மேல்மாண்பின் முகவரியாய்
உம்மால் ஆனதே!
மழலை முகத்தில்
பேரழகுச் சிரிப்பில்
கோபத்தையும் கண்ணியமாய்
அணுகும் மேதையே!
ஓரவிழிப் பார்வையில்
ஓராயிரங் கதைசொல்லும்
சாணக்கியர் கூட்டத்தின்
தலைஞானியே!
இருநாடியில் புன்னகையில்
இறுகியமுகம் காட்டாத
சாந்தமுறையும் சற்குணன்
வழிமாவீரரே!
போரியல் சரிதங்கள்
போற்றும் தார்மீகர்
எம்தாயகக் கரும்புலிகளே!
ஐம்படை கட்டியாண்ட
அசகாயசூரர் குலத்து
கரிகாலன் சாரையே!
வங்கக் கடல்கடைந்த
வல்லவரிவரே கடலிலே
காவியம் எழுதிட்டமகர்
உலகமே தூங்கிடிலாம்
இராக்காக்கும் வேங்கையருக்
கேதுகண்ணுறக்கம்?
நெஞ்சிலே
நியாயம் கூரும்
சாராமையில் நின்ற
வேள்பாரிக் கூட்டத்தாரே!
வார்த்தையில் உறுதியும்
வழுவாமையும் கொண்ட
கலியுகக் கரிகாலன் படையே!
கணிகர் நீதியால்
வல்லரசுகள் மெய்சிலிர்க்கச்
செய்த பூசனினமே!
எதிரியாயினும் முதுகில்
குத்தாத சீராளன்
தலைமைகொள் மேனினமே!
துரோகிகட்கும்
துரோக மெண்ணானாத
கர்ணகுலத்தோரிவரே!
முடியாது இயலாது
எனுஞ் சொற்களை
இவர்களகராதி ஏற்றதில்லையே!
இப்பூமியிலென்ன தவம்
செய்துவந்தோம் இத்தலைவன்
மூச்சுக்காற்றை சுவாசிக்க..?
இன்னுமிவர் மாண்பும்
மேன்மக்கள் பண்பும்
கொண்டு வாழ்தல் - நாம்
இவர்கள் வழிகொண்டோர்
என்றறியும் அகிலம்.