திங்கள், 19 பிப்ரவரி, 2024

அப்பா

என்னுசிரை நெருடியபடி,

நெஞ்சிற்கு நெருக்கமாயோடி,

இருதயத்தின் மூலெந்திரத்தில் மின்சாரம்மிக,

எரிமலையின் புகயீற்றில் லாவாதான் மக்னாவாய் அவதரிக்க

ஆக்ரோசக் கொப்பளிப்பின் தருணத்தே 

எதிரொலிக்கும் போரொலிப்பின் கணமாய் 

எனக்குள்ளே படபடப்பு.!

*

மூடிய மொட்டிநின்று நறுவாசமொன்று

நுவர்தந்தி மூளையை

எட்டியும் எட்டாததுமாய் சேருமுன்,

அதைக் கண்கள் பொறுப்பேற்று 

இமைக்க மறந்து அவதியில்

எங்கெங்கென்று தேடுதற்கேற்போல்

கொன்றை பூக்கும் நறுவாசமென்பர்.!

*

அதுகாண்..

எனக்குள் ஏதோ உணருவதை

என்வரிகளில் கொணர ஒண்ணாது 

நான் தவிக்கும் தருணங்கள் ஒவ்வொன்றும் 

வரமே - அது 'அப்பா' எனும் ஒற்றைக் கூப்பிடுகை

அவனிடமிருந்து - அவன்தான்

என்பின் நான் மீந்துவைக்கும் ஒரேசுவடு.!

*

“அப்..ப்பா..!?” 

கொஞ்சம் பொறுங்கள் வாசகரே !

இதோ வருகிறேன்,

என் பேரழகே.. நயோனி அப்பா வருகிறேன்..

***

வரிகள்: ஸ்ரீஆரோன்



பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...