அதுலேசாயும் கண்ணில் படவில்லை
ஆவதாகட்டும் கால்களும் ஓயவில்லை..
இதயத்தின் இரும்புத்திரை எப்பாடிலும்
ஈடராது துடிக்கிறது குறிக்கோளில்..
உள்ளமோ புலம்புகிறது ஊரார்சிரிப்பில்,
ஊமையாய் நினைவுகள் அதனதன்பாடு,
எக்கனமும் பார்த்துவிடலாம் என்று
ஏர்ப்புடைய மூளையெனும் ஆசான்.
*
ஐயம் பின்தொடரும்.. காலடியிராது!
ஒருக்காலும் நினையாத தேசங்களில்
ஓன்வின்றி ஓடியோடிக் கண்டடைந்தேன்
ஒளவியந் தவிர்த்தே விளங்கில்
அஃதலுலகில் மிளிர்தல் சாத்தியமே.!
__வரிகள் சிறி.ஆரோன்__