சனி, 9 செப்டம்பர், 2017

உலக பந்தம்.!


பலலட்சம் 
விந்தணுக்களோடு
முட்டைக்குள் கருவாகவுருவாக 
அண்டா, குண்டா, பணம் கொடுக்காது 
சுயேட்சையாகனின்று மந்திரியானேன் !
*
கையடித்து..காலடித்து..
குப்புறவிழுந்து..
நக்குழுவித்.. தவழ்ந்து..
தத்தித்.. தத்தி..  பின் நடந்து..
ஓடியாடி சிறுபராயம் கடத்தி 
தாய், தந்தை, ஆசானின்  
கண்டிப்பும் கடுங்காப்பும் தளர்ந்து
ஒருபாடாய் வாலிபம் எட்டினேன்.! 
*

அங்குமொரு  
நுண்ணுயிராய்க் கூட 
பிறப்பெடுக்காத நூதனமான
உறுநோய் எனக்குள் நுழைந்தது
*
அது  இதயத்தின் உட்புறத்திலொரு  படபடப்பு 
புத்திக்குள் புதியதோர் பேதலிப்பு 
என்  நடையுடை பாவனையில் 
நானறியாத மாற்றங்கள் - என்று
பல்லாயிரம் பக்கவிளைவுகளை பரிசளித்து ! 
 *
ஐந்தாண்டின் முடிவில் 
அரசியல்வாதிப்படும்
அவஸ்த்தை அத்தனையும் 
ஒரேநாளில் கண்டுகொண்டேன் 
அவளை கண்ட அந்த நிமிசம்.!
*
ஆண்டொன்றின் முடிவில் மீண்டேன் 
வள் மனதெனும் புனிதக்கொட்டகையில் 
நான்மட்டுமே உட்கார 
அவஸ்தைகளிட்கு நடுவிலும் 
அவள்மனதில் என்சுயதச்சன் செய்த 
காதல் நாற்காலி
கம்பீரமாய் இருபதுக்கண்டு !
*

அறிவுடையார் ஆவ தறிவார் 
அறிவிலார் அஃதறி கல்லா தவர்
என்னும்பொருள் வள்ளுவதிருமூதா 
வாக்கின்பால் அவளையே கையேகி..
*
காத்திருக்கிறேன் - இன்று
என் தந்தை பனிரெண்டாயிரத்து 
நாற்பத்து ஐந்து நாட்களுக்கு முன் 
என்வரவிற்காய்  வெற்றுக் கையிரெண்டில்
காந்தப்புலமுரசி சூடு கண்டதுபோல் 
நானும் என் வாரிசுக்காய்.! 

வரிகள்: 
ஸ்ரீ   ஆரோன் 

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...