இருண்ட கண்டத்தில்
வெள்ளையனின் அடிமைச்சாசன
ஜனத்தினின்று ஒரு கருங்குழவியின்
ஓலம்..
கீழாபிரிக்காவில் குலுவூரில்
சோசாப்பழங்குடியின் தலைவர்
களிக்குடிலில் 18-07-1918_ல்
ஊரையே கத்தியெழுப்பியது !
இக்கர்ஜனையில் - நாளை
தம் அடிமைச்சங்கிலிகள் தெறிக்கும்
பொரியிது உண்டென்று
அன்றுயாரும் அறியிலார்..
இக் கூட்டத்தினின்று
முதற்குழந்தை - அன்று
கல்விக்கூடம் ஒதுங்கி - நான்
ரோபிசலா மண்டேலா என்றது - நில்லாமல்
லண்டன் பல்கலக்கழகம் வரைச்சென்று
பல பட்டங்களையும்; பார்சட்டந்தனையும்
கற்றொழுகிற்று..
இருந்தும் தன்தேசத்தில்
வெள்ளையர் "சகதிகடக்கவும்
கறுப்பினர் முதுகில் கால்வைப்பத்தை"
பொறுக்காத கர்ஜனைச்சீயம்
அறவழிப் போராட்டத்தில் நொடிந்தும்
அயராத மறுகணம் - தன்னை
மரபுசாரா ஆயுதப்போரில்
வலிந்து போரிடத் துணிந்தது
தன்னினத்திற்காய்..
போரியலின் ஆறுதற்பரிசு
1962_தொட்டு 27_வருசங்கள்
இராபன்தீவில் சிறைவாசம் - இருந்தும்
இனவிடுதலை நெருப்பைமுகண்டு
தொண்டையில் அடக்கிய பீனிக்ஸ்சாய்
சிறைமீண்ட நான்காம் வருசமது
1994_தனில் தென்னாபிரிக்க
குடியரசுத் தலைவராக முடிசூடியது !
ஐந்தே வருசத்தில்..
தன்லட்சியமான "கறுப்பினத்திற்க்கு
இத்தேசத்தில் சமவுரிமை" என்ற
பொறிப்பை சட்டமாக்கி - கருங்கல்லது
பட்டைதீட்டிய வைரமாய் ஜொலித்தது
நோபல்பரிசதுதானும் அவர்கரமேவி
கவுரவம் பெற்றேகியது.!!
"ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்
தன்மகனைச் சான்றோன்
எனக்கேட்ட தாயாய்" ஆபிரிக்க கண்டமே
பெருமிதந்தாங்கி ஒளிகண்டது - விசால
வான்முட்டி நின்ற தேவதாரு
05-12-2013 அன்று விதையாய்
தன்மண்ணில் வீழ்ந்தது - அன்றே
வரலாறு என்னுந்தாய் தன்கர்ப்பத்தில்
தரித்துக் கொண்டாள் - இவனை
கருமினத்தின் விடிவெள்ளியொன்று.
நன்றி_
கவிவரிகள்: ஸ்ரீ ஆரோன்
www.mytamilpoet.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக