வியாழன், 30 ஜூலை, 2015

-- அன்பில் வறுமையின்று--


ஒவொரு நாளும் 
விடியும் பொழுதுகளில் 
நாம் நேசிபவரின் 
அன்போடு, 
அரவணைப்பாய் 
நாலு வார்த்தைக்காய் 
ஏங்கி.. ஏங்கியே.. 
-நாள்- 
இருண்டு போகிறது 
முடிவில் !

--கண்ணீரோடு..!


நாம் 
நேசிக்கும் இதயம் 
நம்மைவிட்டு 
இன்னொருவரை நாடும் 
அந்த தருணம்தான் -

''மரணத்தின் வேதனை'' 
ஒன்றும் 
''வாழ்கையின் வலி''களைவிட 
பெரிதல்ல 
என்று புரிகிறது
கண்ணீரோடு..!

~சீ..சீ..~


நேற்றைய நாளில் 
கழற்றிவிடும் 
காதலிகள்..

''எப்போதும் உனக்கு 
நல்ல நண்பியாய்'' 
இருப்பேன் - என்று 
வார்த்தைகளில் 
முலாம் புசிய 
காலம் கடந்து..! 

இன்று... 

சில வாழ்க்கை
துணைவிகளும்
அதே வார்த்தைகளால்
அமிலம் பூசும் 

அந்திக்காலத்தில்

கடமைக்காய் 

காதலும் - கலியாணமும்
என்றாகிப்போனது...!!

-- பலவீன இதயத்தார் பத்திரம் .!


இந்த உலகில் 
மரணமற்ற ஜீவனை 
தேடுவதும்,

நிலையான அன்பை 
ஒருத்தரிடம் 
எதிர் பார்ப்பதும்,

இங்கு சாத்தியமற்றது.!
ஆகையால் உங்கள்
இதயம் பத்திரம்
உறவுகளே..!

காதலா.!


நான் மகாத்மாவோ..
நீ என் பாதை வாஞ்சகனோ அல்ல,

நான் அரசியல் தலைவனும்..
நீ எனக்கு தொண்டனுமோ அல்ல,

நாம் முண்டாசுக்கவி பாரதி காலத்து 
பழஞ்சம்பிரதாய தம்பதியும் அல்ல,

இருந்தும்..
உனக்கு ஏதுமெனில்..
நானும் இறைமகனாவேன் என்றாயே.! 
இதுதான் காதலா.? 
' என் காதலா '

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...