
மனிதத்தின்
பெயர்தான் ''காதல்''
இது குருதி சிந்தாது
மனிதன் தன்னை பிறநிட்க்குள்
உணரும் புனிதமான முயற்ச்சி..
❤
ஆதாமும் எவாழும்
அணுவால் உருப்பெறாத
மகாஅண்டப் பிரவாக
வார்த்தைதான் ஆதாரம்
❤
இது உறவுகளில்
உருவமில்லா உயிருணர்வு
வார்த்தைகள் சொல்லாத
பொருளத்தனையும்
இதுதரும் வலியின் வீரியம்
சொல்லிவிடும்
❤
இது ஆத்மார்த்தமான
அன்பின் இனொரு நாமம்
ஐம்புலங்களற்றும் ஆத்மாவை
ஒரு பிண்டத்திட்க்குள்
அடக்கிவைக்கும் மந்திரச்சொல்
❤
ஐயும்பூதங்களையும் அடக்கி
மந்திர மாந்திரீக - மெய்ஞ்ஞானம்
எந்திர தந்திர - விஞ்ஞானமில்லாது
எந்தவொரு ஜீவனும்
அண்ட சராசரங்களையும்
அமானுஸ்ய சஞ்சாரங்களையும்
தாண்டிப் பயணிக்க எத்தனிக்கும்
ஒரேயொரு பரம வார்த்தை
இதுவொன்றுதான் இங்கு.!
❤
ஒன்றுகூடும் இயற்கயின்
ஈடிணையற்ற வரம் - இது
ஜீவன் உடலிட்க்குள்
இருந்தும் - இறந்தும் பரம்பரிக்கும்
நாமிட்ட சுவடுகளை - நாளை
வரலாற்றுக் காவியமென்று.!
❤❤❤