வி.!

இவரோர்..
வீரிய தாய்மொழிப் பற்றாளன்;
தாயகம் சுரண்டுவரின் கடுங்கோபி;
தேச நாசிக்களின் எதிர்ப்போராளி;
மரபு விவசாயத்தின் பசுங்காவலன்;
குருதிக் கொடையில் பாரிமைந்தன்;
சட்டதின் ஓட்டைகளில் ஓடவல்ல
சுண்டெலிகள் கஜானாக்களில்
மணியடித்த கண்ணியப் புலிப்பேறு.!

நன்றி_
வரிகள் ஸ்ரீ ஆரோன்

வெள்ளி, 22 மே, 2020

தொப்பிள்க் கொடியறுந்து

தொப்பிள்க் கொடியறுந்து
தேசமெங்கும் தாயிப் பெண்டீர்
குருதியால் நிறைகிறது சாபம்.!

யாரைக் குற்றம் சொல்ல?
இது யார் குற்றம்?    
ஓநாய்களும்; நரிகளும்
ஆளும் தேசமிதில்.!

அன்று - கானான் தேசம்
தேடிய பயணம் போல்..
இன்று-இந்திய தேசமதில்
ஆயிரமாயிரம் மைல்கள்
சொந்ததேசம் சேர
நடைபயணம்..!

யாரைக் குற்றம் சொல்ல?
இது யார் குற்றம்?   
ஓநாய்களும்; ஊழை நரிகளும்
ஆளும் தேசமிதில்.!

நன்றி_
வரிகள் ஸ்ரீ ஆரோன் 
www.mytamilpoet.blogspot.com 

ஓநாய்களும்; ஊழை நரிகளும்.!

யார்கடிய; யாரைக்கடிய?      
யார்மேல் குற்றம்?
ஓநாய்களும்; ஊழை நரிகளும்
ஆளும் தேசமிதில்!

தொப்பிள்க் கொடியறுந்து
தேசமெங்கும் தாயிப் பெண்டீர்
குருதியால் நிறைகிறது சாபம்
யார்கடிய; யார் குற்றமிது?

ஆற்றாமையால்..
அங்கோர் பச்சிளஞ்சிறுமி 
பதை பதைத்து கருகுகிறாள்.!
குரூர பிசாசுதாம் எரியூட்டி - சட்டமிங்கு
பணம் நீட்டுதிங்கு உசிருக்கு ஈடாய்.!
யார்கடிய; யார் குற்றமிது?

காமவக்கிரச் சாத்தான்கள்
சதைப் பிண்டந்தனில் 
சலனங் கொண்டு - பாலகன்
என்ற சிந்தையற்று - சினை
சிதைத்துச் சீரழிக்கிறான்.!
யாரைக்கடிய; யார் குற்றமிது?

"குடி குடியைக் கெடுக்கும்" என்ற
வார்த்தைக் கவனம் சொல்லி - வரி
ஞானமற்ற வறுமைச் சுதேசிதமை
வஞ்சித்து வறுகும் எமராசன்கள் - கூடி
தேசத்தை ஏலத்தில் கூவித் - தம்
திருவாயில் ஏப்பமும்; எம்காதில் பூவும்.!
யார்கடிய; யாரைக்கடிய?

விபிலியம் சொல்லும்
கி.மு_வில் இஸ்ரவேலரின்
"கானான் தேசம் தேடிய பயணம்"
இன்று.. கண்முன்னே மீழுகிறது.!
இந்திய தேசமதில் ஆயிரமாயிரம்
மைல்கள் சொந்ததேசம் காண நடை..
யாரைக் கடிய ; யார் குற்றமிது?

குற்றம் கடிந்தென்ன பயனிங்கு?
"துப்பினால் துடைத்துக் கொள்வேன்"
என்று பெருமை பேசும்
மாந்தரெலாம் தர்பாரில் இயல்பாய்
அரசியல் கொண்டாட - நாம்
யாரைக்கடிய; யார்மேல் குற்றம்?
ஓநாய்களும்; ஊழை நரிகளும்
ஆளும் தேசமிதில்!

கண்ணீருடன் நன்றி_
வரிகள் ஸ்ரீ ஆரோன் 

வியாழன், 21 மே, 2020

நீ யாராக இருக்கிறாய்?

