நல்லாட்சி
~~~~~~~~~~~~~~~~~~~~
ஆசியாவில் நிறைவளத்தின்
ஆச்சரிய ஈழமுத்து!
தேசியத்தில் பிரிவினையோர்
தேசப்பிதா முடிசூடியே.!
பாசிசர்தாம் தம்பெயரில்
பதுக்கியதை மீட்டிடவே!
சோசியலி சத்திருந்தே
சோரமிகாத் தலைவனின்று!
~~~~~~~***~~~~~~~~
வரிகள்: சிறி அருணன்
பொது இலக்கணம்
*********************
★ நான்கடி கொண்டதாய்,
★ நான்கடிகளும் காய்ச்சீராய்
★ நான்கடிகளும் ஒரே எதுகையைக்
பெற்று,
★ அடிதோறும் பொழிப்பு மோனை
பெற்று,
★முதற்சீரைத் தவிர மற்றசீர்கள் நிரையசையால் தொடங்குவதாய் (புளிமாங்காய்,கருவிளங்காய்)
வருவது "தரவு கொச்சகக்
கலிப்பா " எனப்படும்.
*கோர்ப்பு: பாவலர் மா.வரதராசன்*