
பிறப்பில் எவ்வுயிரும்
பிண்டத்தினுள் துடிப்பது - அதுதான்
தன் முயற்சியின் சறுக்(கல்)களில்
கைத்தாங்கல்களும்; கரகோசங்களும்
காலத்தின் ஆசானிசம் - இருப்பினும்
ஆட்டத்தினின்று கழன்றகல் - தனை
யாரும் பாறை என்கிலார் - அதுமீறி
தன்னை நிரூபித்த_அகரம்
இப்போ சிகரம் ஆச்சு !
***
தோற்றானென்று மாற்றான் கண
சரீர தோள்களில் வலிதல்லவே..
இதயத்தில் ஈறிறங்கி என்னால் 'முடியும்' - எனும்
சொல் தழுவிய ஆற்றாமையாதே.!
அஃதுதனை கழைந்தவன் தானிங்கே
கோட்டை கொடிக்கு கோமகன் - ஆக
அகரம் இப்போ சிகரம் ஆச்சு !
***
அணைக்கும் கரங்களால் தானும்
புறமுதுகு புண்படும்;
இனிக்கும் வார்த்தை ஜாலமே
சுமக்கொண்ணா துரோகந்தனை கூட்டும்;
வெளியோரு நற்பாவனையில்
உள்ளோர் சூனியச்சாடை ஒளிந்திருக்கும்;
உன்னிடம் சொல்லெடுக்கவே - தானாய்
ஒட்டிக்கொள்வர் வீணர் - அவர்
நகைப்பின் ஈரடிப்பாங்கில் சுதாகரித்து
"பீனிக்ஸ் கருகியும் உயிர்மீழ் சூட்சுமமாய்"
வாழக்கற்ற அகரம் இப்போ சிகரம் ஆச்சு !
***
நான் பட்டதும், படக்கண்டதும்..
என்பால் பெற்றதும், அனுபவத்தில் கற்ற-மற்றதும்..
உளமார உற்றதும், வேண்டாது வெறுத்ததும்..
விடமனதற்று விட்டதும், தானாய் விட்டுவிலகியதும்..
மனங்கலங்கி விம்மியதும், மடைதிறந்து அழுததும்..
***
தோற்றானென்று மாற்றான் கண
சரீர தோள்களில் வலிதல்லவே..
இதயத்தில் ஈறிறங்கி என்னால் 'முடியும்' - எனும்
சொல் தழுவிய ஆற்றாமையாதே.!
அஃதுதனை கழைந்தவன் தானிங்கே
கோட்டை கொடிக்கு கோமகன் - ஆக
அகரம் இப்போ சிகரம் ஆச்சு !
***
அணைக்கும் கரங்களால் தானும்
புறமுதுகு புண்படும்;
இனிக்கும் வார்த்தை ஜாலமே
சுமக்கொண்ணா துரோகந்தனை கூட்டும்;
வெளியோரு நற்பாவனையில்
உள்ளோர் சூனியச்சாடை ஒளிந்திருக்கும்;
உன்னிடம் சொல்லெடுக்கவே - தானாய்
ஒட்டிக்கொள்வர் வீணர் - அவர்
நகைப்பின் ஈரடிப்பாங்கில் சுதாகரித்து
"பீனிக்ஸ் கருகியும் உயிர்மீழ் சூட்சுமமாய்"
வாழக்கற்ற அகரம் இப்போ சிகரம் ஆச்சு !
***
நான் பட்டதும், படக்கண்டதும்..
என்பால் பெற்றதும், அனுபவத்தில் கற்ற-மற்றதும்..
உளமார உற்றதும், வேண்டாது வெறுத்ததும்..
விடமனதற்று விட்டதும், தானாய் விட்டுவிலகியதும்..
மனங்கலங்கி விம்மியதும், மடைதிறந்து அழுததும்..
உள்ளாரப்பிரிந்ததும், உறவென்று பிடித்தும்..
பெற்ற பாராட்டும், பெறாத மரியாதையும்..
இழந்த தன்மானமும், இறக்காத நெஞ்சுரமும்..
ஏமாந்த நம்பகமும், ஏமாற்றாத சிந்தையும்..
நானறிந்த பலமும், எனக்கு அறியாத முகங்களும்..
எனை தெரிந்த பக்தியும், எனக்கு தெரியாத வழிநடத்தலும்..
பெற்ற பாராட்டும், பெறாத மரியாதையும்..
இழந்த தன்மானமும், இறக்காத நெஞ்சுரமும்..
ஏமாந்த நம்பகமும், ஏமாற்றாத சிந்தையும்..
நானறிந்த பலமும், எனக்கு அறியாத முகங்களும்..
எனை தெரிந்த பக்தியும், எனக்கு தெரியாத வழிநடத்தலும்..
கண்ட - இந்த அகரம் இப்போ சிகரம் ஆச்சு !
வரிகள் - ஸ்ரீ-ஆரோன்
வரிகள் - ஸ்ரீ-ஆரோன்