திருவள்ளுவர் சமயம் எது?
✴️இதை அவரின் திருக்குறள் கொண்டு யாரும் அறிவது கடினமாக காரணம், திருக்குறள் ஒரு உலகப் பொதுமறை!
✴️"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்!" என்று தமிழகத்தில் வாழ்ந்த ஆரியர்களின் நால்வருணம் பற்றிய தீண்டாமை சாதியத்தை வள்ளுவர் அன்றே முற்றிலும் புறம் தள்ளினார் என்பது வெளிப்படை.
✴️'அந்தணன்' என்ற சொல்லை ஆரியர்கள் 'பிராமணன்' என்று அருத்தம் சொல்ல; காலத்தில் வாழ்ந்த திருவள்ளுவர், 'அந்தணன்' என்ற தகுதி பிறப்பால் வருவதல்ல அவனது கல்வியால், ஞானத்தால் வருவது என்றார்; 'அந்தணன் என்போன் அறவோன்! மற்றெல்லா உயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான்' என்று குறளை இயற்றினார்.
✴️அதனால்தான் திருவள்ளுவரை எந்த மதமாகவும் வரையறை செய்யாது 1964ஆம் ஆண்டில் உருவம் கொடுக்கப்பட்டது #கே.ஆர். வேணுகோபால் சர்மா அவர்களால் வரையப்பெற்ற படத்தையே தமிழக அரசு திருவள்ளுவரின் அதிகாரபூர்வ ஓவியமாக அங்கீகரித்து.
✴️இவர் 17.12.1908 இல் சேலம் மாவட்டத்தில் பிறந்த தமிழர் அத்தோடு இவர்தான் #தமிழ்த்தாய் என்னும் கற்பனைக்கு உருவத்தை வரைந்தவராவார்.
✴️1964 ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதியன்று தமிழக சட்டமன்றத்தில், அப்போதைய குடியரசு துணைத்தலைவரான திரு. ஜாஹிர் ஹுசேன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
நன்றி_
#அகிலவுலக தமிழர் மையம்
#தொகுப்பு ஸ்ரீ ஆரோன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக