யார்கடிய; யாரைக்கடிய?
யார்மேல் குற்றம்?
ஓநாய்களும்; ஊழை நரிகளும்
ஆளும் தேசமிதில்!
தொப்பிள்க் கொடியறுந்து
தேசமெங்கும் தாயிப் பெண்டீர்
குருதியால் நிறைகிறது சாபம்
யார்கடிய; யார் குற்றமிது?
ஆற்றாமையால்..
அங்கோர் பச்சிளஞ்சிறுமி
பதை பதைத்து கருகுகிறாள்.!
குரூர பிசாசுதாம் எரியூட்டி - சட்டமிங்கு
பணம் நீட்டுதிங்கு உசிருக்கு ஈடாய்.!
யார்கடிய; யார் குற்றமிது?
காமவக்கிரச் சாத்தான்கள்
சதைப் பிண்டந்தனில்
சலனங் கொண்டு - பாலகன்
என்ற சிந்தையற்று - சினை
சிதைத்துச் சீரழிக்கிறான்.!
யாரைக்கடிய; யார் குற்றமிது?
"குடி குடியைக் கெடுக்கும்" என்ற
வார்த்தைக் கவனம் சொல்லி - வரி
ஞானமற்ற வறுமைச் சுதேசிதமை
வஞ்சித்து வறுகும் எமராசன்கள் - கூடி
தேசத்தை ஏலத்தில் கூவித் - தம்
திருவாயில் ஏப்பமும்; எம்காதில் பூவும்.!
யார்கடிய; யாரைக்கடிய?
விபிலியம் சொல்லும்
கி.மு_வில் இஸ்ரவேலரின்
"கானான் தேசம் தேடிய பயணம்"
இன்று.. கண்முன்னே மீழுகிறது.!
இந்திய தேசமதில் ஆயிரமாயிரம்
மைல்கள் சொந்ததேசம் காண நடை..
யாரைக் கடிய ; யார் குற்றமிது?
குற்றம் கடிந்தென்ன பயனிங்கு?
"துப்பினால் துடைத்துக் கொள்வேன்"
என்று பெருமை பேசும்
மாந்தரெலாம் தர்பாரில் இயல்பாய்
அரசியல் கொண்டாட - நாம்
யாரைக்கடிய; யார்மேல் குற்றம்?
ஓநாய்களும்; ஊழை நரிகளும்
ஆளும் தேசமிதில்!
கண்ணீருடன் நன்றி_
வரிகள் ஸ்ரீ ஆரோன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக