என்னுசிரை நெருடியபடி,
நெஞ்சிற்கு நெருக்கமாயோடி,
இருதயத்தின் மூலெந்திரத்தில் மின்சாரம்மிக,
எரிமலையின் புகயீற்றில் லாவாதான் மக்னாவாய் அவதரிக்க
ஆக்ரோசக் கொப்பளிப்பின் தருணத்தே
எதிரொலிக்கும் போரொலிப்பின் கணமாய்
எனக்குள்ளே படபடப்பு.!
*
மூடிய மொட்டிநின்று நறுவாசமொன்று
நுவர்தந்தி மூளையை
எட்டியும் எட்டாததுமாய் சேருமுன்,
அதைக் கண்கள் பொறுப்பேற்று
இமைக்க மறந்து அவதியில்
எங்கெங்கென்று தேடுதற்கேற்போல்
கொன்றை பூக்கும் நறுவாசமென்பர்.!
*
அதுகாண்..
எனக்குள் ஏதோ உணருவதை
என்வரிகளில் கொணர ஒண்ணாது
நான் தவிக்கும் தருணங்கள் ஒவ்வொன்றும்
வரமே - அது 'அப்பா' எனும் ஒற்றைக் கூப்பிடுகை
அவனிடமிருந்து - அவன்தான்
என்பின் நான் மீந்துவைக்கும் ஒரேசுவடு.!
*
“அப்..ப்பா..!?”
கொஞ்சம் பொறுங்கள் வாசகரே !
இதோ வருகிறேன்,
என் பேரழகே.. நயோனி அப்பா வருகிறேன்..
***
வரிகள்: ஸ்ரீஆரோன்