புதன், 20 மே, 2020

அன்பு

அன்பு பழகுங்கள் - அது
மன்னிக்கவும் மறக்கவும்
சொல்லித்தரும்.

அன்பு காட்டுங்கள் - அது
கோபமற்ற பொறுமையின்
சுபாவம் கொணரும்.

அன்பு பேசுங்கள் - அது
கேட்டின் பாலிச்சை சாபம்
ஒழித்துவிடும்.

அன்பு நுகருங்கள் - அது
பிறர்க்கு கொடுக்க உதவும்
கரங்களாகும்.

அன்பு உணருங்கள் - அது
மனதை மகிழ்ச்சியில்
களிகூரும்.

அன்பு எண்ணுங்கள் - அது
வாழ்க்கயை அளவுகடந்து
செழிப்பிக்கும்.

அன்பு படியுங்கள் - அது
குற்றமேயிராது ஞானத்தில்
தெளிவுறும்.

அன்பு புரியுங்கள் - அது
இன, மத, சாதி மொழி வேற்றுமை
அற்ற மனிதனாக்கும்.

அன்பு அறியுங்கள் - அது
பிறரிலும் உன்னைக் காட்டும் - ஆக
உனக்குள்ளும் தெய்வம் வசிக்கும்.

அன்புதான்.. 
சிவனையும்; இயேசுவையும்; நபிகளையும் நமக்கு தெய்வமாய் கண்டது; ஆதலால் அன்பு கூருங்கள் இன்னும் அதிகமாய்.

நன்றி_
#வரிகள் ஸ்ரீ ஆரோன் 
#www.mytamilpoet.blogspot.com 

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...