அழகிய ''லெனின்கிராட்'' நீயானபோது
ஆரோன் -ஸ்டாலின்தான் நானங்கே,
நாஸிவேசத்தார் மாண்டொழியும் வரை..
காலனாவேன் கால் மாக்சின் சோசலிசம் பூண்டு.
***
என் பெண்மணியேனுன் உரிமைகள்
யாரேனும் பறித்திட்டால்
இருபத்தியோராம் நூற்றாண்டின்
சி/சீனம் கொண்ட சிலாகியன்
மாவோ சேதுங்காவேன் செங்குருதி தோய்ந்து.
***
உன் சுயமரியாதையும், சுதந்திரத்திரமும்
பறிபோகுமிடத்து பார்கோனானாலும்
பணிந்திடாது வேடம் பிரசவிப்பேன்
வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகி
என் இனியவளிட்கு ஈழம் கேட்டு.
***
சந்தன வனமான உன்தேகம் சுருங்கிட்டாலும்
அதையும் தழுவியே ஜீவித்திடுவேன்
எனக்கான எத்தனை ஜென்மமோ-அத்தனையும்
சத்திய மங்கல தமிழ்ச் சாணக்கியன் வீரப்பன்போல்
***
உன் கருங்கூந்தலிட்குள் நரைவிழுந்தால்
வயதானதென்று சமரசமாய்டேன் நெஞ்சோரம்
கருச்செம்மல் நெல்சன் மண்டேலாவாய்
காலமெலாம் போராடுவேன் கரு-மை கையேந்தி.
***
நீயென் மணாட்டியாய் இருந்தபோதும்
உனைப் ''பெண்சாதி'' என்று
வார்த்தையிலும் சாபம் பூணாத
அம்பேத்காரின் சாதி, தீண்டாமையின்
கருத்துளர் கண்ணியவான் நான்
***
என் தாத்தன் கம்பக்கவி
தமிழ் வார்த்தை ஜாலங்களில்
எவர்க்கும் ஒப்பாத பேராற்றலின்
மகாபிரளயக்காரன் ஆயினும்
''சீதையெனும்'' பாத்திரத்தை
அப்படியாய் படுத்தியதால் அப்பப்போது
எங்களுக்குள் கருத்துப்பிரளயம் கூடும்
அதுவும் உனக்காகவே தானடி .!
***
என் (இல்)லத்தின் பூமியானவளே
உனக்கான என் பட்டயம் பறிபோனால்
சேகுவேரா தோழர் வீரமேந்தி
வல்லாதிக்கம் வெல்லோண்ணாதிருப்பினும்...
உயிர் பிரியும் இறுதிக்கணமும்
உன்மடியதுதான் தஞ்சமாவேன்.!
***
ஸ்ரீ ஆரோன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக