செவ்வாய், 1 மே, 2018

போராளி.!

போராளி என்றொருவன்
இங்கு பிறப்பதில்லை
அவன் காலத்தின் கட்டாயத்தில்
தன்மொழி ; தன்னிலம்
தன்னினம்; தன்னுரியை
தன்மரியாதை எனும்
ஏதேனுமின் மீட்பிற்காய்
உருவாக்கப்படுகிறான்..

அவனது இறப்பு
சர்ச்சையாவோ;  கருணையற்றதாவோ
இருப்பிரும்-அவன்
வென்றான், தோற்றான்
ஏதுவாகி போயினும் - அவனை
வரலாறுதான்
நாயகனாகவே ஜெனிப்பிக்கிறது
இன்றும்.. நேற்றும்.. நிச்சயம் நாளையும் !

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...