வெள்ளி, 1 செப்டம்பர், 2017

❤ காதல் ❤


















மனிதத்தின்
முதல் புரட்சியின்
பெயர்தான் ''காதல்'' 
இது குருதி சிந்தாது
மனிதன் தன்னை பிறநிட்க்குள்
உணரும் புனிதமான முயற்ச்சி..

ஆதாமும் எவாழும்
உலகஜீவன்களை பிரசவிக்க - இந்த
அணுவால் உருப்பெறாத
மகாஅண்டப்  பிரவாக
வார்த்தைதான் ஆதாரம்

இது உறவுகளில்
உருவமில்லா உயிருணர்வு
வார்த்தைகள் சொல்லாத
பொருளத்தனையும்
இதுதரும் வலியின் வீரியம்
சொல்லிவிடும்

இது ஆத்மார்த்தமான
அன்பின் இனொரு நாமம்
ஐம்புலங்களற்றும் ஆத்மாவை 
ஒரு பிண்டத்திட்க்குள்
அடக்கிவைக்கும் மந்திரச்சொல்

ஐயும்பூதங்களையும் அடக்கி
மந்திர மாந்திரீக - மெய்ஞ்ஞானம்
எந்திர தந்திர - விஞ்ஞானமில்லாது
எந்தவொரு ஜீவனும்
அண்ட சராசரங்களையும்
அமானுஸ்ய சஞ்சாரங்களையும்
தாண்டிப் பயணிக்க எத்தனிக்கும்
ஒரேயொரு பரம வார்த்தை
இதுவொன்றுதான் இங்கு.!

எதிர்ப்பாலிரண்டு  கண்ணியமாய்
ஒன்றுகூடும் இயற்கயின்
ஈடிணையற்ற வரம் - இது
ஜீவன் உடலிட்க்குள்
இருந்தும் - இறந்தும் பரம்பரிக்கும்
நாமிட்ட சுவடுகளை - நாளை
வரலாற்றுக் காவியமென்று.!
                                                                                                   
 ❤❤❤
வரிகள் 

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

காதல் புரட்சியாளன் நான் !



அழகிய ''லெனின்கிராட்'' நீயானபோது
ஆரோன் -ஸ்டாலின்தான் நானங்கே,
நாஸிவேசத்தார் மாண்டொழியும் வரை..
காலனாவேன் கால் மாக்சின் சோசலிசம் பூண்டு.
***

என் பெண்மணியேனுன் உரிமைகள்
யாரேனும் பறித்திட்டால்
இருபத்தியோராம் நூற்றாண்டின்
சி/சீனம் கொண்ட சிலாகியன்
மாவோ  சேதுங்காவேன்   செங்குருதி தோய்ந்து.
***

உன் சுயமரியாதையும், சுதந்திரத்திரமும்
பறிபோகுமிடத்து பார்கோனானாலும்
பணிந்திடாது வேடம் பிரசவிப்பேன்
வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகி
என் இனியவளிட்கு ஈழம் கேட்டு.
***

சந்தன வனமான உன்தேகம் சுருங்கிட்டாலும்
அதையும் தழுவியே ஜீவித்திடுவேன்
எனக்கான எத்தனை ஜென்மமோ-அத்தனையும்
சத்திய மங்கல தமிழ்ச் சாணக்கியன் வீரப்பன்போல்
***

உன் கருங்கூந்தலிட்குள் நரைவிழுந்தால்
வயதானதென்று சமரசமாய்டேன் நெஞ்சோரம்
கருச்செம்மல் நெல்சன் மண்டேலாவாய்
காலமெலாம் போராடுவேன் கரு-மை கையேந்தி.
***


நீயென்  மணாட்டியாய் இருந்தபோதும் 
உனைப்  ''பெண்சாதி'' என்று
வார்த்தையிலும் சாபம் பூணாத 
அம்பேத்காரின் சாதி, தீண்டாமையின்
கருத்துளர்  கண்ணியவான் நான் 
***

என் தாத்தன் கம்பக்கவி 
தமிழ் வார்த்தை ஜாலங்களில் 
எவர்க்கும் ஒப்பாத பேராற்றலின்
மகாபிரளயக்காரன் ஆயினும் 
''சீதையெனும்'' பாத்திரத்தை
அப்படியாய் படுத்தியதால் அப்பப்போது 
எங்களுக்குள் கருத்துப்பிரளயம் கூடும் 
அதுவும் உனக்காகவே தானடி .!
***

என் (இல்)லத்தின் பூமியானவளே
உனக்கான என் பட்டயம் பறிபோனால்
சேகுவேரா தோழர் வீரமேந்தி
வல்லாதிக்கம் வெல்லோண்ணாதிருப்பினும்...
உயிர் பிரியும் இறுதிக்கணமும்
உன்மடியதுதான் தஞ்சமாவேன்.!

***

ஸ்ரீ ஆரோன்



பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...