வெள்ளி, 28 மே, 2021

(கண்)நீர் துளிகள்..

வரிகள் ஸ்ரீ ஆரோன்

நீர் துளிகள் எப்பொழுதும்

பூமியதன் வரப்பிரசவம் - அது 

தன்னில் பற்றியுள்ள

சகல சீவன்களுக்குமான தாய்நிலை.! 

_வரிகள் ஸ்ரீ ஆரோன் _



 

புதன், 26 மே, 2021

பாரந்தான்..

மழலையது பாரந்தான் 
மாற்றாந்தாயிடம்
மண்டியிட..

இளமையாது பாரந்தான் 
வறுமைதனில்
வளரும்போது..

கல்வியது பாரந்தான் 
மனசில் சஞ்சல-மது
ஒட்டிக்கொள்ள..

காதலது பாரந்தான் 
கணக் கொண்ணா
கற்பனைதனில் அமிழ்ந்திருக்க..

மதமதும் பாரந்தான்
நெறிமுறையற்ற
ஜீவியத்தில் முற்பட.. 

உறவுகள் பாரந்தான்  
வாய் வார்த்தைகள்
தடுமாறினால்..

குடும்பவுறவு பாரந்தான் 
ஒழுக்கசீரன்பு
ஊடலில்லாதுபோக..

எத்தொழிலும் பாரந்தான் 
பொறுமையும், விசுவாமும்
தூரமானால்..

ஊணுடலும் பாரந்தான்  
உன் பழக்கவழக்கங்கள்
தேகத்தை பாழாக்க..

வாழ்க்கையது பாரந்தான்    
சிரஞ்சீவிய வழிகள் 
தடம் மாறினால்..

_வரிகள்: ஸ்ரீ ஆரோன்_

கோபம்.!


ஐம்புலன் வழிநுழைந்து
இருதயத்தின் ஓரம்
உருவாகும் ஒரு கீற்று
முளைக்கு இடம்மாறி
தனை உணரவைத்து.!
ன்னை ; என்னை உருமாற்றும்
(டு)தியின் பெயர்தான் கோபம்.

_வரிகள்: ஸ்ரீ ஆரோன்_

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...