"தானுண்டு தன்வீடு உண்டு" - என்று
சீவிப்பவன் ஆறறிவுற்ற விலங்கு; மாற்றானை தானாகக் கருதி கைக்கெட்டிய உதவி செய்து வாழ்பவன் மனிதன்.
                           ⭕
தாயை, தகப்பனை மதிப்பவன் உற்றபிள்ளை - மாறாக
அவமதிப்பவன் கேட்டின்பிள்ளை.
                           ⭕
தாய்மொழி பேசியதை கவுரவமாய் காண்பவன் உணர்வாளன்; தாய்மொழி தூற்றி, பிறமொழி போற்றுபவன் மதியிழந்த பிதற்றாளன்.
                           ⭕
தேசத்தை மதித்து..
அதுதன் சுரண்டலின் எதிர்விசைகாட்டி
தேச வளர்ச்சிக்கு போராடுகிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன் - மாறாய்
தேசத்தை அவதூறுபேசி..
குறை காண்பவன் பொல்லாங்கன்.
                          ⭕
தேசத்து ஜனங்கள்
தன் சொந்தங்கள், அவர் நலனுக்கு உழைப்பவன் ஜீவிக்கும் மகான் - எதிராய்
மக்களை குறைகூறி வஞ்சிப்பவன் சாபத்தின் பிதிர்.
                         ⭕
தன் ஜனங்களென்று..
ஒற்றுபட வழிநடத்துபவன்
கீர்த்தியின் தலைவன் - இலாது
பிரிவினை கூட்டி சுயலாபம் ஈட்டுபவன் சாத்தானியகூலி.
                        ⭕
இப்பொழுது.. 
உன் இருதயத்தைகேள்;
நீ யாராக இருக்கிறாய்?
தயவாய்..
ஒரு மனிதனாகவாவது
வாழ முடிவெடு!!
                    ⭕⭕⭕
நன்றி_
வரிகள் ஸ்ரீ ஆரோன் 

புதன், 20 மே, 2020

அன்பு

அன்பு பழகுங்கள் - அது
மன்னிக்கவும் மறக்கவும்
சொல்லித்தரும்.

அன்பு காட்டுங்கள் - அது
கோபமற்ற பொறுமையின்
சுபாவம் கொணரும்.

அன்பு பேசுங்கள் - அது
கேட்டின் பாலிச்சை சாபம்
ஒழித்துவிடும்.

அன்பு நுகருங்கள் - அது
பிறர்க்கு கொடுக்க உதவும்
கரங்களாகும்.

அன்பு உணருங்கள் - அது
மனதை மகிழ்ச்சியில்
களிகூரும்.

அன்பு எண்ணுங்கள் - அது
வாழ்க்கயை அளவுகடந்து
செழிப்பிக்கும்.

அன்பு படியுங்கள் - அது
குற்றமேயிராது ஞானத்தில்
தெளிவுறும்.

அன்பு புரியுங்கள் - அது
இன, மத, சாதி மொழி வேற்றுமை
அற்ற மனிதனாக்கும்.

அன்பு அறியுங்கள் - அது
பிறரிலும் உன்னைக் காட்டும் - ஆக
உனக்குள்ளும் தெய்வம் வசிக்கும்.

அன்புதான்.. 
சிவனையும்; இயேசுவையும்; நபிகளையும் நமக்கு தெய்வமாய் கண்டது; ஆதலால் அன்பு கூருங்கள் இன்னும் அதிகமாய்.

நன்றி_
#வரிகள் ஸ்ரீ ஆரோன் 
#www.mytamilpoet.blogspot.com 

திருவள்ளுவர் சமயம் எது?

திருவள்ளுவர் சமயம் எது? 

✴️இதை அவரின் திருக்குறள் கொண்டு யாரும் அறிவது கடினமாக காரணம், திருக்குறள் ஒரு உலகப் பொதுமறை!

✴️"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்!" என்று தமிழகத்தில் வாழ்ந்த ஆரியர்களின் நால்வருணம் பற்றிய தீண்டாமை சாதியத்தை வள்ளுவர் அன்றே முற்றிலும் புறம் தள்ளினார் என்பது வெளிப்படை.

✴️'அந்தணன்' என்ற சொல்லை ஆரியர்கள் 'பிராமணன்' என்று அருத்தம் சொல்ல; காலத்தில் வாழ்ந்த திருவள்ளுவர், 'அந்தணன்' என்ற தகுதி பிறப்பால் வருவதல்ல அவனது கல்வியால், ஞானத்தால் வருவது என்றார்; 'அந்தணன் என்போன் அறவோன்! மற்றெல்லா உயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான்' என்று குறளை இயற்றினார்.

✴️அதனால்தான் திருவள்ளுவரை எந்த மதமாகவும் வரையறை செய்யாது 1964ஆம் ஆண்டில் உருவம் கொடுக்கப்பட்டது #கே.ஆர். வேணுகோபால் சர்மா அவர்களால் வரையப்பெற்ற படத்தையே தமிழக அரசு திருவள்ளுவரின் அதிகாரபூர்வ ஓவியமாக அங்கீகரித்து.

