வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024

கார்மேகம் கறுதிருச்சு காலநேரம் கனிஞ்சிருச்சி..


கண்ணுக்கெட்டிய தூரம்வரை

விடியலின் பக்குவமில்ல,

ஒருக்கால் விடிந்தாலும் என்னசெய்து 

என்னகாண த(ரிசு)னிச்சீவியத்தில்

தனிக்கட்டையாய் என்றிருந்தேன்.!

*

கணபதியின் மகன் கனடாபோனால் போகட்டும் 

என்றிராது எனது இளையவனை இங்கிலாத்து அனுப்பி; மூத்தவளையும் முன்வீட்டு பெருமைமீற ஒருநோஞ்சானை கைபிடிச்சு நோர்வேக்கு அனுப்பிவைத்தேன்.

*

நடுப்பிள்ளைதான் உருப்படாமல் போச்சுதென்று ஊரார் பேசக்கேட்டு சிங்கபூரில் படிக்கவைத்தேன், மூன்றே வருசத்தில் முடிவுசொன்னான் “

அங்குவந்து என்னசெய்ய சீனச்சியை நேசிக்கிறேன்” என்று.! 

*

என் மனையாள் ஆயிரம்சொன்னாள் 

கேக்கலயே நான், கிளிப்பிள்ளைக்கு போல பழமொழியும் “ஏங்க ஊர்பேச்சு உருவமில்லா பிசாசுபோல அதை வீட்டுக்குள் அண்டாதீங்க” அன்றவளை மடச்சியென்றும், ஊதியங்கேளா ஊழியச்சியென்றும் தரந்தாழ்த்தி திட்டினேன்.!

*

நேற்று உச்சிமுகர்ந்த ஊர்வாய்தான் 

இன்றும் புறம்பேசுகிறது “

பேராசக்காரனிவன் பெருமைக்கு 

பிள்ளைகளை கப்பலேத்திவிட்டு, 

ஒத்தையா பெண்சாதிக்கு கொள்ளிவச்சிட்டு

திரியிறதப்பாரு!” 

*

நேற்றோரு கடதாசி வந்தது மகளிடமிருந்து “அப்பா, நாக்குல பல்லப்போட்டு 

நாலுவிதமாப் பேசுற அந்த நாலுபேர கட்டியழாம உங்கபேரப்பிள்ளைகளின் அன்புகாண இங்கயே வந்துருங்க, அடுத்தமாதம் எல்லோரும் சிலோன்வாறம்” ஆக என்..

கார்மேகம் கறுதிருச்சு காலநேரம் கனிஞ்சிருச்சி..

***

வரிகள்: ஸ்ரீ ஆரோன்

15-08-2024

ஈழத்து வளர்ந்துவரும் எழுதாளர் கழகத்தின் 5வது காதல் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...