சுழல்கள் எனை சூழ்ந்தபோது
அடைக்கலமாம் செட்டைகளால் மூடிக்காத்தீர்;
நான் அந்தகாரத்தில் நடந்தபோது
மேக, அக்கினிஸ்தம்பமாயிருந்தீர்..
*
தனிமையில் நான் அமர்ந்தபோது
என் தேற்றவாளராய் நீர் வந்தீர்;
நான் தண்ணீரை கடக்கும்போதும்
என் கால்களை வழுவாது காத்தீர்..
*
சஞ்சலத்தில் நானிருக்க
வார்த்தைகளால் வழிகாட்டி - நான்
அறியாததும் எட்டாததுமான
காரியங்களை நடப்பித்தீர்..
*
கண்ணிகளில் சிக்குண்டு - நான்
கூப்பிடும் போதெலாம் - எனக்கு
செவிகொடுத்து நெருக்கத்தினின்று
விசாலத்தை உண்டாக்கினீர்..
*
"அவனை மேற்கொண்டேன்" என்று
என் சத்துருக்கள் சொன்னபோதெலாம்
கண்ணீரை துருத்தியிலே அளந்து
தாறுமாறானோரை இடலறடையபண்ணினீர்..
*
எனக்கெதிரான பராக்கிரமசாலிகளையும்
நீர் அடித்துப்போட்டு நான் நடக்கவேண்டிய வழிகளை
எனக்கு போதித்தீது, என்னை தள்ளாடவெட்டீர்
துக்கித்த நான் உம்மில் களிகூர்ந்தேன்..
*
உமது கண்ணை என்மீதுவைத்து
ஆலோசனை சொல்கின்றீர், உலகமே எனை
கைவிட்டாலும் உமது இரக்கம் எப்போதும்
தாங்கும் நான் கைவிடப் படுவதில்லை..
*
பாவியான் மீதும் நீர் கிருபை கொண்டீர்
என் மகா அரனும் , கோட்டையுமானவர் நீதானே;
நீர் செய்த உபகாரங்களை போற்ற
ஜீவனுள்ள நாளெல்லாம் சொஸ்த்தரிப்பேன்..
*
என் பாவங்களை மன்னித்த உமக்கு
சாட்சிசொல்ல ஆத்துமகாலங்கள் போதாதப்பா..
என் பெலவீனத்தில் நீரே பெலனானவர்;
எனக்குள் நீராக நான் பூரணமானேன்..
*
எனக்காக இரத்தம் சிந்திய பேறானவரே
என் செடியானவர் நீர், உமக்குள் நான் கொடியானேன்;
பிணியாளி எனை மீட்ட பரமபரிகாரியே
நீரே என் நித்திய வெளிச்சமானவர்;
*
விண்ணப்பத்தை கேட்டு, எனக்காய் யுத்தஞ்செய்து
சிறியவனும், எளியவனுமாய் புழுதியில் இருந்த எனை
வற்றாத நீரூற்றாவும், செழித்த லீபனோபனின்
கேதுருவாய் மாற்றி ,பெரிய காரியங்களை செய்தீர்..
*
பூமியை அஸ்திபாரித்து, பூச்சக்கரத்தை கோர்த்து
உமக்குள் பெலனாய் திடமானதாய் இருந்தோரை
நீர் மகிமையின் சிங்காசனத்தை சுதந்தரிக்க செய்தீர்
என் பிரயாசத்தையும் விருதாவாய் நீர் விடவில்லை..
*
புழுதியினின்று எனை உயர்த்தி - நான்
கையிட்டு செய்த காரியங்களை ஆசீர்வதித்து;
உச்சிதமான கொதுமை, கன்மலையின் தேனினால் போசித்து
என் கூடையையும், மாப்பிசையும் தொட்டியையும் நிரப்பியவரே..
*
தலைகுனிந்து இடத்திலேயே எனை நிமிரச் செய்து,
பிரபுக்களின் மத்தியில் எனக்காய் ஒரு பந்தியை ஏற்படுத்தி;
நீர் முன்குறித்த ஆசீர்வாத அடையாளத்தை தந்து
என்னை முத்திரை மோதிரமாக மாற்றினீர்..
*
நீர் நொறுங்கின எலும்புகள் களிகூரும்வண்ணம்
ஆகாதென்று தள்ளிய கல்லெனை தலைக்கல் ஆக்கினீர்:
எனை லீலிபுஸ்பத்தை போல் மலரச்செய்து
நீர் செய்ய நினைத்தது தடைப்படவிலய ன அறிந்துளேன்.
*
வரிகள் ஸ்ரீ ஆரோன்