திங்கள், 11 மே, 2020

சாதிகள் இல்லையடி பாப்பா

#சாதிகள் இல்லையடி பாப்பா

சாதிகுரோதமலம்
சிரசிலேந்தி சுமக்கும்
கீளோரவர் - தம் பொருளினின்று
உயரே பாடிலார் வாழ்நாளீறாய்.!

இன்னார்..
தத்தமகத்தே பெரியோராய் காண்கினும்;
மனிதத்தகத்தே பிரம்மகத்தி- எனுங் குறுகுலத்தோரேயாம்.!

இகுதே,
தீண்டானாய் குறுக்குநூலவதாரிகள் செப்பெழுதியுரைக்கும் அம்மாந்தர்
நல்லொழுகு மாண்பு காண்கில்
அவரீர் தெய்வதின்பால் தொழத்தகோரும்;
பூமியாள் சிரசின் முதற்பேறுமாம் கேள்.!

இப்பிணியில் நீண்டுழலும்
மாந்தர்தம் கண்காணா
மறுவாழ்வினும் வலியதாம்
மறுசாகியந்தனை கற்றொழுகச்செப்புவீர்
"சாதிகள் இல்லையடி பாப்பா" என்னுங் கோடிட்டகருவில் - அதுவாகும்
அறம்போல் இன்வாழ்வுலகில்.

👣

_நன்றி உறவுகளே_
✒️வரிகள் ஸ்ரீ ஆரோன்.
www.mytamilpoet.blogspot.com 

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...