தமிழ் மூவேந்தர் கொடி வீழ்ந்த பின்னர்
ஒரு சரித்திர மீழ்ச்சிகாண
புலிக்கொடி ஏற்றினான் தனையனிவன்;
தமிழன் பெயர் முரசறைந்து இராவண சேனையோடு.!
வாழ்த்துக்கள் செய்வீர் மேதகுதனை.!
முக்கடல் சங்கம ஆழிகளை முறுமுறுது
பாயிந்தது இவன் கடல்ப்படைகள்;
அதனாலோ என்னவோ ஆழ்கடல் - அன்று
அமைதியாய் உறங்கியது உற்றவனின் கையோச்சிட.!
வாழ்த்துக்கள் செய்வீர் மேதகுதனை.!
உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது
ஆனாலிவன் இலட்சியமது
புலிக்கும் சொந்தச்சிறகு முளைத்து
வான் முட்டக்கண்டது உலக அரசுகள் மிரள.!
ஆக இவனே புட்பக விமானந்தனை
புலிப்படை கொண்டு கட்டிய மாரீசன் மருகன்.
வாழ்த்துக்கள் செய்வீர் மேதகுதனை.!
உயிரைவிட.. தன்மானமும்,
தன்னின சுதந்திரமும் மேலென்று
அதுவரை வரிகளில் படித்திருந்த மாந்தர்தமை;
இவன்தான் வலிகொணர்ந்து
கரும்புலிகளாய் வடிவமைத்தான்.
வாழ்த்துக்கள் செய்வீர் மேதகுதனை.!
இவன் வீழ்ந்தான் என்று எதிரியும்;
என்தலைவன் சிரஞ்சீவி,
நாம் அழுதால் தாங்கொனாது மீழ்வார்
என்று - தமிழரும் உறுதிகொள்ள.!!
என்னுரையது.. "அவனவன் உறுதிப்படும்
ஆண்டவனை, கண்காணாது உளார்
என்று - உணரும் உணர்வில்
இன்றும் மேதகு வே பி அவர்கள்
நமக்குள் வாழ்கிறார்.
வாழ்த்துக்கள் செய்வீர் மேதகுதனை.!
வரிகள்:
சிறி. ஆரோன் _(ஈழத்தூரான்)_