புதன், 20 மே, 2020

கிராமத்து விவசாயி; பங்குனி 2020_சிங்காரச் சென்னையில்.!

விடிகிறபொழுது..

சிறகடிக்கும் சத்தம்

காதுகளில் கரகோசிக்க..


என் கண்முன்னே

தேவதை அசைகிறாள் - வர்ணமாய்

அதில் சாமரம் வீசும் இளந்தென்றல்

உரசிப்போகிறது என்னை..


தேவதை அவளழகு..

காவியில்; தாய்மையின் அன்பு

வெண்மையில்; பக்தியின் அமைதி

பச்சையில்; பசுமையின் செழிப்பு

நடுவே சுழலும் சக்கரம்; நீதியில் ஏற்றத் தாழ்வற்ற சமநிலை

என்பேன்.!


அவளை கைகூப்பியபடி எழுந்தேன்

ஆனந்தக் கண்ணீர்

கன்னத்தை தழுவ;

கால்களில் செருப்பு

காதுகளை இழந்திருந்தது !

வயிற்றில் எரிச்சல் - அது

அடக்கமுடிலவில்லை..!


ஒருவிசை..

கண்களை மூடி..லேசாக விழித்தேன்.!

தலையணையாய் - ஒரு

கிழிசலான சுருக்குப்பை.!

வீதியோரதில் நான்.!

துணியால் வாயைமூடிக்கொண்டு சிலர் !!

அனாதையாய் என்தேசம் !!


நிசம் புரியாது

உதடு புலம்புகிறது

"எங்கிருக்கின்றேன் ????"

ஞானத்தில் தெளிவில்லை

அப்போது புத்தி பேசுகிறது...


"இந்த தேசத்தின் விவசாயி நீ..

வங்கிக்கடனில் மீளாது;

நிலங்களை இழந்து;

நீதிதேடிச் சென்னையில்

நீதிமன்றின் சாலையோரம்

சிலவாரங்களில் யாசகனாய்

முத்திரைபதிந்து நிற்கிறாய் - கூட


திடீர் மயானமான - நகர்.!

மயக்கத்தில் எழுந்து - நீ.!

மரணத்தில் விளிம்பில் - நான்.!

உன்பசிக்கு வயது- மூன்று நாள்

இன்றோடு" - என்றது


இன்னொரு சத்தம்.. "ஐயா"

எதிரில் காவலர் "ஐயா சாப்பிடுங்கள்"

நான் "நன்றி சாமி, எப்போது விடியும்"

பின்_கைவிரித்த அவர் "ஏழரை" - என்றார்

"ஆம்!! ஏழரைதன் என்றேன்"

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...