#சாதிகள் இல்லையடி பாப்பா
சாதிகுரோதமலம்
சிரசிலேந்தி சுமக்கும்
கீளோரவர் - தம் பொருளினின்று
உயரே பாடிலார் வாழ்நாளீறாய்.!
இன்னார்..
தத்தமகத்தே பெரியோராய் காண்கினும்;
மனிதத்தகத்தே பிரம்மகத்தி- எனுங் குறுகுலத்தோரேயாம்.!
இகுதே,
தீண்டானாய் குறுக்குநூலவதாரிகள் செப்பெழுதியுரைக்கும் அம்மாந்தர்
நல்லொழுகு மாண்பு காண்கில்
அவரீர் தெய்வதின்பால் தொழத்தகோரும்;
பூமியாள் சிரசின் முதற்பேறுமாம் கேள்.!
இப்பிணியில் நீண்டுழலும்
மாந்தர்தம் கண்காணா
மறுவாழ்வினும் வலியதாம்
மறுசாகியந்தனை கற்றொழுகச்செப்புவீர்
"சாதிகள் இல்லையடி பாப்பா" என்னுங் கோடிட்டகருவில் - அதுவாகும்
அறம்போல் இன்வாழ்வுலகில்.
👣
_நன்றி உறவுகளே_✒️வரிகள் ஸ்ரீ ஆரோன்.
www.mytamilpoet.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக