விடிகிறபொழுது..
சிறகடிக்கும் சத்தம்
காதுகளில் கரகோசிக்க..
என் கண்முன்னே
தேவதை அசைகிறாள் - வர்ணமாய்
அதில் சாமரம் வீசும் இளந்தென்றல்
உரசிப்போகிறது என்னை..
தேவதை அவளழகு..
காவியில்; தாய்மையின் அன்பு
வெண்மையில்; பக்தியின் அமைதி
பச்சையில்; பசுமையின் செழிப்பு
நடுவே சுழலும் சக்கரம்; நீதியில் ஏற்றத் தாழ்வற்ற சமநிலை
என்பேன்.!
அவளை கைகூப்பியபடி எழுந்தேன்
ஆனந்தக் கண்ணீர்
கன்னத்தை தழுவ;
கால்களில் செருப்பு
காதுகளை இழந்திருந்தது !
வயிற்றில் எரிச்சல் - அது
அடக்கமுடிலவில்லை..!
ஒருவிசை..
கண்களை மூடி..லேசாக விழித்தேன்.!
தலையணையாய் - ஒரு
கிழிசலான சுருக்குப்பை.!
வீதியோரதில் நான்.!
துணியால் வாயைமூடிக்கொண்டு சிலர் !!
அனாதையாய் என்தேசம் !!
நிசம் புரியாது
உதடு புலம்புகிறது
"எங்கிருக்கின்றேன் ????"
ஞானத்தில் தெளிவில்லை
அப்போது புத்தி பேசுகிறது...
"இந்த தேசத்தின் விவசாயி நீ..
வங்கிக்கடனில் மீளாது;
நிலங்களை இழந்து;
நீதிதேடிச் சென்னையில்
நீதிமன்றின் சாலையோரம்
சிலவாரங்களில் யாசகனாய்
முத்திரைபதிந்து நிற்கிறாய் - கூட
திடீர் மயானமான - நகர்.!
மயக்கத்தில் எழுந்து - நீ.!
மரணத்தில் விளிம்பில் - நான்.!
உன்பசிக்கு வயது- மூன்று நாள்
இன்றோடு" - என்றது
இன்னொரு சத்தம்.. "ஐயா"
எதிரில் காவலர் "ஐயா சாப்பிடுங்கள்"
நான் "நன்றி சாமி, எப்போது விடியும்"
பின்_கைவிரித்த அவர் "ஏழரை" - என்றார்
"ஆம்!! ஏழரைதன் என்றேன்"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக