சனி, 31 ஆகஸ்ட், 2024

தற்பெருமை


தற்பெருமை பேசிடும்

ஞானத்தில் நெறிப்படார்/

நெறிப்படார் இவரெலாம்

வார்தைகளில் வல்லவராம்//


வல்லவராம் பார்வைக்கு

அரிதார நாயகரே/

நாயகராய் எதுவொன்றும்

தகுதியூன்றி செயற்படார்//


செயற்படார் ஆற்றல்

வார்த்தையின் வெளியரங்கம்/

வெளியரங்கின் பொம்மலாட்டம்

களைந்திடில் கற்பனையே//


கற்பனையில் தான்மட்டும்

தரணியை ஆண்டிடுவர்/

ஆண்டிடுவர் சுயரூபம் 

வெளிப்படும் அதுவரையில்//


அதுவரை சுற்றங்கொஞ்சம்

பொறுத்திடுமே பூன்னகைத்து/

பூன்னகைத்து வாழ்வோங்க

தற்பெருமை தக்கதன்றே//

***

வரிகள் சிறி ஆரோன்

(அந்தாதிக் கவிதை)

தகுமோ.?


மானுடர் வாழ் இயலின்

மேன்மை தகு மருத்துவத்தின்

கருத்தாய் காத்த பக்குவத்தை

கருத் தாய்கள் கொன்றே

கண்ணிய மீறிடல் தகுமோ.?

***

வரிகள் சிறி ஆரோன்

விலைபோகும் மருத்துவம்












மானுடர் சீக்கு அறுந்து 

சீருடன் சீவனம் கொள்ள

ஆருட ஞ்சொல்ல சுகமேகும்,

கைமருந் அதுவே காயமாற்றும்,

பூசாரியே ஏகபரிகாரி - என்று

ரணமேகிய இருள் வாழ்வில்

ஆங்கிலேயன் அழையா நுழைவின்

அலோபதி வெளிச்சம் கிழக்கே.

*

மூடச்சரிதம் முடிவு கண்டது

கர்ப்பிணி சிசுச்சா பழங்கதயாகி

மாத்திரையால் மனுமதி வியந்தே

அறுவைச் சிகிச்சை புதவதாரம்

மருத்துவபிதா ஹிப்போ கிரடீசார்

செவிலியார் ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல்

என்றெலாம் பெருந்தகை மெருகூட்டிட

விதியது என்று பேசலாகா.

*

மாற்றம் மாறாத பூமிதனில்

மனிதநேயம் மக்கியது காசுக்குள்

சுயநலத்தில் சுருங்கி இதயமதும்

மருத்துவம் தொழிலாய் தனியார்மயம்

அரச வைத்தியரீர் சுயநீதிபேசி

கவலையீன மரணங்கள் அவரவர்கெதி

பணமின்றி பிணமதும் ஈடுபோகும்

ஒளஷதவேதியே பிணி ஈணுகையில்!


***

வரிகள் சிறி ஆரோன்

(அறுசீர் விருத்தம் - விளம் மா தேமா -3 பாடல்கள்)

திங்கள், 26 ஆகஸ்ட், 2024

வறுமை














வக்கற்ற சனத்தை வையகமிது

எனக்குப் பாட்டா சூட்டிவிடும்!

என்கருவறையது அதிகாரமோக யுத்தங்களும்,

இயற்கைச் சீரழிவுந்தானே கேளீர்.


***

வரிகள் சிறி ஆரோன்

(தன்முனைக் கவிதை)


பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...