✴️இவர் 17.12.1908 இல் சேலம் மாவட்டத்தில் பிறந்த தமிழர் அத்தோடு இவர்தான் #தமிழ்த்தாய்  என்னும் கற்பனைக்கு உருவத்தை வரைந்தவராவார்.

✴️1964 ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதியன்று தமிழக சட்டமன்றத்தில், அப்போதைய குடியரசு துணைத்தலைவரான திரு. ஜாஹிர் ஹுசேன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

நன்றி_
#அகிலவுலக தமிழர் மையம் 
#தொகுப்பு ஸ்ரீ ஆரோன் 

தமிழினப் போராளியின் காதல்/லி..!


காத்திருந்தே..

என் காலங்கள் கண்ணீரோடு
கரைந்து போயின..

நேற்றிருந்த..
என் நினைவுகள் 
நெஞ்சோடு மட்கிக் கலந்தாயின !

பூத்திருந்த..
நானிங்கு பூவாகவே
வாடி நிற்கிறேன் !

போய்த்திரும்ப
நீ மட்டும் ஏனோ - போகும்போதே
மறந்து போனாயோ????

#www.mytamilpoet.blogspot.com
#வரிகள் ஸ்ரீ ஆரோன் 

ஒரு ஊருல.. ஒரு ராஜா..

நோபல்கண்ட கவுரவம்


இருட்டு
தேசத்திலிருந்து
உலகத்தாரால் சபிக்கப்பட்ட
ஓர் இனத்தின் விடிவுக்காய்..

சுகபோக வாழ்க்கயை தியாகம் செய்த
"கறுப்பினத்தின் பிதாமகன்";
"சமவுரிமைச் செம்மல்";
"பட்டைதீட்டிய ஒரே மனிதவைரம்";
நோபல்கண்ட கவுரவம் - அது
நெல்சன் மண்டேலா.!!

நன்றி_
#வரிகள் ஸ்ரீ ஆரோன் #www.mytamilpoet.blogspot.com 

கிராமத்து விவசாயி; பங்குனி 2020_சிங்காரச் சென்னையில்.!

விடிகிறபொழுது..

சிறகடிக்கும் சத்தம்

காதுகளில் கரகோசிக்க..


என் கண்முன்னே

தேவதை அசைகிறாள் - வர்ணமாய்

அதில் சாமரம் வீசும் இளந்தென்றல்

உரசிப்போகிறது என்னை..


தேவதை அவளழகு..

காவியில்; தாய்மையின் அன்பு

வெண்மையில்; பக்தியின் அமைதி

பச்சையில்; பசுமையின் செழிப்பு

நடுவே சுழலும் சக்கரம்; நீதியில் ஏற்றத் தாழ்வற்ற சமநிலை

என்பேன்.!


அவளை கைகூப்பியபடி எழுந்தேன்

ஆனந்தக் கண்ணீர்

கன்னத்தை தழுவ;

கால்களில் செருப்பு

காதுகளை இழந்திருந்தது !

வயிற்றில் எரிச்சல் - அது

அடக்கமுடிலவில்லை..!


ஒருவிசை..

கண்களை மூடி..லேசாக விழித்தேன்.!

தலையணையாய் - ஒரு

கிழிசலான சுருக்குப்பை.!

வீதியோரதில் நான்.!

துணியால் வாயைமூடிக்கொண்டு சிலர் !!

அனாதையாய் என்தேசம் !!


நிசம் புரியாது

உதடு புலம்புகிறது

"எங்கிருக்கின்றேன் ????"

ஞானத்தில் தெளிவில்லை

அப்போது புத்தி பேசுகிறது...


"இந்த தேசத்தின் விவசாயி நீ..

வங்கிக்கடனில் மீளாது;

நிலங்களை இழந்து;

நீதிதேடிச் சென்னையில்

நீதிமன்றின் சாலையோரம்

சிலவாரங்களில் யாசகனாய்

முத்திரைபதிந்து நிற்கிறாய் - கூட


திடீர் மயானமான - நகர்.!

மயக்கத்தில் எழுந்து - நீ.!

மரணத்தில் விளிம்பில் - நான்.!

உன்பசிக்கு வயது- மூன்று நாள்

இன்றோடு" - என்றது


இன்னொரு சத்தம்.. "ஐயா"

எதிரில் காவலர் "ஐயா சாப்பிடுங்கள்"

நான் "நன்றி சாமி, எப்போது விடியும்"

பின்_கைவிரித்த அவர் "ஏழரை" - என்றார்

"ஆம்!! ஏழரைதன் என்றேன்"

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...