"தானுண்டு தன்வீடு உண்டு" - என்று
சீவிப்பவன் ஆறறிவுற்ற விலங்கு; மாற்றானை தானாகக் கருதி கைக்கெட்டிய உதவி செய்து வாழ்பவன் மனிதன்.
⭕
தாயை, தகப்பனை மதிப்பவன் உற்றபிள்ளை - மாறாக
அவமதிப்பவன் கேட்டின்பிள்ளை.
⭕
தாய்மொழி பேசியதை கவுரவமாய் காண்பவன் உணர்வாளன்; தாய்மொழி தூற்றி, பிறமொழி போற்றுபவன் மதியிழந்த பிதற்றாளன்.
⭕
தேசத்தை மதித்து..
அதுதன் சுரண்டலின் எதிர்விசைகாட்டி
தேச வளர்ச்சிக்கு போராடுகிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன் - மாறாய்
தேசத்தை அவதூறுபேசி..
குறை காண்பவன் பொல்லாங்கன்.
⭕
தேசத்து ஜனங்கள்
தன் சொந்தங்கள், அவர் நலனுக்கு உழைப்பவன் ஜீவிக்கும் மகான் - எதிராய்
மக்களை குறைகூறி வஞ்சிப்பவன் சாபத்தின் பிதிர்.
⭕
தன் ஜனங்களென்று..
ஒற்றுபட வழிநடத்துபவன்
கீர்த்தியின் தலைவன் - இலாது
பிரிவினை கூட்டி சுயலாபம் ஈட்டுபவன் சாத்தானியகூலி.
⭕
இப்பொழுது..
உன் இருதயத்தைகேள்;
நீ யாராக இருக்கிறாய்?
தயவாய்..
ஒரு மனிதனாகவாவது
வாழ முடிவெடு!!
⭕⭕⭕
நன்றி_
வரிகள் ஸ்ரீ ஆரோன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக