சனி, 23 மே, 2020
அரசியல் வார்த்தைகள்.!
நேர்மையின் சகாயன்/ம்.!
வெள்ளி, 22 மே, 2020
தொப்பிள்க் கொடியறுந்து
ஓநாய்களும்; ஊழை நரிகளும்.!
வியாழன், 21 மே, 2020
நீ யாராக இருக்கிறாய்?
புதன், 20 மே, 2020
அன்பு
திருவள்ளுவர் சமயம் எது?
தமிழினப் போராளியின் காதல்/லி..!
காத்திருந்தே..
என் காலங்கள் கண்ணீரோடு
கரைந்து போயின..
நேற்றிருந்த..
என் நினைவுகள்
நெஞ்சோடு மட்கிக் கலந்தாயின !
பூத்திருந்த..
நானிங்கு பூவாகவே
வாடி நிற்கிறேன் !
போய்த்திரும்ப
நீ மட்டும் ஏனோ - போகும்போதே
மறந்து போனாயோ????
#www.mytamilpoet.blogspot.com
#வரிகள் ஸ்ரீ ஆரோன்
நோபல்கண்ட கவுரவம்
இருட்டு
தேசத்திலிருந்து
உலகத்தாரால் சபிக்கப்பட்ட
ஓர் இனத்தின் விடிவுக்காய்..
சுகபோக வாழ்க்கயை தியாகம் செய்த
"கறுப்பினத்தின் பிதாமகன்";
"சமவுரிமைச் செம்மல்";
"பட்டைதீட்டிய ஒரே மனிதவைரம்";
நோபல்கண்ட கவுரவம் - அது
நெல்சன் மண்டேலா.!!
நன்றி_
#வரிகள் ஸ்ரீ ஆரோன் #www.mytamilpoet.blogspot.com
கிராமத்து விவசாயி; பங்குனி 2020_சிங்காரச் சென்னையில்.!
விடிகிறபொழுது..
சிறகடிக்கும் சத்தம்
காதுகளில் கரகோசிக்க..
என் கண்முன்னே
தேவதை அசைகிறாள் - வர்ணமாய்
அதில் சாமரம் வீசும் இளந்தென்றல்
உரசிப்போகிறது என்னை..
தேவதை அவளழகு..
காவியில்; தாய்மையின் அன்பு
வெண்மையில்; பக்தியின் அமைதி
பச்சையில்; பசுமையின் செழிப்பு
நடுவே சுழலும் சக்கரம்; நீதியில் ஏற்றத் தாழ்வற்ற சமநிலை
என்பேன்.!
அவளை கைகூப்பியபடி எழுந்தேன்
ஆனந்தக் கண்ணீர்
கன்னத்தை தழுவ;
கால்களில் செருப்பு
காதுகளை இழந்திருந்தது !
வயிற்றில் எரிச்சல் - அது
அடக்கமுடிலவில்லை..!
ஒருவிசை..
கண்களை மூடி..லேசாக விழித்தேன்.!
தலையணையாய் - ஒரு
கிழிசலான சுருக்குப்பை.!
வீதியோரதில் நான்.!
துணியால் வாயைமூடிக்கொண்டு சிலர் !!
அனாதையாய் என்தேசம் !!
நிசம் புரியாது
உதடு புலம்புகிறது
"எங்கிருக்கின்றேன் ????"
ஞானத்தில் தெளிவில்லை
அப்போது புத்தி பேசுகிறது...
"இந்த தேசத்தின் விவசாயி நீ..
வங்கிக்கடனில் மீளாது;
நிலங்களை இழந்து;
நீதிதேடிச் சென்னையில்
நீதிமன்றின் சாலையோரம்
சிலவாரங்களில் யாசகனாய்
முத்திரைபதிந்து நிற்கிறாய் - கூட
திடீர் மயானமான - நகர்.!
மயக்கத்தில் எழுந்து - நீ.!
மரணத்தில் விளிம்பில் - நான்.!
உன்பசிக்கு வயது- மூன்று நாள்
இன்றோடு" - என்றது
இன்னொரு சத்தம்.. "ஐயா"
எதிரில் காவலர் "ஐயா சாப்பிடுங்கள்"
நான் "நன்றி சாமி, எப்போது விடியும்"
பின்_கைவிரித்த அவர் "ஏழரை" - என்றார்
"ஆம்!! ஏழரைதன் என்றேன்"
பழுதிலா வாழ்வே பலம்.!
(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...

-
தங்கத்தில் சரிகை நெய்து என்மேனி போர்த்துமையா, வெள்ளியில் தட்டெடுத்து என்னை நீ தாங்குமையா என்றெனை ஒருக்காலுங்கேளா இல்லாட்டியே. * கூழோ கஞ்சி...
-
தமிழுக்கு என்னைத் தின்னக் கொடுத்தேன் மிச்சமின்றி எச்சமின்றி! எத்தனை எத்தனை கருத்தாய் வெற்று நினைவுகளை உறிஞ்சி வரிகளாய் வடிக்கிறாள் இலக்கணமும...
-
வக்கற்ற சனத்தை வையகமிது எனக்குப் பாட்டா சூட்டிவிடும்! என்கருவறையது அதிகாரமோக யுத்தங்களும், இயற்கைச் சீரழிவுந்தானே கேளீர். *** வரிகள் சிறி ஆர...