சனி, 2 நவம்பர், 2024

நேரிசை வெண்பா


என்னவன் தோள்தனி
லென்தலை சாய்ந்திட
எத்தனை வல்லிய பாடுக ளோ
தென்னவன் அன்பினுள் 
அப்பழுக் குக்காணேன்
தீராஅன் பிற்குழை யுந்தன யன்

             பாடல்: சிறி ஆரோன்

              ( நேரிசை வெண்பா)

புன்னை நறுமலரின் பூந்தா திடையுறங்கும்

கன்னி இளமேதிக் காற்குழம்பு - பொன்னுரைத்த

கல்லேய்க்கும் நாடன் கவறாடப் போயினான்

கொல்லேற்றின் மேலேறிக் கொண்டு.

                         - நளவெண்பா

🔲வெண்பாவின் வகைகள்.,

குறள் வெண்பா.(ஈரடிகளால் அமையும்) 

சிந்தியல் வெண்பா.(மூவடிகளால் அமையும்) 

இன்னிசை வெண்பா.(நான்கடிகளால் அமையும்) 

நேரிசை வெண்பா.(நான்கடிளால் அமையும்) 

பஃறொடை வெண்பா (ஐந்தடி தொடங்கிப் பன்னிரண்டு அடிவரை அமையும்) 

கலிவெண்பா.(பன்னிரண்டு அடிகள் தொடங்கி அளவில்லாமல்))

🔲பொது இலக்கணம்.

****-*******************

🔷 நான்கடிகளைப் பெற்று,

🔷மூன்றடிகள்  நான்கு சீர்களும். ஈற்றடி மூன்று சீர்களும் பெற்று,

🔷 ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஓரசைச் சீராய், நாள், மலர், காசு, பிறப்பு எனும் வாய்பாடுகளுள் ஒன்றினைக் கொண்டு முடிந்தும், ( சான்று பாடலில் கொண்டு எனும் சொல்லில் முடிந்த ஈற்றுச்சீர்  "காசு" எனும் வாய்பாட்டில் முடிந்தமை காண்க) 

🔷ஒன்று, மூன்றாம் சீர்களில் மோனையும், (சான்று பாடலில், பு--பூ   க-- கா, க--க,   கொ -- கொ  )

🔷இரண்டடிகளுக்கு ஒரு எதுகையும் (நான்கடிகளும் ஓரெதுகை பெற்றும் வரலாம்) 

புன்னை - கன்னி - பொன்னுரைத்த,

கல்லேய்க்கும் - கொல்லேற்றின்

🔷இரண்டாம் அடியின் நான்காம் சீர் "தனிச்சீர்" எனப்படும். அந்தச் சீருக்கும் மூன்றாம் சீருக்கும் இடையே ஒரு சிறு கோடிருக்கும். தனிச்சீர் முதலிரண்டு அடிகளின் எதுகையைப் பெற்றிருத்தல் ★கட்டாயம்.( சான்று பாடலில்.... பொன்னுரைத்த)  

எதுகையில்லாத் தனிச்சீரும் சிறுகோடும் இல்லையேல் அஃது "இன்னிசை வெண்பா" எனப்படும்

★வெண்டளை மட்டுமே பயின்று வரக்கூடிய சீர்களைப் பெற்று

    வருவது "நேரிசை வெண்பா "ஆகும்.

++++++++++++++++++++++++++++++

🔶வெண்டளைக்கான சூத்திரம் : 

காய்முன்நேர், விளம்முன்நேர், மாமுன்நிரை

++++++++++++++++++++++++++++++

     இந்த மூன்று வகையான தளைகளைக் கொண்ட சீர்களேயன்றி வேறெந்தச் சீர்களும் வெண்பா வகைப் பாடல்களுக்கு வருதல் கூடாது. இந்தச் சூத்திரம் அனைத்து வெண்பா வகைகளுக்கும் பொதுவானதாகையால் நன்கு நினைவில் நிறுத்தவும்.

1. காய்ச்சீருக்கு அடுத்து நேரசையில் தொடங்குவது "காய்முன்நேர் "

2. விளச்சீருக்கு அடுத்து நேரசையில் தொடங்குவது "விளம்முன்நேர் "

3. மாச்சீருக்கு அடுத்து நிரையசையில் தொடங்குவது "மாமுன்நிரை "

இவ்வகையான நேரிசை வெண்பா ஒன்றை வரும் வெள்ளிக்கிழமைக்குள் இப்பதிவின் கருத்துப் பகுதியில் மட்டும்  எழுதியனுப்புங்கள்.

நன்றி...

