தற்பெருமை பேசிடும்
ஞானத்தில் நெறிப்படார்/
நெறிப்படார் இவரெலாம்
வார்தைகளில் வல்லவராம்//
வல்லவராம் பார்வைக்கு
அரிதார நாயகரே/
நாயகராய் எதுவொன்றும்
தகுதியூன்றி செயற்படார்//
செயற்படார் ஆற்றல்
வார்த்தையின் வெளியரங்கம்/
வெளியரங்கின் பொம்மலாட்டம்
களைந்திடில் கற்பனையே//
கற்பனையில் தான்மட்டும்
தரணியை ஆண்டிடுவர்/
ஆண்டிடுவர் சுயரூபம்
வெளிப்படும் அதுவரையில்//
அதுவரை சுற்றங்கொஞ்சம்
பொறுத்திடுமே பூன்னகைத்து/
பூன்னகைத்து வாழ்வோங்க
தற்பெருமை தக்கதன்றே//
***
வரிகள் சிறி ஆரோன்
(அந்தாதிக் கவிதை)