தமிழுக்கு என்னைத்
தின்னக் கொடுத்தேன்
மிச்சமின்றி எச்சமின்றி!
எத்தனை எத்தனை கருத்தாய்
வெற்று நினைவுகளை உறிஞ்சி
வரிகளாய் வடிக்கிறாள்
இலக்கணமும் இலக்கியமும்
உப்பளவும் என்னில் இல்லை
ஆனாலும் தமிழன்னை ஒதுக்கலயே
என்னைத் தின்று எனக்குள்ளே
செரிக்கிறாள் கவிதைகளை-அவள்
கோர்க்கும் வார்த்தைகள் எனதல்ல
சொன்னா நம்புங்கோ
தமிழுக்காய் வாழவும் வீழவும்
நானுமொருவன் இருக்கிறேன்.
வரிகள்: சிறி அருணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக