சனி, 28 செப்டம்பர், 2024

நானுமொருவன் இருக்கிறேன்




தமிழுக்கு என்னைத்

தின்னக் கொடுத்தேன்

மிச்சமின்றி எச்சமின்றி!


எத்தனை எத்தனை கருத்தாய்

வெற்று நினைவுகளை உறிஞ்சி

வரிகளாய் வடிக்கிறாள்


இலக்கணமும் இலக்கியமும்

உப்பளவும் என்னில் இல்லை

ஆனாலும் தமிழன்னை ஒதுக்கலயே


என்னைத் தின்று எனக்குள்ளே 

செரிக்கிறாள் கவிதைகளை-அவள்

கோர்க்கும் வார்த்தைகள் எனதல்ல 


சொன்னா நம்புங்கோ

தமிழுக்காய் வாழவும் வீழவும்

நானுமொருவன் இருக்கிறேன்.


வரிகள்: சிறி அருணன்

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...