உலகம் எனக்கு சொல்லிதந்த அதனில்
முன்கோபமும் - பின்நோக்கமும் இருக்கும்
ஆனால்..
அவரிடன் நான் கண்ட அதுதன்னில்
முன்கண்ணீரும் - பின்மன்னிப்புமே இருந்தது
அவர்..
அதுவாகவே இருந்தார், அது அவரேதான்
அவரொருவரே அதனுருவும்
அது அவரே, அவரேயின்றி வேறொருவரில்லை
என்..
ஜீவனின் மீட்பரும், இரட்சகருமாகிய
ஒரேபேறானவர் அவர், அவரே மெய்யன்பு!