திங்கள், 25 நவம்பர், 2024

மாவீரர் மாண்பு




மேதகு எனுஞ்சொல்லே
மேல்மாண்பின் முகவரியாய்
உம்மால் ஆனதே!


மழலை முகத்தில்

பேரழகுச் சிரிப்பில்

கோபத்தையும் கண்ணியமாய்

அணுகும் மேதையே!


ஓரவிழிப் பார்வையில்

ஓராயிரங் கதைசொல்லும்

சாணக்கியர் கூட்டத்தின்

தலைஞானியே!


இருநாடியில் புன்னகையில் 

இறுகியமுகம் காட்டாத

சாந்தமுறையும் சற்குணன்

வழிமாவீரரே!


போரியல் சரிதங்கள்

போற்றும் தார்மீகர் 

எம்தாயகக் கரும்புலிகளே!


ஐம்படை கட்டியாண்ட

அசகாயசூரர் குலத்து

கரிகாலன் சாரையே!


வங்கக் கடல்கடைந்த 

வல்லவரிவரே கடலிலே 

காவியம் எழுதிட்டமகர்


உலகமே தூங்கிடிலாம்

இராக்காக்கும் வேங்கையருக்

கேதுகண்ணுறக்கம்?


நெஞ்சிலே 

நியாயம் கூரும் 

சாராமையில் நின்ற 

வேள்பாரிக் கூட்டத்தாரே!


வார்த்தையில் உறுதியும்

வழுவாமையும் கொண்ட 

கலியுகக் கரிகாலன் படையே!


கணிகர் நீதியால்

வல்லரசுகள் மெய்சிலிர்க்கச் 

செய்த பூசனினமே!


எதிரியாயினும் முதுகில்

குத்தாத சீராளன்

தலைமைகொள் மேனினமே!


துரோகிகட்கும்

துரோக மெண்ணானாத

கர்ணகுலத்தோரிவரே!


முடியாது இயலாது

எனுஞ் சொற்களை

இவர்களகராதி ஏற்றதில்லையே!


இப்பூமியிலென்ன தவம் 

செய்துவந்தோம் இத்தலைவன் 

மூச்சுக்காற்றை சுவாசிக்க..?


இன்னுமிவர் மாண்பும்

மேன்மக்கள் பண்பும்

கொண்டு வாழ்தல் - நாம்

இவர்கள் வழிகொண்டோர் 

என்றறியும் அகிலம்.

ஆசிரிய விருத்தம்

வேங்கையர்
(காய்-காய்-காய்-மா-தேமா)
~~~~~~~~~***~~~~~~~~~~


வேங்கையராய் மாவீரர் தம்தாய்மண் மீட்டிடவே 
       வேட்கை கொண்டே!

தாங்கொண்ணாத் துயர்களது தம்வாழ்வில் சகித்திருந்த
       தாளாத் தீரர்

ஓங்கதிகா ரச்சாட்டை ஏற்காத ஒப்பற்ற
       ஓங்கு கோனே!

தீங்குழலூ தும்மறையர் தமிழர்நாம் ஒப்பளிப்போம்
       தீங்கைத் தீயில்.

~~~~~~~***~~~~~~~
வரிகள்: சிறி ஆரோன்

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...