ஆசான்: பைந்தமிழரசு பாவலர் மா வரதராசன்

கும்மிப்பாடல்

தோள்தனி லென்தலை சாய்ந்திட

     எத்தனை வல்லிய பாடுக ளோ 

தென்னவன் அன்பினுள் அப்பழுக் குக்காணேன்

     தீராஅன் பிற்குழை யுந்தன யன்

-பாடல்: சிறி ஆரோன்-

~~~***~~~

மேற்கண்ட பாடலில்,

🔷ஒவ்வொரு சீரிலும் மூன்று எழுத்துகள் (ஒற்று நீக்கி) உள்ளன.( க ண ணி ) ( மா ய கு ) ( று பு க) ( ளை க டா) ( க க டா ) (ந மு ள ) ( தி தி கு ) 

🔷8 ஆம்சீர்கள் ஓரெழுத்தே இருந்தாலும் (மே**) (மே**இரண்டு எழுத்துக்குப் பதில் அந்த இடத்தில் நீண்டு இசைக்கும் (நீட்டிப் பாட வேண்டும்) . நீண்டிசைக்கும் எழுத்து *குறியிட்டுள்ளதைக் காண்க. (பாடலை எழுதும் போது குறியிடத் தேவையில்லை. புரிவதற்காகப் போட்டுள்ளேன்.)

🔷நான்காவது சீர் சிறுகோடிட்டுத் தனிச்சொல் பெற்று வருவதுமுண்டு. அதை மூன்றாம் சீருடன் இணைத்துப் பாடுமாறு அமைதல் வேண்டும். (செந்தமிழ் நாடெனும் போதினி லே - இன்பத்,

🔷இதில் இன்பத் எனும் தனிச்சீரை லே எனும் மூன்றாம் சீருடன் சேர்த்துப் பாடுமாறு அமைந்ததைக் காண்க)

🔷இருகுறில் இணைந்த சீரால் அடி தொடங்குதல் முன்னோர் பாடல்களில் உண்டு. ஆயினும் அது சிறப்பில்லாதது. நாம் நெடில், நெடிலொற்று, குறிலொற்று இப்படியான சீர்களைக் கொண்டே முயலலாம்.

🔲பொது இலக்கணம் :

மேற்கண்ட பாடலின்படி...

🔶ஓரடிக்கு மூன்றெழுத்துச் சீர்கள் எட்டு வரவேண்டும்.

🔶 இரண்டடிகளும் எதுகையால் இணைந்து ( கண்ண, வண்ண )

🔶 முதற்சீரும் ஐந்தாம் சீரும் மோனையால் இணைந்து ( க , க) (வ, வா)

🔶அடிகளின் எட்டாம் சீர் ஓரெழுத்தே கொண்டு( மே ) (மே)

வகைபடுதல்: ஆசான் பைந்தமிழரசு பாவலர் மா.வரதராசன்

முதல்: மத்தாப்பாய் | முடிவு: மகிழ்வோம்


மத்தாப்பாய் ஒளிர்ந்து

வானமெல்லாம் 

வண்ண வேடிக்கை 

மனதுக்கு நிறைவாய்


நிறைவான மனிதர்

நெஞ்சத்தே 

ஒளிந்திருப்பதில்லை 

பிறன் வீழ்த்தும் வஞ்சகம்


வஞ்சகர் அவர்தாம்

வாழ்க்கையில் எல்லைவரை

முயன்றாலும் நல்லிடம் 

சேர்வதேது?


சேருவர் இடம்பார்த்தே

உன்னை என்னை 

அளவிடும் இச்சமூகம்

இன்னாரென்று.!


இன்னாரென்று 

குலங்காண பிறப்பில்ல 

அளவீடு கொண்டுணர்தல்-நம்

வாய்மொழி வார்த்தைதானே!


வார்த்தைகள் 

செம்மைப்படின்

வாழ்க்கை மேல்ச்சிறந்து

நற்பெயர் நாளும் சூழுமே!


சூழும் நன்மக்கள்

எண்ணுதலும் வாழ்த்துதலும்

அழகுறச் செய்திடும்

நாம் நோக்கும் காரியந்தனை


காரியம் சகலதும் வாகைசூடும்

வளமுள்ள உள்ளங்கள்

தாமுவந்து ஈனும்

கொடைதனிலே!


கொடைதனை

பூமிபார்க்கக் கொடுத்துச்

சிவந்த கைகளுக்கு

சீவியத்தில் குறைவில்லை


குறைவில்லை 

பஞ்சம் பட்டினிக்கும்

பூவுலகில் கையிருப்போர்

மனது குறுகிக் கஞ்சராயிருக்க


கஞ்சரிவர் உலகையே 

ஆதாயங் கொண்டும்

வெறுங்கையே மூடுவர்

இறுதி ஊர்வலத்தில்!


ஊர்வலப் பல்லாக்குகளும்

சுயமும் வெறுத்து 

மனிதருள் மாணிக்கமானோரை

உளஞ்சுமந்தே மகிழ்வோம்.

~~~~~***~~~~~

வரிகள்: சிறி ஆரோன்

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...