மானுடர் சீக்கு அறுந்து
சீருடன் சீவனம் கொள்ள
ஆருட ஞ்சொல்ல சுகமேகும்,
கைமருந் அதுவே காயமாற்றும்,
பூசாரியே ஏகபரிகாரி - என்று
ரணமேகிய இருள் வாழ்வில்
ஆங்கிலேயன் அழையா நுழைவின்
அலோபதி வெளிச்சம் கிழக்கே.
*
மூடச்சரிதம் முடிவு கண்டது
கர்ப்பிணி சிசுச்சா பழங்கதயாகி
மாத்திரையால் மனுமதி வியந்தே
அறுவைச் சிகிச்சை புதவதாரம்
மருத்துவபிதா ஹிப்போ கிரடீசார்
செவிலியார் ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல்
என்றெலாம் பெருந்தகை மெருகூட்டிட
விதியது என்று பேசலாகா.
*
மாற்றம் மாறாத பூமிதனில்
மனிதநேயம் மக்கியது காசுக்குள்
சுயநலத்தில் சுருங்கி இதயமதும்
மருத்துவம் தொழிலாய் தனியார்மயம்
அரச வைத்தியரீர் சுயநீதிபேசி
கவலையீன மரணங்கள் அவரவர்கெதி
பணமின்றி பிணமதும் ஈடுபோகும்
ஒளஷதவேதியே பிணி ஈணுகையில்!
***
வரிகள் சிறி ஆரோன்
(அறுசீர் விருத்தம் - விளம் மா தேமா -3 பாடல்கள்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக