சனி, 30 அக்டோபர், 2021

முட்டாட்களின் உலகமிது !

பச்சிளம் குழந்தைகட்கு சாதியின் 

பெயர் சொருகி கூடவே..

பாடசாலையின் நுழைவுப் பத்திரத்திலும்

சாதி__என்று நிரப்பிவிட்டு.! 

"சாதிகள் இல்லையடி பாப்பா"என்று கற்பிக்கும் 

முட்டாட்களின்  உலகமிது !

<<>>

பெற்றோர்தம் குழந்தைகள் புலனெட்ட

புறம்பேசி, அறங்கோணி

கொடுவார்த்தைகளில் கேடுபுணர,

அந்தகாரத்தின் நடையேறுகளை 

நாணமின்றி சரளம் புழங்கி,

மறந்தேனும் எவர்க்குமீணாது..

தன்பிள்ளையை ஒழுக்கசீலனாய் காணவெண்ணும்

முட்டாட்களின்  உலகமிது !

<<>>

நீ யார்க்கும் நற்றுணை ஈணாய்- ஆனால்

உன் பட்சத்தில் நல் ஈவு வேண்டும்.

நீ யாரையும் தேற்றிடாய்;

உனக்கு உற்றசுற்றம் வசமேக வேண்டும் .

நீதிநியாயம் நீயறியாய்- இருந்தும்

உனை அநியாயம் ஏகிட ஒப்பிலாய்- அய்யகோ..

முட்டாட்களின்  உலகமிது !

<<>>

எச்சில்க்கை நீண்டு நீ காக்கை விரசாய்- ஆனால்

உன்கை வானம்பார்க்க மறுகணம் நிரம்பிடனும்.

உன் துவாரக்குடம் பொற்சமானம்

பிறன் பொன்னது தெருக்களியாகிடுமோ.?

காக்கை உன்குஞ்சு பொன்னென்றால்

அன்னத்தின் குஞ்சென்ன அழுக்கா- அட

முட்டாட்களின்  உலகமிது !

<<>>

சீவனோடு இருக்கும் காலமெல்லாம்

வார்த்தைக்காச்சும் சுகங்கேளாதவன்- நீ

பச்சைத்தண்ணீர் தானும் உறவுகட்கு பருக்கத்தராதவன்- நீ

இன்னான் செத்த பின்பு எதற்கு பெரும் படையலும்

பூப்பாடையும், ஓலமிட்டு முதலைக் கண்ணீரும் சொரிகிறாய்.?

முட்டாட்களின்  உலகமிது !

<<>>

ஓடியோடி உழைத்து, உண்ணாது உறங்காது

உத்தமமாய்ப் படிக்கவைத்த பிள்ளைகளை

கண்டவரின் கால்பிடித்து தூரதேசம் அனுப்பிவைத்து

சாவையும்.. வாழ்வையும்.. தொலைபேசியில் அனுபவித்து

காகிதக்காசைக் கட்டிப்பிடித்து நீயுறங்கி;

ஊரெல்லாம் வாய்கிழிய பெருமைபேசி என்னப்பயன்

உன்சாவுக்கு வராத உறவால்?

முட்டாட்களின்  உலகமிது !

<<>>

அழுகையின் குரல் நான்.!

(இந்த ஓவியம் 2001ல் எனது கைவண்ணத்தில் வரையப்பட்டது)

அழுகையின் குரல் நான்
அழக்காரணம்  இன்னதென்றறியாத
அழுகையின் குரல் நான்..
கற்றோர் பலர் சொன்னார்
பட்டம் பெற்றால் சீருற
எதிர்காலம் கிட்டுமென்று - ஆனால்
கிணற்றுத் தவளையாய் நானாகி
ஐந்து வருசங்கள் அனாமத்தாய் கழி(த்/ந்)துதான் மிச்சம்.
          ***

அழுகையின் குரல் நான்
அழக்காரணம்  இன்னதென்றறியாத
அழுகையின் குரல் நான்..
கல்விக் கடன்தனை
அரசு தள்ளுபடியில் மூச்செடுத்து
பட்டதாரிச் சான்றிதள் காவிநிறமுமாச்சு;
நேர்முக்கப் பரிட்சைகள் அத்தனையும்
மறைமுகமாய் கனிகிறது இங்கு- நான்
''காலத்தில் விளையாத நிலமும் தரிசுதான்''
என்று கற்ப்பித்ததும் இந்தக் கல்விதானே?!
          ***

