வியாழன், 21 மே, 2020

நீ யாராக இருக்கிறாய்?

"தானுண்டு தன்வீடு உண்டு" - என்று
சீவிப்பவன் ஆறறிவுற்ற விலங்கு; மாற்றானை தானாகக் கருதி கைக்கெட்டிய உதவி செய்து வாழ்பவன் மனிதன்.
                           ⭕
தாயை, தகப்பனை மதிப்பவன் உற்றபிள்ளை - மாறாக
அவமதிப்பவன் கேட்டின்பிள்ளை.
                           ⭕
தாய்மொழி பேசியதை கவுரவமாய் காண்பவன் உணர்வாளன்; தாய்மொழி தூற்றி, பிறமொழி போற்றுபவன் மதியிழந்த பிதற்றாளன்.
                           ⭕
தேசத்தை மதித்து..
அதுதன் சுரண்டலின் எதிர்விசைகாட்டி
தேச வளர்ச்சிக்கு போராடுகிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன் - மாறாய்
தேசத்தை அவதூறுபேசி..
குறை காண்பவன் பொல்லாங்கன்.
                          ⭕
தேசத்து ஜனங்கள்
தன் சொந்தங்கள், அவர் நலனுக்கு உழைப்பவன் ஜீவிக்கும் மகான் - எதிராய்
மக்களை குறைகூறி வஞ்சிப்பவன் சாபத்தின் பிதிர்.
                         ⭕
தன் ஜனங்களென்று..
ஒற்றுபட வழிநடத்துபவன்
கீர்த்தியின் தலைவன் - இலாது
பிரிவினை கூட்டி சுயலாபம் ஈட்டுபவன் சாத்தானியகூலி.
                        ⭕
இப்பொழுது.. 
உன் இருதயத்தைகேள்;
நீ யாராக இருக்கிறாய்?
தயவாய்..
ஒரு மனிதனாகவாவது
வாழ முடிவெடு!!
                    ⭕⭕⭕
நன்றி_
வரிகள் ஸ்ரீ ஆரோன் 

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...