உன் மழலைப் புன்னகையில்
என்னிதயச் சுவர்களில்
மலர்கிறது பலகோடிப் பாரிஜாதம்
உன் விரல்கள்
காற்றில் மீட்டும் வீணையின் நாண்கள்
என் காதுகளில் அத்தனையும்
நிசப்தஸ்வரங்கள் பேச..
உன் பிஞ்சுக்கால்கள்
விண்ணை நோக்கி உந்தும்-அது
நீ வானிலும் நடக்க பயில்கிறாயோவென்று
பூரிக்கிறேன் என் குமரா !
மாமைந்தனே நீ..
அழுகையிலும் குழைந்து துடிக்கையிலும்
உலகயுத்தத்தின் பேரவலம்
மையங் கொள்கிறது என்னிதயமத்தில் !
பாலுக்கிரங்கி என் பாலகன் - நீ..
"இங்கா.. இங்கா.." என்று தவிக்கையிலும்
உனைத் தூக்கி உலாத்தச் சொல்லும்
"உக்கு.. உக்கு.." என்னும் வார்த்தையதற்கும்
இதுமுதல் என்னகராதியில் பொருழுண்டு !
வரிகள் தந்தை ஶ்ரீ ஆரோன்