திங்கள், 30 செப்டம்பர், 2024

கைவண்ணத்துக்கு ஒரு கவிதை!



சூம்பிப்போன 

இலங்கைதீவில் செஞ்சுடர் 

நல்லுதயம் மெது மெதுவாய்..

*

இருட்டுக் குகையிலிருந்து

ஒரு கலைஞன் காணும்

ஒளி வெளிப்படும் அழகு!

*

முட்டிக் கால்வரை 

கம்பிகள் தடைதெரியும் 

அது சட்ட இறுக்கங்களின்

நல் உவமையாய்!

*

உச்சியில் கோணிய 

துருப்பிடித்த பழைய கம்பியொன்று

மதவாதக் கொள்கையாய்

கண்டாலும் பறவாயில்லை!

*

பேரொளியது

பொருளாதார வெறுமைச் சமுத்திரம்

ஊழலெனும் மலை முகடுகள்

தாண்டி வந்தடையும் நிச்சயம்

*

நமது தேசத்தின்

உருவம் சீராகும் சீக்கிரமென்று

உறுதியோடு காத்திருப்போம்

உழைப்பவன் வழிசார்ந்து!

***

கவிவரிகள்: சிறி ஆரோன்

நன்றி புகைப்படம் சகோ ரஜினி 

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...