கேளடி கண்மணி..
பெண்டீர்தம் அடிமைச் சாசனம்
தானாய் மறியதல்ல/
ஒற்றொற்றயாய்
கூடிக் கற்றையாகி
ஒடுக்கிய சங்கிலிகள் நொறுங்குண்டன/
கள்ளிப்பால் விரையக்
கணக்கெழுதிய வீணர் முகண்டதும்
தாய் மார்பில்தான் கவனமடி!/
வேட்டைக்கு இலக்கணம்
பிடரிமயிரும் கர்ச்சனையுமோ?
சோழ மாதேவிகட்கு நிகரேது சரிதத்தே/
மங்காத அவ் ஓர்மம்
ஈழத்தில் கண்டீரே
வீர மங்கையராய் முப்படையும்
கட்டியாண்ட பேரழகில்/
தோல்விதழுவி மூலை முடங்க
வெறுங்கதையல்ல பெண்ணியம்
படைப்பின் சக்தியடி/
பஞ்சாங்கக் குறிப்பெடுத்து
கால்க்கட்டு வாய்க்கட்டுக்கு
பகலவன் சந்திரனல்ல சொல்லடி/
பேதமைகள் தள்ளிப் புறப்படு,
சம்பிரதாய சாங்கியப் பூச்சாண்டியோ-அட
புயலைத்தடுக்க பூனைச் சகுனமா?/
கொட்டுகிற அருவியில் பாசியேது?
எண்ணம் ஏற்றமுற ஓடு
வண்ணங்களில் வானவில்லில்
சலனமிரா/
சுயநலக் கொழுந்தீ
உளநலம் பொசுக்கி
நல்லேதும் மீந்திரா சாபமென்று
நடைபழகு/
தேவைக்கு மீந்தது கொடு,
கேட்பின் சாட்சியில்லாது கொடு,
வறியோரென்கில் வானளந்து கொடு,
அள்ளத்தானே நீரூறும்/
பூச்சியம் ஒன்றிடத் தகுதியேது?
முகஞ்சுழித்தல்லவே இனிமை
அன்பில் சேர்ந்திட விட்டுக்கொடு/
பொறுமைச் சாயல்
பலவீனம் என்பர் மூடர்
அருந்தவத்தோர் சகலரும்
நேரத்தைக் காணித்தவரே/
புறம்பேசும் மனுசரோடே அறங் கேளாதே
அவர் தடங்கூர்ந்து விலகுதல் சாலம்
ஞானக்கண்ணே/
கண்ணியம் சமூகக் கடவுச்சொல்லடி
சிற்பியின் கையில் சாணைபிடித்த
உளிக்குச் சாமானம்/
சுய கட்டுப்பாடது சாவியாம்
நல்லாயுள் நின்மதிக்கு
வாழும் கலையில் வாகைசூடி
தரணியில் செம்மைப்படு கண்மணி/
~~~
வரிகள் : சிறி ஆரோன்