
விந்தணுக்களோடு
முட்டைக்குள் கருவாகவுருவாக
அண்டா, குண்டா, பணம் கொடுக்காது
சுயேட்சையாகனின்று மந்திரியானேன் !
*
கையடித்து..காலடித்து..
குப்புறவிழுந்து..
நக்குழுவித்.. தவழ்ந்து..
தத்தித்.. தத்தி.. பின் நடந்து..
ஓடியாடி சிறுபராயம் கடத்தி
தாய், தந்தை, ஆசானின்
கண்டிப்பும் கடுங்காப்பும் தளர்ந்து
ஒருபாடாய் வாலிபம் எட்டினேன்.!
*
அங்குமொரு
நுண்ணுயிராய்க் கூட
பிறப்பெடுக்காத நூதனமான
உறுநோய் எனக்குள் நுழைந்தது
*
அது இதயத்தின் உட்புறத்திலொரு படபடப்பு
புத்திக்குள் புதியதோர் பேதலிப்பு
என் நடையுடை பாவனையில்
நானறியாத மாற்றங்கள் - என்று
பல்லாயிரம் பக்கவிளைவுகளை பரிசளித்து !
*
ஐந்தாண்டின் முடிவில்
அரசியல்வாதிப்படும்
அவஸ்த்தை அத்தனையும்
ஒரேநாளில் கண்டுகொண்டேன்
அவளை கண்ட அந்த நிமிசம்.!
*
ஆண்டொன்றின் முடிவில் மீண்டேன்
அவள் மனதெனும் புனிதக்கொட்டகையில்
நான்மட்டுமே உட்கார
அவஸ்தைகளிட்கு நடுவிலும்
அவள்மனதில் என்சுயதச்சன் செய்த
காதல் நாற்காலி
கம்பீரமாய் இருபதுக்கண்டு !
*

அறிவுடையார் ஆவ தறிவார்
அறிவிலார் அஃதறி கல்லா தவர்
என்னும்பொருள் வள்ளுவதிருமூதா
வாக்கின்பால் அவளையே கையேகி..
*
காத்திருக்கிறேன் - இன்று
என் தந்தை பனிரெண்டாயிரத்து
நாற்பத்து ஐந்து நாட்களுக்கு முன்
என்வரவிற்காய் வெற்றுக் கையிரெண்டில்
காந்தப்புலமுரசி சூடு கண்டதுபோல்
நானும் என் வாரிசுக்காய்.!
வரிகள்:
ஸ்ரீ ஆரோன்