செவ்வாய், 27 செப்டம்பர், 2022

வியர்வை மகுடம்

என் மகுடத்த்தின்
அத்தனை முத்துக்களும் 
நான் சிந்திய வியர்வையின் ஈற்றுருவே.!

வரிகள் ஶ்ரீ ஆரோன்

திங்கள், 26 செப்டம்பர், 2022

என் மைந்தனே…


உன் மழலைப் புன்னகையில்
என்னிதயச் சுவர்களில்
மலர்கிறது பலகோடிப் பாரிஜாதம்

உன் விரல்கள்
காற்றில் மீட்டும் வீணையின் நாண்கள்
என் காதுகளில் அத்தனையும்
நிசப்தஸ்வரங்கள் பேச..

உன் பிஞ்சுக்கால்கள்
விண்ணை நோக்கி உந்தும்-அது
நீ வானிலும் நடக்க பயில்கிறாயோவென்று
பூரிக்கிறேன் என் குமரா !

மாமைந்தனே நீ..
அழுகையிலும் குழைந்து துடிக்கையிலும்
உலகயுத்தத்தின் பேரவலம்
மையங் கொள்கிறது என்னிதயத்தில் ! 

பாலுக்கிரங்கி  என் பாலகன் - நீ..
"இங்கா.. இங்கா.." என்று தவிக்கையிலும்
உனைத் தூக்கி உலாத்தச் சொல்லும்
"உக்கு.. உக்கு.." என்னும் வார்த்தைற்கும் 
இதுமுதல் ன்கராதியில்  பொருழுண்டு !

வரிகள் தந்தை ஶ்ரீ ஆரோன்

மலையானேன்.!


எனை நானே செதுக்கிச்.. செதுக்கிச்
சிலையானேன் - உனை நீ
செதுக்கவேயின்று நான் மலையானேன்.!

வரிகள் தந்தை ஶ்ரீ ஆரோன்

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...