வெள்ளி, 26 ஏப்ரல், 2024

இதுவும் கடந்து போகும்..



நேரத்தில் ஒளிந்துகொள்ளுகிற மனுசன் 

காலத்தை வசப்படுத்துவதில்லை

கடமையை மறந்து - அவன்

கடமைக்காக என்று வாழ்ந்து_தான் (விட்டுப்)போகிறான் 

தோற்றுப்போன நினைவுகளை.!


ஆக..

இங்கு வாழ்க்கை என்(ண்)பது(ம்) வலிதே.

பணம், பதவி, கவுரவமோ தேட;

பெயர், புகழ், விளம்பரமும் வேண்ட;

மண், பொன், சிற்றின்பம் புணர;

எண்ணிங்கு கொடுப்பதும், எடுப்பதுவுங்கூட 

கணக்குமிகுதி ஒப்பாது !


அது..

சரீரத்தே இருதயமும்..

பூரண சுகமேக தான்வாழும் காலமெல்லாம் பிறதைக்குறித்து ஏங்காது,

பிறனைக்குத்தி ஏய்க்காது - எப்போதும்

“இதுவும் கடந்து போகும்” என்றாகும் 

எளிதான சமாதானமே சீவியத்தே வெற்றி. 

***

வரிகள் சிறி ஆரோன்

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...