வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

இன்றில் நானில்லை.!?



நாளை..
நான் காற்றிலா கிரகத்திலும்
வாழத்தகுதியாய் உணர்கிறேன்.!!

இதன் நிஜம்..
இன்றுங்கூட - நான்
இன்றில் வாழவில்லை..!

உன்னோடு..
இன்பமாயிருந்த
நேற்றில்தான் ஜீவிக்கிறேன்
என் ஜீவனானவளே.. 

காத்திருந்து.. காத்திருந்து..



பெண்களின் 
வார்த்தை ஜாலத்தில் 
அவ்வளவாய் 
நம்பிக்கை இல்லாதவன் நான்.. இருந்தபோதும் 
உனது அழைப்பிற்காய் மாத்திரம்.. காத்திருந்து.. காத்திருந்து.. 
அவ்வப்போது காய்ந்து 
சருகாகியும் தீர்கிறேன்.!


சுகம் விசாரணைக் கைதி.!

என்னை 
காதலிபவர்களில் 
எவரையும் ஏற்றுக்கொள்ள 
என் மனசுக்குத் தகுதியில்லை.. நான் 
காதலிப்பவளிற்கு 
என் காதலை புரிந்து கொள்ள 
முழுதாய் திராணியுமில்லை.. ஆக.. அனுதாபத்தின் மீதியில் அவளின் 
'சுகம் விசாரணைக் கைதியாய்' 
அவளையே நெசித்து 
வாழுகிறேன்.!


கண்மணி.!


நீ எனை 
முழுதாய் காதலிக்கவில்லை 
என்று சொல்லாமல் 
சொல்லியும்..

உன் காதலை 
தொலைத்திடாமல் 
தொடர்கிறது இந்தத்- 
துன்பியல் இதயம்..

உனக்கு.. 
என்பாலானது
விடுகதையானாலும்.

எனக்கு.. 
உன்மீது கொண்டது 
தொடர் கதைதான் 
ஆகுமடி கண்மணி...

குறைப்பிரசவக் காதல்..

என்
உடலில்
அவ்வப்போது உழலும்
மரணவலிதனை விடவும்..
உன் குறைப்பிரசவக் காதலை
தினந்தினம் உணர்வதால்
வாட்டும் உயிர் வலியை
தாங்கத் திடம் கேட்டே
தேவனை பிரார்த்திக்கிறேன்.!

நியாயந்தானடி அழகே.!


உன்
காதல் வார்த்தைகளிற்கான 
என் மனதின் ஏக்கங்கள்
ஏராளம் புலம்பிக்கிடக்க..
உன்னிடம்
என்மீதான அன்பில்
பஞ்சம் அதுதானும்
எல்லை கடந்திருக்க..
வாஸ்தவமான
உன் நாவறட்சிக்கு
காரணம் நிட்சயமாய்
நியாயந்தானடி
அழகே.!

உன் காதல்க் கணக்கை தீர்த்தாயோ.?

உன்னை
அளவுகடந்து
நேசிப்பவன் நான்..
அதுபோல்
என்னையும் நேசிக்க மரணமாச்சும்
முன்வந்ததை அறிந்து
அகமகிழ்ச்சி..
ஆனாலும்..
என்னுயிரை
பட்டயம் பெற்ற
உன்னை பிரிந்து
இன்னும் உயிருடன் வாழ்கிறேன்
என்பது பேரதிர்ச்சி..
அட..நீ..
வலியதற்கு எனை
குத்தகைக் கிரையம் செய்து
முடிவு நாளில்..
மரணமதுதனிற்கு
அடிமையாய் கொடுத்து
உன் காதல்க் கணக்கை தீர்த்தாயோ.?

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...