அழுகையின் குரல் நான்
அழக்காரணம்  இன்னதென்றறியாத
அழுகையின் குரல் நான்..
பெற்றோர் உற்றார் யாருமிவர்
எத்தொழில் நற்றுறச் செய்கினும் அதுபுகினும்
நற்சீவியந்தனை என்றுபாரார்- மாறாய்
நாம் கையிடும் அங்கெலாம் "கற்றதற்கேற்ப தொழில்
கிட்டிட நீ கொடுத்து வைக்காதவனென்பர்"
சாபமாயங்கே வையகத்தில்!
          ***

அழுகையின் குரல் நான்
அழக்காரணம்  இன்னதென்றறியாத
அழுகையின் குரல் நான்..
எக்காரியத்திலும் எனை முன்னிறுத்த 
துணிவயர்ந்து உப்பிற்கு சப்பாய்
ஆலோசனை அடுக்குவர்..
வயதிற்கும் விவேகத்திற்கும் ஒட்டில்லை -என்று
பலமுறை வாதாடத் துணிவேன்
இருந்து தோல்விகளின் துறவறத்தில் 
சபையேறாது என்சத்தியம் என்றறிந்து
மனதிற்குள் தலைகுனிவேன்.
          ***

அழுகையின் குரல் நான்
அழக்காரணம்  இன்னதென்றறியாத
அழுகையின் குரல் நான்..
தட்டுத்தடுமாறி ஏதோவொரு
தொழிலிலூன்றி சீராய் ஊதியங்கிட்டி
முப்பது கடக்கும்போது.. 
அயல்வீட்டுச் சாடைக்காரி, பாடசாலை காதல்
கல்லுரிச் சல்லாபம், முறைப்பொண்ணு..
என்றெதுவுமே கிடப்பிலிராது !!
தைரியத்தை தொண்டையேற்றி இதுகான்
தாயிடம் பேசுகையில்- மறுமொழி
அதற்க்கென்ன அவசரம் தங்கை கரைசேராமல்.
          ***

அழுகையின் குரல் நான்
அழக்காரணம்  இன்னதென்றறியாத
அழுகையின் குரல் நான்..
அப்படி இப்படியாய் மணநாள் அரங்கேறி- என்
விளக்கேற்ற வந்தவரவிற்கும்- என்
தாய்க்கும் முட்டிக்கொள்ளும் அவ்வப்போது
'அரிசிக் கஜானாவில் எலிகள் புகுந்ததருணம்
போடியாரின் முகபாவனை' எனக்கு- அன்று
உண்டி சுருங்கி கொட்டாவியது கொறட்டையோடே உறவு
கூட.. இராமுழுக்க மனையாளின் புறுபுறுப்பும் அழுதகண்ணீரும்
சாமக்கோழி கூவும்வரை தொடரும்..
          ***

அழுகையின் குரல் நான்
அழக்காரணம்  இன்னதென்றறியாத
அழுகையின் குரல் நான்..
தந்தை இழப்பு, தாயினிழப்பு
நண்பரிழப்பு, சகோதரரிழப்பு-என்று
பார்த்தகணம் உள்ளாரத்தைக்கும் இதயம்
''என்னடா வாழ்க்கை இதுவென்று" இருந்தும்
மனசது முதிற்சியில் தன்னைத்தான் தேற்றிக்கொள்ளும்
'நாளை எனக்கும்' என்று நிஜாமொன்றை சொல்லி.
          ***

அழுகையின் குரல் நான்
அழக்காரணம்  இன்னதென்றறியாத
அழுகையின் குரல் நான்..
பெற்றபிள்ளை தாயிடம் என்னைச்
சாடைபேசும் என் காதுகேட்க..
ஏதோகாரியம் இனி நான் செய்ய/செய்யாமலிருக்க !
கேட்டும் கேளாமல் நகர்வேன்..
அன்றுமுதல் அதை ஒப்பேற்றியபடி- இன்னும்
என் மனைவி ஒரு முழுநேர வேலைக்காரியின்
தோரணையோடோ சீவிப்பாள் பேர/பிள்ளைக்காக- இறுதிவரை
ஒட்டியிருந்தது குற்றப்பட்டே ஆயுசு நகரும் இருவருக்கும்- ஆக
அழுகையின் குரல் நான்
அழக்காரணம்  இன்னதென்றறியாத
அழுகையின் குரல் நான்..

_வரிகள் ஸ்ரீ ஆரோன்_

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...