இச் சமகாலத்தில்..
ஓர் நேர்மையின் அறத்தமிழர்
நிசத் தமிழ்த்தேசிகன் - இவர்
இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாய்
மக்கள்பாதை கண்ட செம்மல்.!
"பாண்டியனின்
நெறிதவறிய மதுரை"
அதுதனில் இவன்வழி
நேர்மையது நின்று வழுவாது - காண
பார் நிமிர்ந்து பார்க்கும் வண்ணம்
பாரதத்தின் பெருமை சூடிய
நற்பேர் கொண்டோன்.!
"லஞ்சம் தவிர்த்து..
நெஞ்சம் நிமிர்த்து" - என்று அரியாசனத்தில் பின்புலத்தே
மட்டுமில்லை; புத்தியின் மத்தியில்
ஆழமாய் புதைத்து தேசத்தின்
மத்தியையும்; மானிலத்தையும்
அசைத்த கொள்கை வேந்தரிவர்..
மக்கள் பழிகொள்ளா நேயன்.!
நேர்மையின் துணை காண..
"தண்ணியில்லா காடு காணவும்
தயங்கேன்" என்றுரைத்து..!!
கடவுளிற்கு மட்டும் அஞ்சித்தன்..
23_வருடப் பணியில் 24 தடவைகள்
பணி மாற்றமும் கண்டு - தன்
புனிதங்காத்த கறைபடாத
கரங்களின் அபூர்வி.!
இவரோர்..
வீரிய தாய்மொழிப் பற்றாளன்;
தாயகம் சுரண்டுவரின் கடுங்கோபி;
தேச நாசிக்களின் எதிர்ப்போராளி;
மரபு விவசாயத்தின் பசுங்காவலன்;
குருதிக் கொடையில் பாரிமைந்தன்;
சட்டதின் ஓட்டைகளில் ஓடவல்ல
சுண்டெலிகள் கஜானாக்களில்
மணியடித்த கண்ணியப் புலிப்பேறு.!
நன்றி_
வரிகள் ஸ்ரீ ஆரோன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக