நேரத்தில் ஒளிந்துகொள்ளுகிற மனுசன்
காலத்தை வசப்படுத்துவதில்லை
கடமையை மறந்து - அவன்
கடமைக்காக என்று வாழ்ந்து_தான் (விட்டுப்)போகிறான்
தோற்றுப்போன நினைவுகளை.!
ஆக..
இங்கு வாழ்க்கை என்(ண்)பது(ம்) வலிதே.
பணம், பதவி, கவுரவமோ தேட;
பெயர், புகழ், விளம்பரமும் வேண்ட;
மண், பொன், சிற்றின்பம் புணர;
எண்ணிங்கு கொடுப்பதும், எடுப்பதுவுங்கூட
கணக்குமிகுதி ஒப்பாது !
அது..
சரீரத்தே இருதயமும்..
பூரண சுகமேக தான்வாழும் காலமெல்லாம் பிறதைக்குறித்து ஏங்காது,
பிறனைக்குத்தி ஏய்க்காது - எப்போதும்
“இதுவும் கடந்து போகும்” என்றாகும்
எளிதான சமாதானமே சீவியத்தே வெற்றி.
***
வரிகள் சிறி ஆரோன்