என் யாதுமாகி நின்றாய் நீ..
சிரத்தையோர் தாயின்றி
நல்வித்தான குழந்தையில்லை
சீவியத்தே!
பேதிலி என்று
ஊரார் இகழ்வர்
ஞானமான தகப்பன் ஆலோசனை தருணத்தே தப்பினால்.
எக்காரியமும் பிசகும்
பெற்றனுபவமும், கற்றஞானமும் நற்குருவிநின்றி
நாம்பயிலேல்.
விட்டுக்கொடுக்க,
தட்டிக்கொடுக்க சீரான
சினேகிதன் கண்டடையான்
உடுக்கை இழந்தவன் கைப்போல்..
கண்ணியமான காதலியின்றி
கவுரமேது ஆடவனிற்கு சமூகத்தே அடுத்தபடிக்கு!
நல்மனையாள் அமையாதின்றி
தன்னை நிரூபிக்க தோதேயில்லை
எப்புருசருக்கும்!
மொத்ததில்..
என்யாதுமாகி நின்றாய் நீ எனக்குள் நானாக.!
வரிகள்: ஸ்ரீ ஆரோன்