நான்..
இலைகொட்டிடும் மலட்டுமரமல்ல.!
குளிர்காலதில் தக்கனப்பிளைத்து
இளவேனில்காலத்தில் புதிதுபட
இளையுதிர்காலத்தே முதுமைதனை
ஏற்கத்தயார்படும் மாற்றதின்
ஆரம்பம்.!
*
இங்கு..
பின்முதுகில் நீலவானும்,
தூரத்தே ஒழித்துகொண்ட நிலாமுகமும்;
முன்னே பார்வைக்கு - நான்
கறுத்துருவும், முகட்டில் மொட்டையுமாய்
சம்பிரதாயத்துக்கேனும் நலம்விசாரிக்க மின்கம்பிகளில்தானும் காக்கயைக்கூட காணவில்லையே.!
*
தனியே..
சுகந்தான் உதவியற்ற உறவுகள்மேல்.!!
இருந்தும்,, வனாந்தரம்விட்டு
வித்தாய் வீதிவந்த நான்
வழிப்போக்கர் நிழலேயன்றி - எப்படி
வசந்தகாலத்து சொந்தங்களின்
வாழ்த்துதலிற்காய் அவாவுறுவது.?
*
வீணாய்..
என் கன்றுகள் பிடுங்கப்பட்டனர்,
பூக்கவும், காய்க்கவும் மறந்துபோனேன்
எனக்குள்மக்கிய நகரக்குப்பையாலும்,
நாசமாய்ப்போன நச்சுப்புகைமீந்த
சுவாசத்தாலும், தேகமெலாம் காயத்தழும்புகளும், தீந்தைக்கீறல்களும் அடையாளத்திற்கு - அரசால்.!
ஆனாலும் காத்திருக்கிறேன்
எதிவரும் வீதிவிசாலப்படுதல்வரை.!
***
வரிகள் சிறி ஆரோன்
(அருமையான புகைப்படத்திற்கு நன்றிசகோ.ரஜனி அவர்களே)
