புதன், 13 ஆகஸ்ட், 2014

நான் தோற்றபோது..!


நேற்று கூடவே இருந்தவர்
இன்று எதிரிகள் ஆகி;
காலையில் சுகம் கேட்டவர்
இரவுபோழுத்தில் துரோகி ஆகி..


பல நண்பர்களிற்கு
என் பெயர் மறந்து போனது;
என் உறவினர்களிட்கு
என் முகவரி மறந்து போனது..

கடந்த நாளிகையில் கட்டியணைத்தவர் நகரும் நிமிசமே
மீதியையும் களவாடி மறைந்தனர்..



உன்னை என்றும் கைவிட மாட்டேன்
என்று கைபிடித்த  உறவிற்காய்
கோவணம் வரையில் பட்டா கொடுத்துவிட்டேன் -

அந்த  கைபேசியும்
பதிலற்று ஊமையாகி போனது
விரைவில் தொடர்பு எல்லையை தாண்டிவிடலாம்
என்கிறது பட்டறிவு..!

உதவி என்று ஒரு வார்த்தை கேட்டால்
உள்ளவரும் நடுத்தெருவிற்கு வந்துதான்
மறுவார்த்தை பேசுகிறார்..

எனக்கு கடன் பட்ட அத்தகையோர்
கூழுக்கும் வக்கத்ததாய்
சோர்ந்தே பதில் பேசுகிறார்..

இறுதியாய் நான்
வாழ்ந்து கெட்ட அனுபவத்தோடு
மீண்டும் வாழ்கையின் மீதியை  பார்த்துவிட  துணிந்துவிட்டேன் !


திங்கள், 11 ஆகஸ்ட், 2014

நான் சாவதில்லை !


என்னை நான் தேடுகிறேன்
வெகு நாட்களாய்...
இந்தப் பயணம் முடிவுறும் நாளின் ஈற்றில்
நிட்சயம் உயிர் வாழ்வேன் !

காரணம்..

எனது எதிர்பார்புகளும்..
நம்பிக்கைகளும்..
என்னை பலமுறை கைவிட்ட போதும்
எனது லட்சியம் மட்டும்
உள்ளே செத்துவிடவில்லை...

ஆதலால்தான் சொல்லுகிறேன்
என் லட்சியங்கள்  வாழும்வரை
நான் சாவதில்லை !

நல்ல நண்பன்..


நல்ல நண்பன் ஒருவன் போல
ஆயிரம் சொந்தங்களும், 
உறவுகளும், 
ஏன் மனைவியும் கூட 
துணைக்கு வரார்கள் !

மீட்டிபார்கிறேன்..

நான் 
சிரித்த நாட்களையும்...
அழுத நாட்களையும் 
மீட்டிபார்கிறேன்..

சிரித்தபோது -
என்னுடன் இருந்தவர்கள் 
அழும்போது பக்கத்தில் இல்லை !
அழும்போது -
ஆறுதல் சொன்னவர்கள் 
யாரும் எனுடைய உறவினர்கள் இல்லை !


தனியேயும் வாழலாம்..!


உன்னுடைய 
எதோ ஒன்றை 
எதிர்பார்த்து ஒட்டிக்கொள்பவர்கள் 
அது இல்லை என்று ஆனதும் 
விலகி விடுகிறார்கள்..

அதில் உடன் பிறந்த சொந்தம்,
கூடவே வருவேன் என்று சொல்லும் 

உன்னில் பாதியான பந்தம்,
சில தாய், தந்தையர் கூட

விதி விலக்கல 
ஆனால்..
உன்னுடன் எப்போதுமே 

பிரியாத அந்த ஓன்று
நீ என்கிற நீதான்..


ஆகவே.. 

தன்னம்பிக்கை 
அதுதனை இழந்துவிடாதே...
தனியேயும் வாழலாம்..!
 

நாளை ?


நாளை... 
பற்றிய கவலை எனக்கு- 

இல்லவே இல்லை..
காரணம்..

நாளைய நாளில் 
நான் இருபேன் என்று
இதுவரை
எவரும் எனக்கு
படைய உறுதி
தந்திடவில்லை...!

நேற்றைய எதுவும்
இன்று நமகென்று
இல்லை;
இன்றைய எதுவும்
நமக்கான நிரந்தரம்
இல்லை;

பிறகு எதற்கு
''நாளை'' என்ற பேச்சு ?

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...