சனி, 28 செப்டம்பர், 2024

நானுமொருவன் இருக்கிறேன்




தமிழுக்கு என்னைத்

தின்னக் கொடுத்தேன்

மிச்சமின்றி எச்சமின்றி!


எத்தனை எத்தனை கருத்தாய்

வெற்று நினைவுகளை உறிஞ்சி

வரிகளாய் வடிக்கிறாள்


இலக்கணமும் இலக்கியமும்

உப்பளவும் என்னில் இல்லை

ஆனாலும் தமிழன்னை ஒதுக்கலயே


என்னைத் தின்று எனக்குள்ளே 

செரிக்கிறாள் கவிதைகளை-அவள்

கோர்க்கும் வார்த்தைகள் எனதல்ல 


சொன்னா நம்புங்கோ

தமிழுக்காய் வாழவும் வீழவும்

நானுமொருவன் இருக்கிறேன்.


வரிகள்: சிறி அருணன்

செவ்வாய், 24 செப்டம்பர், 2024

கைக்கூ


குருவிகள் கூடு

அரிக்கேன் விளக்கில் செம்மைப்பட்டுள்ளது

வரைந்தவன் ஆற்றல்

***

வரிகள்: சிறீ ஆரோன்

நன்றி நடுவர் கவி கணேஷ்ராஜ் தேவராஜ் அவர்களே


திங்கள், 23 செப்டம்பர், 2024

"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்"


மொழியதன் இருகண்ணாய் 

எண்ணும் எழுத்தும் 

சூடினார் ஒளவை


விழிப்புலனில்லா மூளை 

இருள்சீவியம் போல 

இவ்விரண்டில்லா மொழி


சரீரத்தின் விளக்காய் கண்ணிருக்க 

இவைகாணும் மொழியும் 

காலங்கடந்து ஒளிருமே


எண்ணறிந்தே 

மானுடம் அறிவியலை 

நல்ஈவாய் பெற்றது


கணித்து அறியிலேல் 

விஞ்ஞானமே கண்டிராது 

இப்பிரபஞ்சம்


பகுத்தறிவு தன்னை 

நிரூபித்த முதலாதாயம் 

எண்ணெழுத்தே


பட்டறிவை உருவேற்றி 

உசார்துணை கொண்டிட 

இவ்விரண்டே மூலம்


மனிதக் கற்பனைகள் 

உயிரேகிய சாரமே 

எண்ணும் எழுதுமல்லவோ


ஆகாயத்திற்கு அஞ்சிய மனிதன் 

அதை அளந்ததே 

கணிதம் கொண்டே


வரலாறு என்றொன்று 

வழக்கம் கொண்டதே 

எழுத்தின் மூச்சில்


ஆதியோன் 

நஞ்சையும் உணவையும் 

பிரித்தறிந்தும் எழுதானாகில் 

ஏது மருந்து


சாண் முளம் பாகம் மென்றவன்

எண்ணாற்றல் ஞானமே 

அண்டவெளியில் சஞ்சாரம்


கல்லிலும் ஓலையிலும் பழகி

கணினியிலும் காற்றிலும் 

காரியமாகுது 


பகுத்தறிவே 

சிந்திக்கும் பேசுமென்ற 

சாங்கியம் தகர்ந்து - இன்று

இரும்பில் நுண்ணறிவு


வானிலை காலநிலை 

நொடியில் கணிப்பதும் 

கண்ணென எண்ணதைக் 

கண்டதாலே


அன்று தமிழரசி 

முன்னறிவித்த வார்த்தை 

வானளாவி ஆழியீறாய் 

ஆள்கிறது இன்று


வரிகள்: சிறி ஆரோன்

எனது மனமார்ந்த நன்றி

ஈழத்து வளர்ந்துவரும் எழுதாளர் கழகம் 

மற்றும் நடுவர் கவிஞர் மன்னனூர் பாரதி



“கேளடி கண்மணி..”


கேளடி கண்மணி..

பெண்டீர்தம் அடிமைச் சாசனம்

தானாய் மறியதல்ல/


ஒற்றொற்றயாய்

கூடிக் கற்றையாகி

ஒடுக்கிய சங்கிலிகள் நொறுங்குண்டன/


கள்ளிப்பால் விரையக் 

கணக்கெழுதிய வீணர் முகண்டதும்

தாய் மார்பில்தான் கவனமடி!/


வேட்டைக்கு இலக்கணம்

பிடரிமயிரும் கர்ச்சனையுமோ

சோழ மாதேவிகட்கு நிகரேது சரிதத்தே/


மங்காத அவ் ஓர்மம்

ஈழத்தில் கண்டீரே

வீர மங்கையராய் முப்படையும்

கட்டியாண்ட பேரழகில்/


தோல்விதழுவி மூலை முடங்க

வெறுங்கதையல்ல பெண்ணியம்

படைப்பின் சக்தியடி/


பஞ்சாங்கக் குறிப்பெடுத்து

கால்க்கட்டு வாய்க்கட்டுக்கு

பகலவன் சந்திரனல்ல சொல்லடி/


பேதமைகள் தள்ளிப் புறப்படு,

சம்பிரதாய சாங்கியப் பூச்சாண்டியோ-அட

புயலைத்தடுக்க பூனைச் சகுனமா?/

 

கொட்டுகிற அருவியில் பாசியேது?

எண்ணம் ஏற்றமுற ஓடு

வண்ணங்களில் வானவில்லில்

சலனமிரா/


சுயநலக் கொழுந்தீ

உளநலம் பொசுக்கி 

நல்லேதும் மீந்திரா சாபமென்று

நடைபழகு/


தேவைக்கு மீந்தது கொடு,

கேட்பின் சாட்சியில்லாது கொடு

வறியோரென்கில் வானளந்து கொடு,

அள்ளத்தானே நீரூறும்/


பூச்சியம் ஒன்றிடத் தகுதியேது?

முகஞ்சுழித்தல்லவே இனிமை

அன்பில் சேர்ந்திட விட்டுக்கொடு/


பொறுமைச் சாயல் 

பலவீனம் என்பர் மூடர்

அருந்தவத்தோர் சகலரும்

நேரத்தைக் காணித்தவரே/


புறம்பேசும் மனுசரோடே அறங் கேளாதே

அவர் தடங்கூர்ந்து விலகுதல் சாலம்

ஞானக்கண்ணே/


கண்ணியம் சமூகக் கடவுச்சொல்லடி

சிற்பியின் கையில் சாணைபிடித்த

உளிக்குச் சாமானம்/


சுய கட்டுப்பாடது சாவியாம்

நல்லாயுள் நின்மதிக்கு

வாழும் கலையில் வாகைசூடி

தரணியில் செம்மைப்படு கண்மணி/


~~~

 வரிகள் : சிறி ஆரோன்

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...