வெள்ளி, 22 மே, 2020

தொப்பிள்க் கொடியறுந்து

தொப்பிள்க் கொடியறுந்து
தேசமெங்கும் தாயிப் பெண்டீர்
குருதியால் நிறைகிறது சாபம்.!

யாரைக் குற்றம் சொல்ல?
இது யார் குற்றம்?    
ஓநாய்களும்; நரிகளும்
ஆளும் தேசமிதில்.!

அன்று - கானான் தேசம்
தேடிய பயணம் போல்..
இன்று-இந்திய தேசமதில்
ஆயிரமாயிரம் மைல்கள்
சொந்ததேசம் சேர
நடைபயணம்..!

யாரைக் குற்றம் சொல்ல?
இது யார் குற்றம்?   
ஓநாய்களும்; ஊழை நரிகளும்
ஆளும் தேசமிதில்.!

நன்றி_
வரிகள் ஸ்ரீ ஆரோன் 
www.mytamilpoet.blogspot.com 

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...